districts

img

சூலூரில் மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் - 100க்கும் மேற்பட்டோர் கைது

சூலூரில் மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை என கூறியும், வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை என்றும் மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 12 ஆம் தேதி முதல் 3 நாட்கள் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்திருந்தனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சூலூர்  திருச்சி சாலையில் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திரண்டனர். பின்னர் ஊர்வலமாக வந்து கலங்கல் சாலை சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். திருச்சி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனை அடுத்து மறியலில் ஈடுபட முயன்ற 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் மறியல் போராட்டம் காரணமாக திருச்சி சாலையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.