districts

img

மோடி அரசை கண்டித்து மறியல்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

திருப்பூர், செப். 12 – விலைவாசி உயர்வு, அதிகரிக்கும் வேலையின்மை, சிறு,  குறு, நடுத்தரத் தொழில்கள் கடும் பாதிப்பு, பொதுத் துறையை  தனியாருக்கு விற்பது உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் கொள் கைகளைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திருப் பூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர். திருப்பூர் மாநகர் கலைஞர் பேருந்து நிலையம் பகுதியில்  இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊர்வலமாக காட் டன் மார்க்கெட் அஞ்சல் நிலையம் நோக்கி புறப்பட்டபோது காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போராட் டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் எம். ரவி தலைமை  வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், ஏஐடி யூசி மாவட்ட பொதுச் செயலாளர் பி.ஆர்.நடராஜன், 267 பெண் கள் உட்பட 392 பேர் கைது செய்யப்பட்டனர். தாராபுரத்தில் நடந்த போராட்டத்துக்கு திருப்பூர் எம்.பி.சுப்பராயன் தலை மையில் 405 பேர் கைது செய்யப்பட்டனர். திருமுருகன்பூண் டியில் புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் எம்.மோகன்  தலைமையில் 382 பேர் கைது செய்யப்பட்டனர். பல்லடத்தில்  புறநகர் மாவட்ட துணைச்செயலாளர் ரவி தலைமையில் மறிய லில் ஈடுபட்ட 81 பேர் கைது செய்யப்பட்டனர்.