தலித் இளைஞரை கோவிலுக்குள் அனுமதிக்காமல், தாக்கி வெளியேற்றப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய திருமலைகிரி ஊராட்சியில், பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் சென்று மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் ஆறுதல் தெரிவித்து, உண்மை விபரங்களை கேட்டறிந்தனர். இதில், சிபிஎம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, பொன்.ரமணி, எம்.குணசேகரன், ஐ.ஞானசௌந்தரி, வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன்குமார், தாலுகா செயலாளர் கே.எஸ்.பழனிசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆர்.குழந்தைவேல் ஆகியோர் பங்கேற்றனர்.