districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

தனியார்மயத்திற்கு ஆணையர் வக்காலத்து

சேலம், ஆக.23- சேலம் மாநகராட்சி  கூட்டத்தில் தூய்மைப் பணிகள்  தனியாருக்கு விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கவுன்சிலர்  பேசிய போது, மாநகராட்சி  ஆணையர் தனியார்மயத்திற்கு ஆதரவாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேலம் மாநகராட்சி மன்ற இயல்புக் கூட்டம் செவ்வா யன்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மேயா் ஆ. ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆணையா் சீ.பாலச் சந்தர், துணை மேயா் சாரதாதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனர். இதில், 22-ஆவது வாா்டு உறுப்பினா் செல்வராஜ் பேசு கையில், மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் கலந்தாய்வு மூலம் தூய்மைப் பணியாளா்கள் 10 பேரை நிய மித்துள்ளனர். குப்பை அள்ளுவதை தனியார் நிறுவ னத்துக்கு வழங்கப்பட்டுள்ள பணிகள் என்ன என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்றார். இதற்கு மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர் கூறுகை யில், குப்பை சேகரிக்கும் நிறுவனத்துக்கு டன் ஒன்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை வழங்கி வருகிறோம். அதே வேளையில் குப்பைகளை குறைக்கவும் நடவடிக்கை எடுத்து  வருகிறோம். நாளொன்றுக்கு 550 டன் குப்பைகள் சேகரமா கின்றன. குப்பைகள் குறையும் போது தனியார் நிறுவனத் துக்கு செலுத்தும் பணமும் குறையும்/ தமிழகத்தில் உள்ள  20 மாநகராட்சியில், 18 மாநகராட்சியில் தூய்மைப் பணி  தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது அரசின் கொள்கை  முடிவு இதனை ஒன்றும் செய்ய முடியாது என்றார்.

புதிய தார்ச்சாலைகளுக்கு ஒப்புதல்

தருமபுரி, ஆக.23- தருமபுரி நகர்மன்றக் கூட்டத்தில் புதிய தார்ச்சாலைகள் அமைப்பது உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப் பட்டது. தருமபுரி நகர்மன்ற அவசரக் கூட்டம் நகர்மன்ற அலுவலக  வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் செவ்வா யன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர்  லட்சுமி மாது தலைமை வகித்தார். நகர்மன்ற துணைத்  தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். ஆணை யர் புவனேஸ்வரன் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பேசினார். இக்கூட்டத்தில், தருமபுரி மக்களவை உறுப்பினர் தொகுதி  மேம்பாட்டு நிதியிலிருந்து 6 இடங்களில் ரூ.52 லட்சத்து 20  ஆயிரம் மதிப்பில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைப்பது,  நகராட்சிப் பகுதியில் உள்ள பல்வேறு வார்டுகளில் ரூ.52  லட்சம் மதிப்பில் புதிய தார்ச்சாலைகள் மற்றும் கான்கிரீட் சாலைகள் அமைப்பது உள்ளிட்ட ரூ.1 கோடியே 4 லட்சத்து  20 ஆயிரம் மதிப்பில் திட்டப் பணிகள் மேற்கொள்ள ஒப்புதல்  அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், தருமபுரி எஸ்.வி. சாலையில் உள்ள நகராட்சிப் பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியரின் பயன் பாட்டுக்காக, கட்டப்பட்டுள்ள கழிப்பறையை உடனடியாகப் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும். நகரின் பல்வேறு பகுதி களில் உள்ள கழிவுநீர்க் கால்வாய்களை தூர்வார வேண்டும்.  ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர்மன்ற உறுப்பி னர்கள் வலியுறுத்தினர். கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி, உதவி  பொறியாளர் நாகராஜ், சுகாதார அலுவலர் ராஜரத்தினம், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பூத்துக் குலுங்கும் கள்ளி மலர்கள்

சேலம், ஆக.23- வறண்ட நிலங்களில் வளரும் கள்ளி மலர் வகையை சேர்ந்த ‘பிரம்ம கமலம்’ செடிகளில் ஆண் டுக்கு ஒருமுறை பூக்கும் வெண்ணிற மலர்களாகும். இந்த பிரம்ம கமலம் மலர்களைப் போலவே, வாழப்பாடி பகுதி கிராமங் களில் தரிசு நிலங்களில் காணப்படும் கள்ளிச் செடி களிலும் ஆண்டுக்கு ஒரு முறை வெண்ணிறத்தில் மிக அழகாக தோற்றமளிக்கும் கள்ளி மலர்கள் பூத்து வரு கின்றன. கள்ளிச் செடிகள் அதிகளவில் பூத்தால், மழை யும் அதிகளவில் பெய்யு மென இப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது.

வளர்ச்சி திட்ட பணிகள் - சட்டபேரவை பொதுக்குழு ஆய்வு

தருமபுரி, ஆக.23 - தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மற்றும் பொது கணக்குக் குழுத் தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி நகராட்சி, சந்தை பேட்டையில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டுமானப்பணிகளை பொது கணக்குக் குழுவினர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.  மேலும், தருமபுரி நகராட்சி, உழவர் சந்தை அருகில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய நிர்வாக அலுவலகம் மற்றும் கொள்முதல் உள்ளிட்ட அலுவலக கட்டடம் கட்டுமான பணிகளை பொது கணக்குக் குழுவினர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் தரமானதாக செய்து முடிக்கவேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது கணக்குக் குழுத் தலைவர்  கு. செல்வபெருந்தகை   அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். முன்னதாக, காரிமங்கலம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.  இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது கணக்குக் குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திருச்செங்கோடு ஈஸ்வரன், பரமத்திவேலூர் சேகர், திருப்போரூர் பாலாஜி, ஆகியோரும் கலந்து கொண்டனர்.  தருமபுரி  சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், தருமபுரி ஆவின் பொது மேலாளர் மாலதி, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் டி.கே.கீதாராணி, தருமபுரி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து துறை தலைமை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

ஆளுநரை கண்டித்து மக்களே போராட்டம் நடத்துவார்கள்: முத்தரசன்

ஈரோடு, ஆக.23- தமிழக அரசுக்கு எதிராக அரசியல் செய் யும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழக மக்களே வீதியில் இறங்கி போராட் டத்தில் ஈடுபடுவார்கள் என சிபிஐ மாநிலச்  செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். ஈரோட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், செய்தி யாளர்களிடம் பேசுகையில், ஒரு பீப்பாய் எண்ணெய் 112 டாலராக இருந்தபோது உள்ள  விலையே தற்போதும் நீடிக்கிறது. ரஷ்யா –  உக்ரைன் போர் சூழலில் கூட, ஒரு பீப்பாய்  77 டாலருக்கு கிடைக்கிறது. ஆனால் பெட் ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. இதனால்தான், நாளுக்கு நாள் விலைவாசி உயர்கிறது. பிரதமர் மோடி எப்போதும், ஊழல், குடும்ப அரசியல் என்பதையே, 10 ஆண்டாக  பேசி வருகிறார். அவர் செய்த திட்டம் பற்றி  பேச இயலாதவராக உள்ளார். சிஏஜி வெளியிட்ட தகவலின்படி, ஒன்றிய  மோடி அரசு பல கோடி ரூபாய் மதிப்பில்  ஊழல் செய்துள்ளது. இதை கண்டித்து செப். 12ல் அனைத்து மாவட்டத் தலைநகரிலும், 13, 14ல் நகர, ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம்  செய்கிறோம். ஆளுநர் ரவி, தமிழக அரசுக்கு எதிராக அரசியல் செய்கிறார். டி.என்.பி.எஸ்.சி.,  தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் நியம னத்தை திரும்ப அனுப்புகிறார். டி.என்.பி. எஸ்.சி.,யில் தலைவர் நியமிக்கப்பட்டால் தான், தகுதியான நபர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பை பெறுவார்கள். இவரைப்பற்றி, ஜனாதிபதியிடம் தமிழக எம்.பி.,க்கள் புகார் மனு வழங்கியும், எந்த நடவடிக்கையும் இல்லை. ஆளுநரை கண் டித்து பல கட்சிகள் போராட்டம் நடத்தி வரு கின்றனர். விரைவில் மக்களே போராட்டம் நடத்துவார்கள். கர்நாடகா மாநிலம், அணை நிரம்பும் போது தமிழகத்துக்கு தண்ணீரை திறந்து வடிகாலாக மட்டும் பயன்படுத்தாமல், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் தெரிவித்தபடி ஒவ்வொரு மாதமும் உரிய நீரை வழங்க வேண்டும். வறட்சி காலத்தில் எவ்வாறு தண்ணீர் வழங்க வேண்டும் என வழி காட்டி  உள்ளதோ, அதன்படி தண்ணீர் வழங்க முன் வர வேண்டும் என்றார்.  இந்த பேட்டியின்போது, சட்டமன்ற உறுப் பினர் மாரிமுத்து, முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர் பெரியசாமி, மாவட்டச் செய லாளர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந் தனர்.

தீரன் சின்னமலை மகளிர் கல்லூரி தொடக்கம்

திருப்பூர், ஆக. 23 – திருப்பூர் அருகே வஞ்சிபாளையத்தில் கொங்கு வேளா ளர் அறக்கட்டளை மூலம் தீரன் சின்னமலை மகளிர் கலை  அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. கொங்கு வேளாளர் அறக்கட்டளை மூலம் திருப்பூர் அங் கேரிபாளையம் சாலையில் கொங்கு வேளாளர் மெட்ரிகுலே ஷன் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு நான் காயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர். தற்போது இந்த அறக்கட்டளையின் கல்விப்பணி யில் மற்றுமொரு மைல் கல்லாக, அவிநாசியில் இருந்து மங்க லம் செல்லும் சாலையில் வஞ்சிபாளையத்தில் மகளிர் கல் லூரி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் பி.காம்., பி.காம் (சிஏ), பிபிஏ, பிஎஸ்சி  (சிடிஎப்), பிஎஸ்சி சிஎஸ் (ஏஐ) ஆகிய பாடப்பிரிவுகள் ஏற்ப டுத்தப்பட்டுள்ளன. இக்கல்லூரியில் மாணவியர் சேர்க்கை புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளது. இக்கல்லூரி குறித்து கொங்கு வேளாளர் அறக்கட்டளை  தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி கூறியிருப்பதாவது: நன் கொடை இல்லாமல் இக்கல்லூரி செயல்படும். அனைத்து பகு திகளுக்கும் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. அனுப வம்மிக்க பேராசிரியர்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், முற்றி லும் இயற்கைச் சூழலில் கலை, இலக்கியம், விளையாட்டு ஊக்குவிக்கப்படும், நூறு சதவிகிதம் வேலைவாய்ப்பு கிடைக் க்கும் என்று கூறியுள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை கள ஆய்வு ரேசன் கடை விற்பனையாளர்கள் கோரிக்கை 

திருப்பூர், ஆக. 23 – கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பணியில் நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் கள ஆய்வுப் பணிக்கு நிய மனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் பொருட்கள் விநியோ கம் செய்வது பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே விற்ப னையாளர்களை களப்பணிக்கு அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். என சிஐடியு கூட்டுறவுப் பணியாளர் சங்கம் கோரி யுள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பணியில் கள ஆய்வு செய் யும் விசாரணை அலுவலர்களாக நியாயவிலைக் கடை விற்ப னையாளர்களை நியமனம் செய்து வட்டாட்சியர் மூலம் உத்த ரவு வழங்கப்பட்டு உள்ளது. செவ்வாயன்று நடைபெற்ற முகா மில் தினமும் 50 குடும்ப அட்டைக்கு மிகாமல் தொடர்ந்து 10  நாட்கள் கள ஆய்வு செய்து பணியை முடிக்கவும் அறிவுறுத் தப்பட்டு உள்ளது. கடையில் தற்போதுதான் மண்ணெண் ணெய் மற்றும் பாமாயில் வரப்பெற்றுள்ளது. பொருட்கள்  விநியோகம் செய்ய வேண்டியுள்ளதால் விற்பனையாளர் களுக்கு வழங்கப்பட்டுள்ள கள ஆய்வுப் பணியைத் தவிர்க்க  வேண்டும் என்று சிஐடியு திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியா ளர் சங்கத் தலைவர் ப.கௌதமன் கேட்டுக் கொண்டுள் ளார்.

பேருந்தில் இருந்து கீழே குதித்த மாணவன் படுகாயம்

அவிநாசி, ஆக.23- அவிநாசி அருகே நிற்காமல் சென்ற அரசு பேருந்தில் இருந்து கீழே குதித்த பள்ளி மாணவன் படுகாயமடைந்தார். குன்னத்தூர் அருகே அணைப்பதி பகுதியை சேர்ந்தவர்  பிரியா மகன் விஷ்ணு(10) . குன்னத்தூரில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். செவ்வாய் கிழமை மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும் பொழுது குன்னத் தூர் பேருந்து நிலையத்தில் அணைப்பதி வழியாக செல்லும்  பேருந்துக்கு பதிலாக ஆதியூர் வழியாக செல்லும் வழித்  தட எண்10 ல் சிறுவன் மாறி ஏறியுள்ளார். பேருந்து வேறு தடத் தில் செல்வதை கண்ட சிறுவன் இறங்குவதற்காக பேருந்தை  நிறுத்தும்படி நடத்துநரிடம் பலமுறை கூறியும் பேருந்தை நிறுத்தாமல் சென்றதால் சிறுவன் பேருந்தில் இருந்து குதித் துள்ளார். இதில் பலத்த காயமடைந்த பள்ளி மாணவன் படுகா மடைந்து வலியால் துடித்துக் கொண்டிருந்துள்ளார். அவரை  பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை யில் அனுமதித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த குன்னத் தூர் போலீஸார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்  பள்ளி மாணவனிடம் விசாரணை மேற்கொண்டு, வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இலவச தையல் இயந்திரம்

திருப்பூர், ஆக. 23 - சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச  தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் ஆண்டுதோ றும் சமூகநலத் துறையின் மூலம் கணவனால் கைவிடப்பட் டவர், விதவை மற்றும் ஏழை ஆகியோருக்கு இலவச தையல்  இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. 2023-24ம் ஆண்டிற்கான  இலவச தையல் இயந்திரம் பெற விரும்புவோர், குடும்ப  ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமலும், 20 வயது முதல்  40 வயதிற்குள் இருக்க வேண்டும் (பள்ளிச்சான்று அல்லது  வயது சான்று), 6 மாதத்திற்கு குறையாத தையல் பயிற்சி  சான்று, சாதிச்சான்று, விதவைச்சான்று, கணவனால் கைவிடப் பட்டவர் சான்று, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல்  மற்றும் பயனாளியின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய  ஆவணங்களுடன்  தகுதியான நபர்கள் அருகில் உள்ள அரசு  இ-சேவை மையங்களை அணுகி விண்ணப்பம் செய்து பயன்  பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் கூறியுள் ளார்.

கைவிடப்பட்ட குழந்தை தத்துவள மையத்தில் ஒப்படைப்பு

திருப்பூர், ஆக.23 - திருப்பூரில் கைவிடப்பட்ட குழந்தை திண்டுக்கல்லில் உள்ள தத்துவள மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவம னையில் கைவிடப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று  வந்த ஆண் குழந்தையை  பாதுகாப்பு மற்றும் பரா மரிப்பு கருதி, திண்டுக்கல்  மாவட்டம், காந்திகிராமம் தத்துவள மையத்தில் ஒப்ப டைக்கப்பட்டது என திருப் பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவ லர் ரியாஸ் அகமது பாசா தெரிவித்து உள்ளார்.

ஐடிஐகளில் சேர அழைப்பு

திருப்பூர், ஆக. 23 - திருப்பூர் ஐடிஐ முதல்வர் பிரபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மே 24ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப் பட்டு வருகின்றன. 8ஆம் வகுப்பு தேர்ச்சி, 10, 12ஆம் வகுப்பு,  கல்லூரி மாணவ, மாணவிகள் பல்வேறு பொறியியல், மேம் பட்ட தொழில் நுட்பபடிப்புகளான இன்டஸ்ட்ரீ 4.0 மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி  பெறலாம். டாடா டெக்னாலஜிஸ் மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து  தமிழ்நாட்டில் உள்ள 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை  ரூ.2877.43 கோடி செலவீட்டில் உலகத்தரம் வாய்ந்த இன் டஸ்ட்ரீ 4.0 தரத்திலான தொழில்நுட்ப மையங்களை உரு வாக்கியுள்ளன. ஆண் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உத வித்தொகை ரூ.750/- மற்றும் தகுதி வாய்ந்த பெண் பயிற்சியா ளர்களுக்கு புதுமைப்பெண்திட்டத்துடன் இணைந்து  மாதாந்திர உதவித்தொகை ரூ.1750/- வழங்கப்படும். மேலும்  பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு தொழில்பயிற்சி மற் றும் ரூ.15ஆயிரம் முதல் ரூ.20ஆயிரம்வரை சம்பளத்துடன்  முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற் பாடு செய்து தரப்படும். விருப்பமுள்ள மாணவ, மாணவிகள்  இந்த அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் குறிப்பிட்ட  சில தொழிற்பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு நேரடி  சேர்க்கை நடைபெற்று வருவதால், தொழிற்பயிற்சி நிலையங் களில் அமைக்கப்பட்டுள்ள “சேர்க்கை உதவி மையத்தில்”  நேரடி சேர்க்கைக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.  மேலும் விவரங்களுக்கு 0421-2429201, 04258-230307 மற்றும்  04252-22334 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

கஞ்சா விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது

திருப்பூர், ஆக. 23 – திருப்பூரில் கஞ்சா விற்பனை தொடர்புடைய பல்வேறு  வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள அழகர்சாமி என்பவ ரை குண்டர் சட்டத்தில் ஓராண்டு காலம் சிறையில் அடைக்க  மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட் டுள்ளார். மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த  அழகர்சாமி (53) தற்போது திருப்பூர் சாமுண்டிபுரம் வளை யங்காடு பகுதியில் வசித்து வந்தார். அவர் மீது தெற்கு காவல்  நிலையம், அனுப்பர்பாளையம் காவல் நிலையம், சென்னை  பூந்தமல்லி காவல் நிலையம் ஆகியவற்றில் கஞ்சா விற்பனை  தொடர்பான வழக்குகள் உள்ளன. எனவே பொது அமைதிக்கு  குந்தகம் விளைவிப்பதாக அவரை குண்டர் தடுப்புச் சட்டத் தின் கீழ் சிறை வைக்க செவ்வாயன்று மாநகர காவல் ஆணை யர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டார்.

ஆகஸ்ட் 31 விவசாயிகள்  குறை தீர்க்கும் நாள் கூட்டம்

திருப்பூர், ஆக.23- திருப்பூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவ சாயிகள் குறை தீர்க்கும் நாள்  கூட்டம் வருகிற 25 ஆம் தேதி   வெள்ளிக்கிழமை நடைபெ றும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்க ளால் 31 ஆம் தேதிக்கு ஒத்தி  வைக்கப்பட்டுள்ளது. ஆகவே அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து விவசாயிகளும் 31 ஆம் தேதி காலை 10  மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாக அறை எண் 240ல் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத் தில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஆக. 23 – திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திராவிட மாணவர் கழகம் மற்றும் தி.க இளை ஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாராபுரம் அண்ணா சிலை அருகே மாநில இளைஞரணி  துணைச் செயலாளர் முனிஸ்வரன் தலைமையில் இந்த கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் ஒவ் வொரு ஆண்டும் ‘நீட்’ தேர்வால் மன உளைச்சலுக்கு ஆளாகி  மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. ‘நீட்’ தேர்வினால் தனியார் பயிற்சி மையங்கள் அதிகரித்துள்ளன. பணம் படைத்தவர்கள் மட் டுமே ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறக்கூடிய சூழ்நிலை தற்போது  உருவாகியுள்ளது. ஏழை, எளிய மக்களின் மருத்துவ கனவு  கனவாகவே இருக்கிறது. எனவே ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய  வேண்டும். இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு எதிரான  கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் அனைத்து  கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கோட்டாட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

உதகை, ஆக.23- ஊழியர் விரோதப்போக்கை கடைபிடிக்கும் உதகை கோட்டாட்சியரை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விடுமுறை தினத்தில் பணிக்கு வரச்சொல்லி கட்டாயப் படுத்துவது, கூடுதல் நேரம் பணிபுரிய சொல்லி வற்புறுத்து வது போன்று உதகை கோட்டாட்சியர் வருவாய்த்துறை ஊழி யர்களிடம் விரோத போக்கை கடைபிடித்து வருகிறார். இத னால் ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி வரு கின்றனர். எனவே, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். இதில் அரசு ஊழியர் சங்க செயலாளர் அய்யனார், கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட நிர்வாகி தீபக், கிராம உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் அப்துல் மஜீத் உட்பட பலர் பங்கேற்றனர்.

கடனை திருப்பி செலுத்த முடியாமல் மனவேதனை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

சேலம், ஆக.23- சேலம் மத்திய சட்டக்கல்லூரி அருகே உள்ள இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன் (85). இவர் பெங்களூரில் விமான நிலையத்தில் வேலை பார்த்து ஓய்வுபெற்று சேலத் தில் வசித்து வந்தார். இவரின் முதல் மனைவி, ஏற்கனவே இறந்துவிட்டார். இரண்டாவது மனைவி வசந்தா (56) மற்றும் 2  ஆவது மகன் திலக் (38), மருமகள் மகேஸ்வரி (35), பேரன் சாய் கிரிஷ் சாந்த் (6) ஆகியோர் வசித்து வந்தனர். திலக் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். திலக் நிறுவனம் தொடங்குவதற்காக ஆன்லைன் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி உள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாத தால் கடந்த 2 மாதகாலமாக மன அழுத்ததில் இருந்ததாக கூறப் படுகிறது. இந்நிலையில், செவ்வாயன்று திலக் மனைவி மகேஸ்வரி, மகன் கிரிஷ்சாந்த் மற்றும் தந்தை சிவராமன் விஷம் குடித்தும், மகன் தீபக் தூக்கிலிட்டும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சிவராமனின் மனைவி வசந்தா புதனன்று காலை கதவை திறந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்து அலறியுள்ளார். இதனையடுத்து அருகாமையில் உள்ளோர் சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அங்கு வந்த போலீசார் நான்கு சடலங்க ளையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாயை வேட்டையாடிய சிறுத்தையால் அச்சம்

உதகை, ஆக. 23- நீலகிரி மாவட்டம், உத கையில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகை, ரோஸ்  மவுண்ட், சர்ச்ஹில் போன்ற பகுதிகளில் கடந்த ஆறு மாத காலமாக சிறுத்தை நட மாடி வருகிறது. இரவு நேரங் களில் குடியிருப்பு பகுதிக் குள் நுழைந்து நாய்களை வேட்டையாடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில், உதகை மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகே உள்ள செட்டி நாட்டு ஹவுஸ் நிறுவனத் திற்கு சொந்தமான தங்கும்  விடுதியில் வளர்க்கப்பட்டு வரும் நாயை சிறுத்தை வேட் டையாடி சென்றது. இந்த  காட்சி அங்கு பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு கேம ராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைராலாகி வருகிறது.