districts

img

தமுஎகச சார்பில் சென்னையில் செப்.2 சனாதன ஒழிப்பு மாநாடு

செங்கல்பட்டு, ஆக.27- சென்னையில் தமுஎகச சார் பில் நடைபெறவிருக்கும் சனாதான ஒழிப்பு மாநாட்டில் ஏற்றப்பட இருக் கும், தாத்தா இரட்டைமலை சீனிவா சன் நினைவு ஜோதி பயணம் அவ ரது நினைவிடத்தில் இருந்து தொடங் கியது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் சார் பில் செப்.2 ஆம் தேதியன்று சனா தன ஒழிப்பு மாநாடு சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங் கில் நடைபெற உள்ளது. இம்மாநாட் டில் இந்தியா முழுவதிலும் இருந்து எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறி ஞர்கள், வெகுமக்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளனர். இம்மா நாட்டில் ஏற்றப்பட இருக்கும் சனா தன ஒழிப்பு போராளியும், சமத்துவ போராளியுமான தாத்தா இரட்டை மலை சீனிவாசன் நினைவு ஜோதி  பயண துவக்க விழா, அவர் வாழ்ந்த செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப் பாக்கம் ஒன்றியம், கோழியாலம் கிராமத்தில் உள்ள நினைவிடத் தில் நடைபெற்றது. தமுஎகச மாவட் டத் தலைவர் இ.சங்கரதாஸ் தலை மையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாவட்டச் செயலாளர் க.புருஷோத்தமன் நினைவு ஜோதி யினை எடுத்து கொடுக்க தமுஎகச மாவட்ட துணைச்செயலாளர் சோபியா சங்கமித்திரா பெற்றுக் கொண்டார். முன்னதாக, சிஐடியு மாவட்டத் துணைத்தலைவர் பி. மாசிலாமணி, தாத்தா இரட்டை மலை சீனிவாசன் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், இந்திய மாண வர் சங்க மாவட்டச் செயலாளர் மு. தமிழ்பாரதி, மாதர் சங்க மாவட்டச்  செயலாளர் க.ஜெயந்தி, மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டத் தலை வர் வெள்ளி கண்ணன், தமுஎகச மாவட்டச் செயலாளர் கவிசேகர், மாவட்டப் பொருளாளர் என்.டி. ரங்கநாதன், தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாவட்டப் பொருளாளர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் வாழ்த் திப் பேசினர். இதனைத்தொடர்ந்து வேடந்தாங்கல் கிராமத்தில் வாழ்ந்து மறைந்த சனாதன ஒழிப்பு போரா ளியும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் முனியசாமி யின் இல்லத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு சங்கத்தின் சார் பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த ஜோதிப் பயணம் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு, செப்.2 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் சனாதன ஒழிப்பு மாநாட் டில் ஒப்படைக்கப்பட உள்ளது.