இரவில் உலா வரும் கரடி
உதகை, அக்.14- உதகை அருகே உள்ள பஜார் பகுதியில் இரவில் உலா வந்த கரடியை நாய்கள் சூழ்ந்து துரத்தியது. நீலகிரி மாவட்டம், கூடலூர் பந்தலூர் பகுதிகளில் சமீப நாட்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப் படுகிறது, குறிப்பாக, இரவு நேரங்களில் யானை, கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் சர்வசாதாரணமாக உலா வருகின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந் துள்ளனர். இந்நிலையில், பந்தலூர் பஜார் பகுதியில் வெள்ளியன்று இரவு நேரத்தில் கரடி ஒன்று அங்கும் இங்கும் சுற்றி திரிந்தது. இதைக் கண்ட தெருவில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட நாய் கள் குறைத்துக் கொண்டே இருந்தன. அப்போது அருகில் இருந்தவர்கள் சாலையில் பார்க்கும் பொழுது கரடி உலா வந்தது கண்டு அச்சமடைந்தனர் அப்போது பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் கரடியை சூழ்ந்து குறைத்து துரத்தின. இதில் கரடி ஓட்டம் பிடித்தது. இரவு நேரங்களில் கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். எனவே, பந்தலூர் பஜாரில் நடமாடும் கரடியை வனத் துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி துவக்கம்
சேலம், அக்.14- ஓமலூர் அருகே ரயில்வே மேம்பாலம் கீழே, சர்வீஸ் சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கப் பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெரமச்சூர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஓமலூர் நகரில் இருந்து முத்துநாயக்கன்பட்டி, சேலம், தார மங்கலம், இரும்பாலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. இவ்வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக் கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில், குறுக்கே சேலம் - ஓமலூர் ரயில்வே இருப்புபாதை செல் கிறது. இங்கு அடிக்கடி ரயில்வே கேட் அடைக்கப்படுவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து இங்கே தற்போது பாலம் கட்டியதால் வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில், கீழே உள்ள பகுதி மக்கள் சென்று வருவதற்கான சர்வீஸ் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. அதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது சர்வீஸ் சாலை அமைப்பதற் கான பணிகள் தொடங்கி, நிலம் எடுப்பதற்கான ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. வருவாய்துறை அதிகாரிகள், சாலை அமைக்கும் திட்ட அதிகாரிகள் இணைந்து, சாலைக் கான நிலத்தின் உரிமையாளர்களை அழைத்து பேசி ஒப்புதல் பெற்றனர். எடுக்கப்படும் நிலத்திற்கு சந்தை மதிப்பிற்கு மேல் ஒரு மடங்கு சேர்த்து இழப்பீடு வழங்கப்படும் என்றும் அதிகாரி கள் தெரிவித்தனர்.
ஆரஞ்சு வகை கட்டுப்பாடு நீக்கம் தென்னை நார் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
கோவை, அக்.14- தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு மாசு கட்டுபாடு வாரியம் விதிக்கபட்ட ஆரஞ்சு வகை கட்டுபாடுகளை திரும்ப பெற்றதால் தென்னை நார் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 8 ஆயிரம் தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகள் இயக்கி வருகிறது. இதில் பொள்ளாச்சியில் மட்டும் ஆயிரத்து 750க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றிய, மாநில அரசுகளின் மாசுகட்டுபாடு வாரியம் தென்னை நார் தொழிற்சாலைகள் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு அடைவதாக கூறி சுற்றுச்சூழல் பாதிப்பு என குறிப்படும் வகையில் ஆரஞ்சு வகைக்கு மாற்றி தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தது. ஆனால் மாசுகட்டுபாடு வாரியம் விதிக்கபட்ட கட்டுப்பாடுகளால் தென்னை நார் உற்பத்தி தொழில் நலிவடைந்தது. இதனால், தொழிற்சாலைகள் மூடும் அளவிற்கு பாதிப்பு இருப்பதாகவும், எனவே கட்டுபாடுகளை தளர்ந்த வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்தை மாசுகட்டுபாடு வாரிய குழுவினர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டனர். பின்னர் ஆரஞ்சு வகையில் இருந்த கட்டுப்பாடுகளை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளியன்று திரும்ப பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் தென்னை நார் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்னை நார் மூலம் எந்த சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை என தெரிந்தே பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபட்டு வருவதாகவும், பொய்யான தகவல்களால் கட்டுபாடுகள் விதிப்பதை ஆராய வேண்டும். மேலும் தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
லஞ்சம் பெற்ற மேலாளர் கைது
நாமக்கல், அக்.14- நாமக்கல் அருகே ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு கைத்தறி சங்க மேலாளர் வெள்ளியன்று கைது செய்யப் பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள குருசாமி பாளையத்தில் பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி, விற்பனை சங்கம் செயல்பட்டு வரு கிறது. இதில் உறுப்பினர்களுக்கு பாவு நூல் வழங்கி நெய்த பின் துணிகளை பெற்று விற்பனை செய்து வருகிறது. இந் நிலையில், அப்பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவருக்கு சங்கத்தின் மூலம் பாவு நூல் வழங்கி நெய்த வேட்டி களாக பெற்றுள்ளனர். ஆனால் வேட்டி ஒன்றுக்கு ரூ.5 என கணக்கிட்டு வழங்க வேண்டும் என மேலாளர் என்.பிரகாஷ் என்பவர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. மொத்தம் 600 வேட்டிக்கு, மேலாளர் என்.பிரகாஷ் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இதுகுறித்து லோகநாதன், நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிந்திருந்தார். இது குறித்து ரகசியமாக போலீசார் விசாரித்து வந்த நிலையில், சங்கத்தில் மேலா ளரிடம் லோகநாதன் லஞ்சம் கொடுத்தபோது பிடிபட்டார். இவரை நாமக்கல் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் நல்லம் மாள் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், அவரிடம் கணக்கில் வராத ரூ.49 ஆயிரம் ரொக்கமும் இருந்தது தெரிய வந்தது. இதனையும் போலீசார் பறிமுதல் செய்து, மேலாளர் என்.பிரகாசை கைது செய்தனர்.
விதியை மீறி ஏர் ஹாரன் பொறுத்திய பேருந்துகள் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை
மேட்டுபாளையம், அக்.14- விதிகளை மீறி அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பொறுத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்ப கூடிய ஹாரன்களை திடீர் ஆய்வு நடத்தி போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத் திலிருந்து கோவை மாநகர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதி களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில தனியார் பேருந்துகள், அரசு பேருந்து கள், பள்ளி, கல்லூரி பேருந்துகளில் போக்கு வரத்து விதிமுறைகளை மீறும் வகையில் அதிக அளவு ஒலி எழுப்ப கூடிய ஏர் ஹாரன் களை பயன்படுத்தி வருவதாக புகார்கள் வந்தது. மேலும், இப்பேருந்துகள் சாலை யில் செல்லும் போது அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை அலற விடுவதால் முன்னால் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சாலை யோரம் செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். இந்த ஏர் ஹாரன் களால் பொது மக்களுக்கு கடும் இடையூறு ஏற்படுவதால், இதனை தடை செய்து போக்கு வரத்து துறை உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளியன்று மேட்டுப் பாளையம் வட்டார போக்குவரத்து அதிகாரி கள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். மேட்டுப் பாளையம் வட்டார போக்குவரத்து அலு வலர் கணேசன் தலைமையில், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் மேட்டுப்பாளையம்- கோவை சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது தனியார் பேருந்து, அரசு பேருந்து, பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள் என அனைத்து பேருந்துகளை யும் ஆய்வு செய்தனர். அப்போது போக்கு வரத்து விதிமுறைகளை மீறும் வகையில் அதிக அளவு ஒலி எழுப்ப கூடிய ஏர் ஹாரன் களை சிலர் பேருந்துகளில் பொறுத்தியி ருந்தது தெரியவந்தது. இதையடுத்து பேருந்துகளில் இருந்த ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்தனர். அடுத்த முறை இதே போன்ற விதிமீறலில் ஈடுபட்டால் போக்கு வரத்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என ஓட்டுநர்களை எச்சரித்து அனுப் பினர்.
ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரம் செயல்பட நடவடிக்கை எடுத்திடுக
உதகை, அக்.14- உதகை அருகே ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரம் செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் காட்டு யானைகளை நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப் பாக, பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரம்பாடி, சேரங்கோடு, இரும்பு பாலம் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கட்டை கொம்பன், ராக்கெட் என இரு யானைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றி வருவது மட்டுமின்றி பொதுமக்களை தாக்கி வரு கின்றன. குறிப்பாக, காட்டு யானைகள் மற்றும் சிறுத்தை போன்ற வனவிலங்குகள் உள்ள தால், வனவிலங்கு- மனித மோதல் நடை பெற வாய்ப்புள்ளது. இந்நிலையில், சேரம் பாடி பகுதியில் 24 மணி நேரம் செயல் படுத்தக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர் இல்லை. இதனால், வனவிலங்கு களால் ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள், செவிலியர்கள் மாலை நேரத்தில் பூட்டி விட்டு செல்கின்றனர். இந்தஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகிறது. இந்நிலையில், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வனவிலங்கு தாக்குதலில் பாதிக்கப் படும் மக்கள் சிகிச்சை அளிப்பதற்கு இந்த ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே இருந்தது. மாலை நேரத்தில் சுகாதார நிலை யம் இல்லாததால் பொதுமக்கள், கேரளம் அல்லது 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூடலூருக்கு சென்று சிகிச்சை மேற் கொள்ள வேண்டும். உடனடியாக, ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டு 24 மணி நேரமும் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலை யத்தை உத்தரவாதப்படுத்த மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இஸ்ரேலில் இருந்து 12 பேர் கோவை வந்தனர்
கோவை, அக்.14- இஸ்ரேலில் இருந்து தமிழகத் தைச் சேர்ந்த 12 பேர் கோவை விமான நிலையம் வந்தடைந்தனர். இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தத்தை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த வர்களை மீட்க தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, ஒன்றிய அரசு ஆபரேசன் அஜய் என்ற திட்டத்தை அறிவித்தது. அதன்படி, வெள்ளியன்று இஸ்ரேலில் இருந்து 7 பேரை விமானம் மூலம் தில்லி வந்தடைந்தனர். அங்கிருந்து விமா னம் மூலம் கோவை வந்தடைந் தனர். இதையடுத்து, இரண்டாவது கட்டமாக சனியன்று தமிழகத்தை சேர்ந்த 12 நாடு திரும்பி உள்ளனர். கரூர் மாவட்டத்தை சேர்ந்த குமர வேல், சஹனா, கார்த்திகா, திண் டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கார்த்தி, வினாயா, கோவை மாவட் டத்தை சேர்ந்த மனோஜ், சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரிச்சர்ட், பவுலின், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கெளதம், திருப்பத்தூர் சேர்ந்த ஷர்மிளா, புதுச்சேரி மாநி லத்தை சேர்ந்த மணிமுத்து, யாகுல் என 12 நபர்கள் இஸ்ரேலில் இருந்து கோவை வந்தனர். கோவை விமான நிலையத்தில் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்கள் சொந்த ஊர் செல்வதற்கு வாகனம் வசதியும் செய்து தரப்பட்டது.
தேசிய அளவிலான கபடி போட்டி: வாழப்பாடி அரசுப்பள்ளி மாணவர் தேர்வு
சேலம், அக்.14- தேசிய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்கும் தமிழ் நாடு அணியில் வாழப்பாடியைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாண வர் இடம் பெற்றுள்ளார். கடந்த செப்.29 ஆம் தேதியன்று திருவாரூர் மாவட்டம், வடுவூரில் தேசிய அளவிலான கபடிப் போட்டியில் பங்கேற் கும் தமிழக அணிக்கு வீரர்களை தேர்வு செய்யும் முகாம் நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட சேலம் மாவட்டம், வாழப் பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆஆம் வகுப்பு மாணவர் வி.சுரேஷ்குமார், மாநில அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் கர்நாடகா மாநிலம், மாண் டியா மாவட்டத்தில் டிசம்பர் மாதம் நடைபெறும் தேசிய அள விலான கபடிப் போட்டியில், தமிழக அணியில் விளையாடு வதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தேசிய அளவி லான கபடிப் போட்டியில் தமிழக அணியில் விளையாடுவ தற்கு பங்கேற்கும் மாணவர் வி.சுரேஷ்குமார் மற்றும் பயிற்சி அளித்த வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் பழனி முருகன், ராமமூர்த்தி ஆகியோருக்கு, பள்ளி தலை மையாசிரியர் கோ.ரவீந்திரன் உட்பட பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஒருவருக்கு 20 கிலோ துவரம் பருப்பு ரேசன் கடைக ஊழியர் பணியிடைநீக்கம்
திருப்பூர், அக்.14- ரேசன் கடையில், ரேசன் கார்டு இல்லாமல் விற்பனையா ளர் மொத்தமாக பருப்பை விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, விற்பனை யாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், 15 வேலம்பாளையம் தொடக்க வேளாண்மைக் கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் எல்பிஓ 59 என்ற எண்ணில் வேலம்பாளையம் ரேசன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேசன் கார்டு இல்லாமல் சுமார் 20 கிலோ பருப்பை வாங்கிக் கொண்டு ஒரு நபர் இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றார். இதைப் பார்த்த அங்கிருந்த ஒருவர், ரேசன் கார்டு இல்லாமல் இவ்வ ளவு பருப்பை எப்படி மொத்தமாக கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டார். மேலும், ரேசன் கார்டுதாரர்கள் கேட்டால் பருப்பு இல்லை என திருப்பி அனுப்பி விடுவதாக கூறி, ரேசன் கடை விற்பனையாளரிடம் இதுகுறித்து கேள்வி எழுப் பினார். பருப்பு இல்லை என்று சொல்பவர்கள் வரட்டும், நான் பேசி கொள்கிறேன் என கடை விற்பனையாளர் அலட்சி யமாக பதில் கூறியிருக்கிறார். இந்த காட்சி சமூக வலைதளங் களில் வைரலாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவியதைத் தொடர்ந்து விற்பனையா ளர் ராமாத்தாளை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு சார் பதிவாளர் செல்வி உத்தரவிட்டார்.
மேம்பால தடுப்புச்சுவரில் மீது மோதி தனியார் பேருந்து விபத்து
சேலம், அக்.14- தலைவாசல் அருகே மேம்பால தடுப்புச்சுவர் மீது தனி யார் பேருந்து மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள காட்டுக் கோட்டை மேம்பால பகுதியில் சனியன்று அதிகாலை 5 மணி யளவில் சென்னையிலிருந்து கோவை நோக்கி தனியார் சொகுசு பேருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. சென்னை, மணலியைச் சேர்ந்த அசோக் குமார் என்பவர் பேருந்தை ஓட்டிச் சென்றார். அப்போது, ஓட்டு நரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மேம்பால தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்து ஏற்பட்ட உடன் பயணிகள், அவசர கால கதவை திறந்து வெளியேறி னர். இதனால் நல்வாய்ப்பாக எவ்வித உயிரிழப்பும் ஏற்பட வில்லை. மேலும், இவ்விபத்தில் காயமடைந்த 2 பயணிகள் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே, இவ்விபத்து தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி போராட்டம்
திருப்பூர், அக்.14- மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கிரில் ஒர்க்ஸ் ஷாப் உரிமையாளர்கள் போராட் டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிரில் ஒர்க் ஷாப் உரிமையாளர்கள் நலசங்க பொதுக் குழுக்கூட்டம் திருப்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி அக்.16 ஆம் தேதியன்று சென்னையில் உண் ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் தெரிவித்திருக்கிறார்கள் அந்த உண்ணாவிரதத்தில் அனைத்து கிரில் ஒர்க் ஷாப் உரிமையாளர்களும் கலந்து கொள் வது என முடிவெடுக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு 3பி கட்டணத்தை 3ஏ முறைக்கு மாற்றி மைத்திருப்பதாக அறிவித்திருந்தாலும், அது ஒர்க் ஷாப் தொழிலுக்கு பொருந்தாது. எனவே, தமிழக அரசு அதை மறுபரிசீலினை செய்ய வேண்டும். உச்ச பயன்பாட்டு நேரம் என கூறப் படும் காலை, மாலை 6 முதல் 10 மணி வரையி லான நேரங்களிலும் வெல்டிங் செய்ய அனு மதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் சங் கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவராக தாமஸ், பொருளாளராக பாலமுருகன் மற்றும் துணைச்செயலாளர் பார்த்திபன், ஹரி ஹரன், மகுடீஸ்வரன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
குடிநீரில் கலக்கும் கழிவுநீர்: பொதுமக்கள் மறியல்
சேலம், அக்.14- குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி சேலம், செவ்வாய் பேட்டை பகுதியில் பொதுமக்கள் சாலை மறி யலில் ஈடுபட்டனர். சேலம் மாநகராட்சி, 29 ஆவது வார்டுக் குட்பட்ட செவ்வாய்பேட்டை தேவாங்கபுரம் பகுதி மக்கள், வெள்ளியன்று மாலை செவ் வாய்பேட்டை பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது அவர்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது. இதுதொடர்பாக சம்பந் தப்பட்ட அலுவலர்களிடம் மனு அளிக்கப்பட் டது. ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, குடிநீரில் சாக் கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம், என்றனர். இதுகுறித்து தகவலறிந்த அலுவலர்கள் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப் போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதன்பேரில் மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.
போக்சோ வழக்கு: 5 ஆண்டு சிறை
திருப்பூர், அக்.14- திருப்பூர், சாமுண்டி புரத்தைச் சேர்ந்தவர் செல் வம் (49). இவர் கடந்தாண்டு 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தார். இது குறித்த புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்த னர். இவ்வழக்கில் குற்ற வாளி செல்வத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.