districts

img

பல்லடம் ப.கு.சத்தியமூர்த்தி நினைவேந்தல்

திருப்பூர், மே 3 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ப.கு.சத்தியமூர்த்தியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் மே 3 ஆம் தேதி வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், பல்லடம் ஒன்றியச் செயலா ளராகவும் பணியாற்றிய ப.கு.சத்தியமூர்த்தி பல்லடம்  நகரம், ஒன்றியப் பகுதிகளில் உழைக்கும் மக்களின் அன்பைப்  பெற்றவர். அனைத்து அரசியல் இயக்கத்தினரின் மரியா தைக்குரிய தலைவராகத் திகழ்ந்தவர். கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். பல்லடம் ஜெயப்பிரகாஷ் வீதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு அலுவலகம் முன்பாக  வெள்ளியன்று தோழர் ப.கு.சத்தியமூர்த்தியின் உருவப்படம்  வைக்கப்பட்டு மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப் பட்டது. இதில் பல்லடம் ஒன்றியக்குழு உறுப்பினர் வை.பழ னிச்சாமி தலைமை ஏற்றார். கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் நினைவஞ்சலி உரை யாற்றினார். கட்சியின் பல்லடம் ஒன்றியக்குழு உறுப்பினர் கள் உள்பட ஊழியர்கள் திரளாகக் கலந்து கொண்டு அவ ருக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.