திருப்பூர், ஏப். 20 - 1950ஆம் ஆண்டில் கருங்காலிகள் காட் டிக் கொடுத்து காவல் துறையால் சுட்டுப் படு கொலை செய்யப்பட்ட அஞ்சாநெஞ்சன் ஆஷர் மில் கம்யூனிஸ்ட் தியாகி பழனிசாமி யின் 73ஆவது ஆண்டு நினைவுநாள் திருப் பூரில் எழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது. திருப்பூர் வடக்கு மாநகரம் காந்தி நகர் அருகே உள்ள தியாகி பழனிசாமி நகரில் வியாழ னன்று, இந்த நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்பட்டது. தியாகி பழனிசாமி நகர் கிளை செயலாளர் இளங்கோ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி யில், முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் என்.கோபாலகிருஷ்ணன் செங்கொ டியை ஏற்றினார். இதைத் தொடர்ந்து தியாகி பழனிசாமி நினைவு ஸ்தூபிக்கு மலரஞ்சலி வீர வணக்கம் செலுத்தப்பட்டது. பழனிச்சாமி நினைவேந்தல் பொதுக் கூட் டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கே. கனகராஜ், மாநிலக் குழு உறுப்பினர் கே.காம ராஜ், மாவட்டச் செயலாளர் எஸ்.முத்துக் கண் ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.உன்னிகிருஷ்ணன், எம்.ராஜகோபால், வடக்கு மாநகர செயலாளர் பி.ஆர்.கணே சன், வடக்கு மாநகரக்குழு உறுப்பினர் எஸ். ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். சிஐடியூ பஞ்சாலை தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சி. ஈஸ்வரமூர்த்தி, மாதர் சங்க மாநகர செயலா ளர் எஸ்.அம்சவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக பழனிசாமி நகரில், தாரை தப்பட்டை முழங்க சிவகங்கை கலை குழுவி னரின் கட்டைகால் ஆட்டம் நடைபெற்றது. கட்சி அணியினர் பேரணியாக அணிவகுத்து வந்தனர். இந்த நிகழ்ச்சியில் தியாகி பழனிசாமி நினைவக கட்டிடத்தில் புதிதாக கட்டப்பட்ட மேல் தளத்தை மாநில செயற்குழு உறுப் பினர் கே.கனகராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில், பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டார்கள். முடிவில் தியாகி பழ னிசாமி நகர் கிளை சார்பில் துரைசாமி நன்றி கூறினார்.