சேலம், ஜூலை 24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் பி.தர்மலிங்கம் 4 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்களன்று அனுசரிக்கப்பட்டது. இந்திய கம்யூனிச இயக்கத்தில் 66 ஆண்டுகள், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 55 ஆண்டுகள், ஒன்றுபட்ட சேலம் மாவட்டக்குழுவின் செயலாளராக பணியாற்றிய தோழர் பி. தர்மலிங்கத்தின் 4 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்களன்று அனுசரிக்கப்பட்டது. சேலம் சிறை தியாகிகள் நினைவகத் தில் மாவட்டக்குழு உறுப்பினர் பி.சந்திரன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தோழர் பி.தர்ம லிங்கம் செய்த பணிகள் குறித்து கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி உரையாற்றினார். கட்சி யின் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, சேலம் மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ், வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.குணசேகரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சேது மாதவன் ஆகியோர் அவரது உருவப்படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.