districts

img

தோழர் தி.மு.ராசாமணி நினைவு தினம் அனுசரிப்பு

திருப்பூர், செப். 6 – தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செய லாளர், எழுத்தாளர் தோழர் தி.மு.ராசாமணி யின் 11 ஆம் ஆண்டு நினைவு நாள் புதன் கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலையம்  முன்பு தோழர் தி.மு.ராசாமணியின் உருவப் படம் வைக்கப்பட்டு மலரஞ்சலி நிகழ்ச்சி நடை பெற்றது. தமுஎகச மாவட்டத் தலைவர் பி. ஆர்.கணேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமுஎகச மாநில செயற்குழு உறுப் பினர் ஆர்.ஈஸ்வரன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் ஆகி யோர் தி.மு.ராசாமணியின் பன்முகப் பணி களை நினைவு கூர்ந்து உரையாற்றினர். இதைத் தொடர்ந்து தமுஎகச மாவட்டச்  செயலாளர் ஆர்.குமார், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், எழுத்தாளர் கோவை சதாசிவம் உள்பட பலர் பங்கேற்று தி.மு.ராசாமணி படத்துக்கு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.