districts

img

தோழர் எம்.என்.காளியண்ணன் நினைவேந்தல்

ஈரோடு, ஜன.18- மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் எம்.என்.காளியண் ணன் நினைவு தினம் அனுசரிப்பு, பொதுக்கூட்டம் கீழ்வானி யில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பவானி, அந்தியூர்  தாலூகா பகுதியில் உருவாக்கி, கட்சியின் பணிக்காக வாழ் நாள் முழுதும் தன்னை அர்ப்பணித்து பணியாற்றிய  கட்சியின் முன்னத்தி ஏராக விளங்கிய தோழர் எம்.என்.காளியண்ணன் 27 ஆம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் கட்சியின் வளர்ச்சி நிதியளிப்பு பொதுக் கூட்டம் புதனன்று கீழ்வானியில் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு அந்தியூர் தாலூகா செயலாளர் ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்கத் தின் அகில இந்திய துணைத்தலைவர் டி.ரவீந்திரன் சிறப்புரை யாற்றினார். கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன்,  மூத்த தோழர் கே.துரைராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஏ.எம்.முனுசாமி, பி.பி.பழனிச்சாமி, விஜயராகவன், ஆர்.கோமதி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.ஜெகநாதன்,  எஸ்.வி.மாரிமுத்து மற்றும் பவானி தாலூகா செயலாளர் எஸ்.மாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.  முன்னதாக, கட்சி நிதி மற்றும் கட்டிட நிதியாக அந்தியூர் கமிட்டியிலிருந்து ரூ.1 லட்சத்து 595ம், பவானி கமிட்டியிலி ருந்து ரூ.60 ஆயிரமும் வழங்கப்பட்டது. இறுதியாக ஏ.கே. பழனிச்சாமி நன்றி கூறினார்.