districts

img

கார் கவிழ்ந்து விபத்து: கல்லூரி மாணவர்கள் படுகாயம்

கோபி, நவ.30- கோபிசெட்டிபாளையம் அருகே அரசு கல்லூரி மாணவர்களை ஏற்றி சென்ற கார்  கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கார் ஓட்டு னர் பலியானார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபா ளையம் அருகே திட்டமலையில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயி லும் கல்லூரி மாணவர்கள் சிலர், வியாழ னன்று தேர்வினை முடித்துவிட்டு கல்லூரியி லிருந்து வீடு திரும்புவதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தனர். அப்போது நம்பி யூரிலிருந்து, அவ்வழியாக வந்த ரங்கசாமி என்பவரின் காரில் லிஃப்ட் கேட்ட 7 மாண வர்கள், கெட்டிச்செவியூரை நோக்கி சென் றுள்ளனர். அப்போது, திட்டமலை முருகன் கோவில் அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே இருந்த  15அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கார் ஓட்டுனர் ரங்கசாமி சம்பவ  இடத்திலேயே பலியானார். மேலும் படு காயமடைந்த 7கல்லூரி மாணவர்களையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபி அரசு மருத் துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத் தனர். இவ்விபத்து குறித்து வரப்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.