செல்போனை பிடுங்கியதால் கல்லுரி மாணவி தற்கொலை
ஈரோடு, டிச. 3- அந்தியூர் அருகே தாயார் செல்போனை வாங்கிக் கொண்டதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே, விவசாயம் செய்து வரும் தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார். இவர், அப்பகுதி யில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இம்மாணவி, செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது தாயார், செல்போனை பிடிங்கி வைத்துக் கொண்டு, விவசாய பணிகளுக்கு சென்றுவிட்டார். வெகுநேரம் கழித்து வீட்டுக்கு வந்த அவர், மகள் விஷம் அருந்தி மயங்கிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர், கோவை கேஎம்சிஎச்-ல் மேல்சி கிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சனியன்று உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
நாமக்கல், டிச.3- உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், 45 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.20.24 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நாமக்கல் நகராட்சி, அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (தெற்கு) கலையரங்கத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில், விளை யாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த அனைத்து சிறப்பு பள்ளி மாற்றுத்திறனாளி குழந்தை களுக்கு பரிசுகளையும், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.16.05 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டது. மேலும், சமூக பாது காப்பு திட்டத்தின் கீழ் 23 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.3.91 லட்சம் மதிப்பீட்டில் நலவாரிய உறுப்பினர்க ளுக்கான ஈமச்சடங்கு / இயற்கை மரணம் உதவித்தொ கையும், 7 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.21000/- மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகை என மொத்தம் 45 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20.24 இலட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இன்று ஐஐசி மண்டலக் கூட்டம்
கோவை, டிச.3- புதிய கண்டுபிடிப்புகளுக்கான கவுன்சில் (ஐஐசி) மண்ட லக் கூட்டம் கோவை நேரு தொழில்நுட்பக் கல்லூரியில் திங்க ளன்று (இன்று) நடைபெற உள்ளது. நேரு தொழில்நுட்பக் கல்லூரி, மத்திய கல்வி அமைச் சகத்தின் புதுமை கண்டுபிடிப்பு மையம், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஆகியவற்றின் சார்பில் நடைபெ றும் புதிய கண்டுபிடிப்புளுக்கான கவுன்சில் (ஐஐசி) மண்ட லக் கூட்டம், கோவை திருமலையாம்பாளையத்தில் உள்ள நேரு கல்லூரியின் பி.கே.தாஸ் கலையரங்கில் நடைபெறு கிறது. 200க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சியா ளர்கள், புத்தொழில் நிறுவனப் பிரதிநிதிகள், கல்வியா ளர்கள், ஆலோசகர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில், புதிய கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகள், திட்டங்கள், அறிவு சார் பரிமாற்றங்கள், அனுபவப் பகிர்வு போன்றவை நடை பெற உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரான குடிநீர் விநியோகம் கேட்டு மறியல்
கோவை, டிச.3- கோவை மாவட்டம், ஆனைமலையை அடுத்த அங்கலக்குறிச்சி ஊராட்சியில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்ற னர். இப்பகுதி மக்களுக்கு ஆழியாறு ஆற்றுப் படுகையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங் காத அங்கலக்குறிச்சி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பொள்ளாச்சி – வால்பாறை சாலை யில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, விரைவில் சீரான குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதனையேற்று பொதுமக்கள் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஈரோட்டில் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க ஆலோசனை
ஈரோடு, டிச.3- ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், துணிநூல் துறையின் சார் பில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டம் தொடர்பான ஆலோச னைக் கூட்டம் நடைபெற்றது. ஜவுளித் துறையில் முன்னோடி மாநில மாக தமிழ்நாடு விளங்குகிறது. இத்துறை யின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் பரப்பளவில் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமை யும். அடிப்படை வசதிகள், பொது உள்கட்ட மைப்பு வசதிகள், பொது பயன்பாட்டுக்கான கட்டிடங்கள் மற்றும் தொழிற்கூடங்கள் என தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் 50 விழுக்காடு அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது மானியமாக வழங்கப் படுகிறது. இதன் மூலம் நடுத்தர நிறுவனங்களில் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகுவ தோடு அதிக அளவில் அன்னியச் செலா வணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். எனவே, சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை அனைத்து ஜவுளித் தொழில்முனைவோரும் பயன்படுத்தி தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் முன் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், தொழில் முனைவோரின் கருத்துக்களும், ஆலோசனைகளும் பெறப் பட்டன. இதில், துணிநூல் துறை சேலம் மண்டல துணை இயக்குநர், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர், தொழில் முனை வோர்கள் மற்றும் துணிநூல் துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.
சுத்தகரிப்பு செய்யாமல் வெளியேறும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்
உடுமலை, டிச.3- சுத்தகரிப்பு செய்யாமல் வெளியே றும் கழிவுநீரால் தொற்று நோய் பர வும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உடு மலை நகர பொதுமக்கள் தெரிவித்துள் ளனர். உடுமலை நகராட்சியில் மொத்த முள்ள 33 வார்டுகளில் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2013 ஆம் ஆண்டு நகராட்சி நிர்வாகத் தின் சார்பில், ரூ.56.07 கோடி மதிப்பீட் டில் நகர்பகுதி முழுவதும் சுமார் 97 கிலோ மீட்டர் நீளத்திற்கு, 3900 இறங்கு குழாய்கள் மூலம் சாக்கடை நீர் சேக ரிக்கபட்டு, ஏரிப்பாளையம் பகுதியில் 7.81 எம்எல்டி திறன் கொண்ட சுத்தக ரிப்பு மையம் அமைக்கபட்டது. உடு மலை நகரில் இருந்து சேகரிக்கபட்ட கழிவுநீர் குழாய் வழியாக ஏரிப்பா ளையம் சுத்தகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இருந்த திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடியாலும், சுத்தகரிப்பு நிலையம் முறையாக பராம ரிப்பு செயல்படாமல் இருப்பதால், நிலையத்தில் இருக்கும் சாக்கடை நீரை சுத்தகரிப்பு செய்யாமல் அருகில் உள்ள ராசவாய்கால் ஓடையில் இரவு நேரங்க ளில் சட்டவிரோதமாக திறக்கபட்டு வரு கிறது. இதனால், அப்பகுதி முழுவ தும் துர்நாற்றம் வீசி வருகிறது. தற்பொ ழுது அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்து, ராஜவாய்க்கால் ஓடையில் தண்ணீர் சென்று கொண்டுள்ளது. இந்த நீர் குறுச்சேரி வழியாக சென்று உப் பாறு ஓடைக்கு சென்று இறுதியாக உப்பாறு அணையை அடைகிறது. உடுமலை பாதாள சாக்கடை நீர் முறையாக சுத்தகரிப்பு எதுவும் செய்யா மல் ஓடை நீரில் கலப்பாதால் நீர் முழு வதும் மாசுபடும் அபாயம் உள்ளது. பெரிய அளவில் சுகாதரகேடு ஏற்படும் வகையில் இருக்கும் பாதாள சாக்கடை நீரை, முறையாக சுத்தகரிப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர்.
தேசிய விருது பெற்ற திரைப்பட அறிமுக விழா
கோவை, டிச.3- கோவை மாவட்டம், பொள்ளாச்சி - பாலக்காடு சாலை யில் உள்ள அரிமா சங்க அலுவலகத்தில், இயக்குநர் பி.லெ னின் இயக்கி தேசிய விருது பெற்ற சிற்பிகளின் சிற்பங் கள் திரைப்பட அறிமுக விழா ஞாயிறன்று நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம், பொள்ளாச்சி இலக்கிய வட்டம், பாரம்பரியம் கலை இலக்கிய பேரவை, பிஎஸ்என்எல் ஓய்வூதியதிரியர் சங்கம் மற்றும் திரைத்துறை கலைஞர்கள் ஆகிய அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வு, அம்பாளபட்டி வீரபாண்டி கட்ட பொம்மன் ஒயிலாட்டத்துடன் துவங்கியது. டி.கே.சந்திரன், கே.கே.வி மீடியா வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்தி ரைப்பட அறிமுக விழாவில், இயக்குநர் பி.லெனின் மற்றும் இணை தயாரிப்பாளர் எஸ்.அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இணை இயக்குநர் பொள்ளாச்சி சசி நிகழ்வை ஒருங்கிணைத்தார். முடிவில், மாணிக்கம் நன்றி கூறி னார். இதில், சிற்பிகளின் சிற்பங்கள் திரைப்படக்கலை ஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காட்டுயானை தாக்கி ஒருவர் பலி
உதகை, டிச.3- நீலகிரி மாவட்டம், கூட லூர் மற்றும் அதை சுற்றி யுள்ள பந்தலூர், நாடுகாணி, ஓவேலி பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானை கள் குடியிருப்புகளை ஒட் டிய பகுதிகளில் உலா வரு கின்றன. இதனால், அடிக்கடி மனித - விலங்கு மோதல்கள் நடைபெற்று உயிரிழப்பு சம் பவங்களும் நடந்து வருகின் றன. இந்நிலையில், நாடு காணி பொன்னூர் பகுதி யைச் சேர்ந்த செல்வம் (எ) ராமமூர்த்தி (50) என்பவர் சனியன்று விறகு சேகரிக்க சென்றுள்ளார். இரவு முதல் வீடு திரும்பாததால், ஞாயி றன்று காலை அவரது குடும் பத்தினர் ராமமூர்த்தியை தேடிச் சென்றுள்ளனர். அப் போது காட்டு யானை அவரை தாக்கியதில் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்துள்ளார். அவரின் உடலை கண்ட குடும்பத்தார் கதறி அழுத னர். இதன்பின் சம்பவ இடத் திற்கு வந்த வனத்துறையி னர் செல்வத்தின் உடலை மீட்டு, கூடலூர் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென் றனர். யானைகள் தாக்கி மனிதர்கள் உயிரிழக்கும் சம் பவம் நடந்து வருவது கூட லூர் மக்களிடையே அச் சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்: ரயில்வே பாதுகாப்புத் தணிக்கை குழு ஆய்வு
சேலம், டிச.3- தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு அலுவலர் சோமேஷ்குமார் தலைமையிலான பாதுகாப்புத் தணிக்கை குழுவினர், சேலம் ரயில்வே கோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். சேலம் ரயில்வே கோட்டத்தில், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு அலுவலர் சோமேஷ்குமார் தலைமையில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா, கூடு தல் மேலாளர் பி.சிவலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடை பெற்றது. அப்போது, சோமேஷ்குமார் பேசுகையில், பாதுகாப்பு மிக முக்கிய மானது மற்றும் ரயில்வேயின் மிக உயர்ந்த முன்னுரிமையாகும். பாது காப்பை மேம்படுத்த வேண்டிய பகுதி களைக் கண்டறிந்துள்ளோம். அப்பகுதி களில் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பாதுகாப்பு தொடர் பான விஷயத்தில் எந்தவித சமரசத் திற்கும் இடமளிக்கக் கூடாது. பாது காப்பு என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். பாதுகாப்பான பணி நடைமுறைகள் மற்றும் ரயில்வே சொத்துகளை பராமரிப்பது, பாது காப்பை உறுதிப்படுத்த உதவும், என் றார். அதைத்தொடர்ந்து பாதுகாப்புத் தணிக்கை குழுவினர் சேலம் ரயில் நிலை யத்தில் உள்ள ரயில் ஓட்டுநர்கள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து சேலம் - ஆத்தூர் இடையிலான தண்டவாள பகு தியில் ஆய்வு மேற்கொண்டனர். பாலங் கள், வளைவுகள், லெவல் கிராசிங்கு கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், பாதுகாப்புத் தணிக்கை குழுவினர் இரண்டாவது நாளாக சேலம் – கரூர் வழித்தடத்தில் சனி யன்று ஆய்வு மேற்கொண்டனர். இதன் பின்னர், நாமக்கல் யார்டில் ஆய்வு மேற் கொண்டனர். கரூர் செல்லும் வழியில் மோகனூர் - கரூர் இடையிலான பாலங் கள், லெவல் கிராசிங்குகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, முதன்மை இயந்திரவியல் பொறியாளர் ஆர்.முகுந்த், சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் பி.சிவலிங்கம், கோட்ட பாதுகாப்பு அலுவலர் பி.தட்சிணா மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
சாலை குழியால் தொடர் விபத்து
உடுமலை, டிச.3- போக்குவரத்து அதிகம் உள்ள உடுமலை - மூணாறு சாலை யில் ஏற்பட்ட குழியால், தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருவ தால், சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலையிலிருந்து மூணாறு செல் லும் சாலையில் போடிபட்டி முதல் அமராவதி வரை சாலை களில் குழிகள் ஏற்பட்டுள்ளன. இந்த குழிகளால் வாகனத்தில் வருபவர்கள், தடுமாறி விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும், இந்த சாலையில் தான் உடுமலை அருகே நடை பெற்று வரும் தேசிய நெடுச்சாலை வேலைக்காக பல நூறு கனரக வாகனங்கள் மூலம் கிராவல் மண் எடுத்து செல் கின்றனர். ஆனால், லாரிகளை ஒட்டும் ஓட்டுநர்கள் போக்கு வரத்து விதிகளை மதிக்காமல் கிராவல் மண்களை சாலையில் போட்டு செல்வதால் விபத்து நடப்பது வாடிக்கையாக உள் ளது. மேலும், அறிவிப்புகள் இல்லாமல் பல இடங்களில் வேகத் தடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் குழப் பத்திலேயே வாகனத்தை இயக்கி வருகின்றன. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், முக்கிய சுற்றுலா இடங்க ளாக இருக்கும் அமராவதி மற்றும் திருமூர்த்தி மலைக்கு செல்ல பயன்படுத்தும் இந்த சாலையில் தான் பல கல்வி நிலை யங்கள், அரசு அலுவலகம், பல தொழிற்சாலைகள் மற்றும் கேரள மாநிலம் செல்ல என தினமும் ஆயிரக்கணக்கான வாக னங்கள் சென்று வருகின்றன. வாகன ஓட்டிகள் அதிகம் பயன்படுத்தும் சாலையை, முறையாக பராமரிப்பு செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. எனவே, இந்த சாலையை விரைந்து சரி செய்ய வேண்டும், என்றனர்.