districts

img

உடுமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொன்விழா

உடுமலை, டிச.29- உடுமலை அரசு கலைக் கல்லூரியின் பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டங்களின் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த பொன்விழா நிகழ்வில், பொன்விழா குழுத் தலைவர் வழக்கறிஞர் நல்லசேனாபதி வரவேற்றுப் பேசினார். கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க அறக் கட்டளையைத் தொடக்கி வைத்தவரும், பொன்விழாக் குழுவின் புரவலருமான ஷாஜகான் முன்னிலை வகித் தார். கல்லூரி முதல்வர் முனைவர் கல்யாணி  தலைமை வகித்து உரையாற்றினார். அதனை தொடர்ந்து, இருபது ஆண்டுகளாகக் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க  அறக்கட்டளை ஆற்றிய அரும்பணிகள் குறித்து முன் னாள் மாணவர் சங்கச்செயலாளர் ஆடிட்டர் கந்தசாமி பேசினார். கல்லூரி திறப்பு விழா கல்வெட்டினைத் முஸ்தாக் பாட்ஷா திறந்து வைத்தார். பாரதியார் பல் கலைக்கழக மண்டல கிரிக்கெட் போட்டிகளை மடத்துக் குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தொடக்கி  வைத்தார். சிறப்பு விருந்தினராக பொள்ளாச்சி நாடாளு மன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் கலந்து கொண் டார்.   மேலும், கோவை பாரதியார் பல்கலைக்கழக தேர்வு களில் பாடவாரியாக முதன்மை மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கும், பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும் ரொக்கப்பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. வணிகவியல் துறை யில் முதன்மை இடம்பெற்ற மாணவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயங்களை கூடுதல் சிறப்புப் பரிசாக வழங்கப்பட்டது. இறுதியில் பொன்விழாக் குழுச் செயலர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.