districts

img

ஈரோடு: பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் ஆய்வு

ஈரோட்டில் பதற்றமாக அறியப்பட் டுள்ள வாக்குச்சாவடி மையங்களில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற் கொண்டார்.  ஈரோடு மக்களவைத் தொகுதி, காங்க யம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள் பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தும் அலு வலரும், ஈரோடு மாவட்ட ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண் டார். இதில் பதற்றமான வாக்குச் சாவடி யாக அறியப்பட்டுள்ள வீரசோழபுரத்தில் உள்ள வாக்குச் சாவடி மையம், வாக்கு  எண்ணும் மையத்தில் இருந்து தொலை வில் உள்ள ஊதியூர், தாயம்பாளையத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடி மற்றும் காங்கயம் நகரில் உள்ள வாக்குச் சாவடி மையங்களை ஆய்வு மேற்கொண்டார்.  மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பாதுகாப்பு மையத்தையும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், திருப்பூர் கலால் உதவி ஆணையருமான சி.ராம்குமார், காங்கயம் வட்டாட்சியர் மயில்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.