districts

img

குப்பைக்கிடங்கில் தீ விபத்து: ஆட்சியர் ஆய்வு

நாமக்கல், ஏப்.29- திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட நுண் உரமாக்கும் மைய வளாகத்தில் உள்ள குப்பைக்கிடங்கில் எதிர்பாராத விதமாக ஏற் பட்ட தீயினை அணைக்கும் பணிகள் குறித்து  மாவட்ட ஆட்சியர் ச.உமா நேரில் ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, கோழிக்கால் நத்தம் சாலை, செங் கோடம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் நுண் உரமாக்கும் மைய வளாகத்தி லுள்ள குப்பைக்கிடங்கில் திங்களன்று தீ  விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீய ணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணி யில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் ச.உமா, தீயினை அணைக் கும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப் போது, குப்பைக்கிடங்கிற்கு அருகில் உள்ள பொதுமக்களை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, மூச்சுத்திணறல் உள்ளவர்க ளுக்கு உடனடியாக அடிப்படை சிகிச்சை வழங்கவும், குப்பை கிடங்கிற்கு அருகில் உள்ள நெருக்கமான குடியிருப்பு பகுதிகளில் நடமாடும் மருத்துவ முகாமினை அமைத்து  சிகிச்சை வழங்க மருத்துவர்களுக்கு அறிவு றுத்தினார். மேலும், குப்பைக்கிடங்கில் தீ  விபத்து ஏற்பட்டது குறித்து முறையான  அறிக்கை சமர்ப்பிக்கவும், குப்பைக் கிடங்கை கண்காணிக்கும் வகையில் கண்கா ணிப்பு கேமராக்கள் பொருத்திடவும் நகராட்சி  ஆணையருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய் வின் போது திருச்செங்கோடு நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு, நகராட்சி ஆணை யர் ரா.சேகர் உட்பட துறை சார்ந்த அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.