districts

img

வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு

நாமக்கல், ஜன.30- நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், வையப்பமலை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் சனியன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில், வருவாய் ஆய்வா ளர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடு களை பார்வையிட்டு விவரங்களை சரிபார்த்தார்.  மேலும், பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது  எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், இணைய தளம் வாயிலாக விண்ணப்பம் செய்யப்பட்ட பல்வேறு சான்றிதழ்கள் குறித்த நேரத்தில் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும் கணினியில் பார்வையிட்டு, விண்ணப்பம் பெறப்பட்ட நாள் மற்றும் சான்றிதழ் வழங்க வட்டாட்சி யருக்கு வருவாய் ஆய்வாளர் பரிந்துரை செய்த  நாள் விவரம் ஆகியவற்றையும் சரிபார்த்தார். இதைத் தொடர்ந்து மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்காக சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பிக்கும்போது, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். முன்னதாக, இந்த ஆய்வின்போது வையப்ப மலை வருவாய் ஆய்வாளர், நாகர்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.