districts

100 சதவிகித தணிக்கைக்கு பின்னரே முழு விபரம் தெரிய வரும் நெல் மூட்டைகள் மாயமானது குறித்து ஆட்சியர் தகவல்

தருமபுரி, ஜூன் 1- அதியமான்கோட்டை அருகே உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக திறந்தவெளி கிடங்கில் இருந்து 7  ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாய மானதாக தகவல் பரவிய நிலையில், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் கி.சாந்தி, 100 சதவிகித தணிக்கைக்கு பின்னரே முழு விபரம் தெரிய வரும், என்றார். தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை அருகே வெத்தலைகாரன் பள்ளம் பகுதியில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக திறந்தவெளி நெல் கிடங்கு அமைந்துள்ளது. இந்த கிடங்கில் இருப்பு வைக்கப்பட்ட 7  ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாய மானதாக புகார் எழுந்தது. இதுதொடர் பாக நுகர்பொருள் வாணிப கழக விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகள் கடந்த சில நாட்களாக தருமபுரி நுகர் பொருள் வாணிபக்கழக கிடங்கு மற்றும்  மண்டல அலுவலகம் ஆகிய இடங் களில் ஆய்வு மேற்கொண்டு விசா ரணை நடத்தினர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி புதனன்று  திறந்தவெளி நெல் கிடங்கிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராம தாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனி ருந்தனர்.

இதன்பின் ஆட்சியர் கி.சாந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், 7  ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாய மானதாக பரவிய தகவல் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. சென்னை யிலிருந்து தரக்கட்டுப்பாட்டு குழுவினர்  மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற் கொண்டுள்ளனர். முதல் கட்ட ஆய்வில்  அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 7 ஆயிரத்து 174 டன்  நெல் மூட்டைகளை தான் மாயமாகி  இருப்பதாக யாரோ தகவல் பரப்பி இருப்பது தெரியவந்துள்ளது. இருந்த போதிலும் புகாரின் அடிப்படையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை அளவீடு செய்யும் பணி  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கே  இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் 120 லாரிகளில் ஏற்றி  அரவை ஆலைகளுக்கு அனுப்பும்  பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதேபோல் அரிசி அரவை ஆலை களிலும் நெல் இருப்பு குறித்து ஆய்வு  செய்யும் பணி மேற்கொள்ளப் பட்டுள்ளது. 100 சதவிகித தணிக்கை செய்யப் பட்ட பின்னரே நெல் மூட்டைகள் ஏதேனும் குறைந்துள்ளதா? என்பது தெரியவரும். முதல் கட்ட ஆய்வின் அடிப்படையில் பார்க்கும்போது 7  ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாய மாகி இருக்க வாய்ப்பில்லை. அது  மிகைப்படுத்தப்பட்ட தகவல். இருந் தாலும் இது குறித்து விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.