பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
சேலம், ஜன.3- சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றி யத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் செ.கார் மேகம், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றி யத்தில் புதியதாக 7 லட்சம் லிட்டர் பால் கொள்ளளவு கொண்ட புதிய ஆலை கட்டுமானப் பணிகளையும், தினசரி 30 டன் பால் பவுடர் உற்பத்தி செய்யும் வகையில் நடைபெற்றுவரும் கட்டு மானப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் பால் பாக் கெட் உற்பத்தி செய்யும் பகுதி மற்றும் வெண்ணெய், நெய் உற்பத்தி செய்யும் பகுதியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யும் இடத்தினை பார்வையிட்டு தினசரி உற்பத்தி மற்றும் விற்பனை குறித் தும் அவர் கேட்டறிந்தார். மேலும், சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்), பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்கி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் பால் விற்பனையில் சிறந்து விளங்குகிறது. இதுபோன்று தொடர்ந்து சேவை யாற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலரும், ஆவின் பொது மேலாளருமான பி.குமரேஸ்வரன், துணைப்பொது மேலா ளர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்த னர்.
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
தருமபுரி, ஜன.3- தருமபுரி - பென்னாகரம் சாலையில் மாதக்கணக்கில் பாதாளச்சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுவதால், சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளது. தருமபுரி நகரில் பிரதான சாலையாக பென்னாகரத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இச்சாலையின் வழியாக திருப் பத்தூர், திருவண்ணாமலை, அரூர் ஆகிய பேருந்துகள் பேருந்து நிலையம் வருகின்றன. மேலும், இச்சாலையில் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள், அரசு பள்ளிகள் உள்ளன. பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இச்சாலையில் மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி கிளை எதிரே பாதாளா சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கடந்த 3 மாதங்களாக கழிவுநீர் சாலையி லேயே வழிந்தோடி, குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் இவ்வழியாக நடந்து செல்லும் மக்கள், கழிவுநீரினால் வழுக்கி கீழே விழுந்து காயமுறுகின்றனர். மேலும், வாகனங்கள் செல்லும் போது நடந்து செல்லும் மக்கள் மீது கழிவுநீரை வாரி இறைக்கின்றனர். பாதாள சாக்கடை கால்வாயை சீர்படுத்த வலியுறுத்தி அப்பகுதியில் உள்ள வணிகர்கள் நகராட்சி நிர்வா கத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும், 1077 என்ற புகார் எண்ணில் மாவட்ட நிர்வாகத்திடம் 10 முறை புகார் தெரிவித்தும் கண்டும் காணாமல் உள்ளனர். பாதாள சாக்கடையை சீரமைக்காவிட்டால் நகராட்சி அலுவல கம் முன்பு போராட்டம் நடத்துவோம் என வணிகர்கள் தெரி வித்துள்ளனர்.
பெண் மீது தாக்குதல் - 3 பேர் மீது வழக்கு
சேலம், ஜன.3- வாழப்பாடி அருகே பெண்ணை சரமாரி யாக தாக்கிய 3 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் சம்பவத்தில் தொடர்புடை யவர்களை தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் மனைவி சங்கீதா (37). இவர், கடந்த டிச.31 ஆம் தேதியன்று தனது மகன் சூரியபிரகாஷ், தங்கை மகன் மணிகண்டன் ஆகியோருடன் பாப்பநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்தனர். அப்போது அவ்வ ழியே இருசக்கர வாகனத்தில் வந்த தரன் என்பவர், அங்கிருந்த நபர்கள் மீது மோதுவது போல் பக்கத்தில் வந்து திரும்பியுள்ளார். இதனை சங்கீதாவும், மணிகண்டனும் தட் டிக்கேட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த தர னின் உறவினரான ரகு மனைவி செல்வி (40), முருகன், செல்வராஜ் ஆகியோர், “அப்படி தான் வண்டியில் வருவார்கள்” எனக்கூறி சங் கீதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதில், சங்கீதாவை 3 பேரும் சேர்ந்து சரமாரி யாக அடித்து உதைத்தனர். இதனால் படு காயமடைந்த சங்கீதா பெத்தநாயக்கன் பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி பெண்ணை தாக்கிய செல்வி, முருகன், செல்வராஜ் ஆகிய 3 பேர் மீதும் தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.
கல்லூரியில் பள்ளி மாணவர்கள் களப்பயணம்
தருமபுரி, ஜன.3- 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கான கல்லூரி ஆர்வமூட்டல் களப்பயண நிகழ்ச்சி யினை தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி புதனன்று தொடங்கி வைத்தார். உயர்கல்வியின் அவசியத்தை உணர்த்தி டும் பொருட்டு, தருமபுரி மாவட்டத்திலுள்ள 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களை கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்று, கல் லூரி ஆர்வமூட்டல் களப்பயண நிகழ்ச்சி ஜன.3, 4,5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடை பெற உள்ளது. அதன்படி, தருமபுரி மாவட் டத்தில் 107 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 12 ம் வகுப்பு பயிலும் 3745 மாணவர் களுக்கு உயர்கல்வி பயில ஆர்வமூட்டல் சார்ந்து கல்லூரி வளாகம் கல்லூரியில் செயல்படும் பல்வேறு துறைகள், வகுப்பறை கள், கலையரங்கம், நூலகங்கள், விளை யாட்டு மைதானங்கள் ஆகியவை அறிந்து கொள்ள களப்பயணம் மேற்கொள்ள திட்ட மிடப்பட்டு புதனன்று தொடங்கப்பட்டது. இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி கலந்து கொண்டு, களப் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நேரடி கொள்முதல் நிலையத்தில் ராகி கொள்முதல்
சேலம், ஜன.3- மேட்டூர் மற்றும் ஓமலூரில் திறக்கப்படவுள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் ராகி கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சேலம் மாவட்டத்தில் மேட்டூர் வட்டம், மேச்சேரி அருகில் பொட்டனேரி கிராம வறுமை ஒழிப்பு சங்க கட்டடம் மற்றும் ஓமலூர் வட்டம், பி.நல்லாகவுண்டன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டட வளாகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நேரடி ராகி கொள்முதல் நிலையம் திறக்கப்பட உள்ளது. மேலும், ராகி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,846 (ஒரு கிலோ ரூ.38.46) என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகின்றது. கொள்முதல் செய்யப்படும் ராகிக்கு உரிய தொகையினை விவசாயிகளின் வங்கி கணக்கில் எவ்வித பிடித்தமுமின்றி நேரிடையாக செலுத்தப்படுகிறது. இதனை மேட்டூர் மற்றும் ஓமலூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் பயன்படுத்தி, தாங்கள் விளைவித்த ராகியினை நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 99445 76870, 99944 72138, 94431 18108 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேங்கும் கழிவுநீரால் நோய்த்தொற்று பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மறியல்
சேலம், ஜன.3- வாழப்பாடி அருகே உள்ள ஆத்துமேடு பகுதியில் கழிவு நீர் தேக்கத்தால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட் டுள்ளதால், இதனை கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வா கத்தை கண்டித்து அப்பகுதி பெண்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சி, 15 ஆவது வார்டுக்குட்பட்ட காமராஜர் நகர், ஆத்துமேடு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றர். இப் பகுதியில் முறையான அடிப்படை வசதி ஏற்படுத்தி தராததால், குறிப்பாக சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி யில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் அதிகமாக உற் பத்தியாகி, நோய்த்தொற்று பரவும் அபாய நிலை ஏற்பட்டுள் ளது. இதனிடையே, பெண் மாற்றுத்திறனாளி வீட்டின் முன்பு குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீரை கடந்து செல்ல, கற்கள் போடப்பட்டிருந்தது. அதன் மீது நடந்து சென்றபோது, நிலை தடுமாறி கழிவுநீர் குட்டையில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடமும், வார்டு கவுன்சிலரிடமும் புகாரளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் கை குழந்தையுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வாழப் பாடி போலீசார் சாலை மறியலை கைவிடுமாறு சமாதானப் படுத்தினர். மேலும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என உறுதியளித்தனர்.
வீடு புகுந்து நகை திருடிய வாலிபர் கைது
தருமபுரி, ஜன.3- கடத்தூர் அருகே லாரி ஓட்டுநரின் வீட்டு பூட்டை உடைத்து நுழைந்து, 3 பவுன் நகையை திருடிச்சென்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள தின்ட லானூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (48). லாரி ஓட்டுந ரான இவர் வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டார். இவ ரது மனைவி வன்னியக்கொடி, கடத்தூர் அடுத்த அய்யம் பட்டியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து வன்னியக்கொடி வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த மூன்றே கால் பவுன் நகை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பெருமாள், கடத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் சம் பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்திய போலீசார், நகை திருட்டில் ஈடுபட்ட சில்லாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த விஜய் (26) என்பவரை கைது செய்தனர். தெடர்ந்து அவரை நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
நிறுத்தத்தில் நிற்காத பேருந்துகள் பொதுமக்கள் கடும் அவதி
உடுமலை, ஜன.3- உடுமலை நகராட்சியால் அறிவிக்கபட்ட பேருந்து நிறுத் தங்களில் நிற்காமல் வேறு இடத்தில் நிற்க்கும் பேருந்து களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என பயணி கள் குற்றம் சாட்டியுள்ளனர். யூனியன் ஆபிஸ் பழைய பேருந்து நிறுத்தும் பகுதியில் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், இஎஸ்ஐ மருத்துவ மணை, அரசு ஊழியர்கள் குடியிருப்பு, வணிக வளாகம் மற் றும் உடுமலை மூணார் செல்லும் முக்கிய சாலையில் இருக்கும் ரயில்வே மேம்பாலம் ஆரம்பிக்கும் குறுகிய சாலை யில் இருந்த பேருந்துகள் நின்று செல்வதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து, கடந்த வருடம் நகராட்சி நிர்வாகம் உடுமலையில் இருந்து செல்லும் பேருந்துகள் எஸ்.என்.ஆர் நகர் நுழைவாயில் எதிராகவும்,மூணார், அமராவதி அணை மற்றும் திருமூர்த்திமலையில் இருந்து உடுமலை வரும் பேருந்துகள் காம்மாச்சியம்மன் கோவில் எதிரே நிற்று செல் லும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. ஆனால், நகராட்சி நிர்வாகம் அறிவித்த இடத்தில் பேருந்துகள் நிற்கா மல் பழைய இடத்தில் நின்று செல்வதால் மீண்டும் போக்குவ ரத்து நெரிசல் ஏற்படுகிறது. உடனடியாக நகராட்சி நிர்வா கம் புதிதாக அறிவிக்கப்பட்ட இடத்தில் பேருந்து நிழற் குடையை அமைத்து பேருந்துகளை அந்த இடத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தெரி வித்தனர்.
போலி மருத்துவர் கைது: மருந்துக்கடைக்கு சீல்
திருப்பூர், ஜன.3- திருப்பூரில் மருத்துவம் பார்த்து சிகிச்சை அளித்த போலி மருத்துவரை கைது செய்த போலீசார், மருந்துக்கடைக்கும் சீல் வைத்தனர். திருப்பூர், முருகம்பாளையம் பகுதியில் போலியாக மருத் துவம் பார்த்து சிகிச்சை அளிப்பதாக சுகாதாரத்துறை அதிகாரி களுக்கு புகார் வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் கனகராணி, வீரபாண்டி காவல் துணை ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் அடங்கிய குழுவினர் முருகம்பாளையம், சூர்யகிருஷ்ணா நகர் பகுதி யில் செயல்பட்டு வரும் பிரகாஷ் மெடிக்கலில் ஆய்வு செய்த னர். இதில் ஜோலி அகஸ்டின் (64) என்பவர் நோயாளிக ளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போது, அவர் உரிய கல்வி தகுதியின்றி ஆங்கில மருந்துகளை பயன்படுத்தி சிகிச்சை அளித்து வந்ததும், மேலும் நோயாளிகளுக்கு ஊசி மருந்து செலுத்தியதும் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து மெடிக்கலுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், உரிய கல்வி தகுதியின்றி சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர் ஜோலி அகஸ்டின் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் கனகராணி வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் ஜோலி அகஸ்டினை கைது செய்தனர்.
குப்பைகளை அகற்றாத பேரூராட்சி நிர்வாகம்
உடுமலை, ஜன.3- மடத்துக்குளம் பேரூராட்சி பகுதியில் அகற்றப்படாத குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும், பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பைகளை அகற்றி மருந்துகளை தெளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. மடத்துக்குளம் தாலூகாவில் வட்டாட்சி யர் அலுவலகம், நீதிமன்றம், தாலூகாஅரசு மருத்துவமணை, ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலை யம் என அனைத்து அரசு அலுவலகங்கள் உள் ளன. மேலும், திண்டுக்கல் மாவட்ட எல்லை யாக அமராவதி ஆறு ஆகியவை மடத்துக் குளம் பேரூராட்சியில் அமைந்துள்ளது. இந்த பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டு களில் ஐம்பாதாயிரத்திற்கும் மேற்பட்ட மக் கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தின மும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயி ரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். ஆனால், முறையாக சுகாதாரத்தை பராம ரிக்க வேண்டிய பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்வது இல்லை. பேருந்து நிலையம், ரயில் நிலையத்தில் குப்பைகளை எடுக்காத நிலையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் தூய் மைப் பணியாளர்கள் குப்பைகளை எடுக்க மாதம் ஒரு முறைதான் வருவதால் குப்பை களை திறந்த வெளியில் மக்கள் போட்டு விடு கிறார்கள். இதனால், குப்பைகள் காற்றில் பறந்து தெருவெங்கும் பரவிக்கிடக்கிறது. மேலும், சில சமூக விரோதிகள் குப்பைக ளுக்கு தீ வைத்து செல்வதால் பகுதி முழுவ தும் நச்சுப்புகையால் மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. மேலும், தேங்கிக் கிடக்கும் குப்பைகளில் இருந்து வரும் துர் நாற்றம் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் உடனுக்கு டன் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்து கின்றனர்.
இடத்தை காலி செய்யும் நோட்டீசை ரத்து செய்திடுக
திருப்பூர், ஜன.3- இடத்தை காலி செய்யும் உத்தரவை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் அருகே சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வேலாயுதம்பாளையம் ஏ.டி. காலனியில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 60 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் இவர்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அந்த பகுதியை காலி செய்யும்படி நோட்டீஸ் வழங்கியுள்ளதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அதே பகுதியில் குடியிருக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காலி குடம், பாய் உள்ளிட்ட பொருட்களுடன் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானப்படுத்தினர்.
சேவூரில் இன்று மின்தடை அறிவிப்பு
அவிநாசி, ஜன.3- சேவூர், வடுகபாளையம் ஆகிய துணை மின் நிலையங்க ளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்ப தால் வியாழனன்று (இன்று) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவிநாசி மின் வாரியத்தின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இதன்படி, சேவூர், ராமியம்பாளையம், அசநல்லிப்பாளை யம், புலிப்பார்,போத்தம்பாளையம், சந்தைப்புதூர், பந்தம் பாளையம், சூரிபாளையம், பாப்பங்குளம், வாலியூர், தண் ணீர்பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சை தாமரைகுளம், சாவக்கட்டுப்பாளையம், நடுவச்சேரி, சாலைப்பாளையம், கருக்கங்காட்டுப்புதூர், தளிஞ்சிப்பா ளையம், மாரப்பம்பாளையம், வடுகபாளையம், அய்யம் பாளையம், நஞ்சை தாமரைகுளம்,பிச்சாண்டாம்பாளையம், ஒட்டர்பாளையம், ஒலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் சேவை முகாம்
உடுமலை, ஜன.3- மடத்துகுளத்தில் 10 ஆம் தேதி சர்க்கார் கண்ணாடிப் புத்தூர் கிராத்திற்கு (வருவாய் கிராம்) உட்பட்ட பொது மக்களுக்காக மாவட்ட ஆட்சித் தலைவரின் மக்கள் சேவை முகாம் மடத்துக்குளம் சூர்யா திருமண மண்டபத்தில் நடை பெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் அனைத்து விதமான தேவை களுக்கும் மனு கொடுத்து தீர்வை பெறலாம் என்றும், மேலும், 4 ஆம் தேதி (இன்று) வியாழக்கிழமை முதல் பொதுமக்க ளுக்கு தேவைக்கான மனுக்களை மடத்துக்குளம் பேருந்து நிலையத்தில் இருக்கும் சர்க்கார் கண்ணாடி புத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் மனுக்களை கொடுத்து பதிவு செய்து கொள்ளாலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியரிடம் வாகன ஓட்டுனர்கள் மனு
திருப்பூர், ஜன.3- எதிர்பாராமல் நடைபெறும் விபத்திற்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ7 லட்சம் அபராதம் என்கிற ஒன்றிய அரசின் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். இம் மனுவில் தெரிவித்துள்ளதாவது, தற்போது ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள (ஹிட் அன்ட் ரன்) சட்டத்தின்படி எதிர்பாராமல் ஏற்படும் விபத்துக்களின் போது, முறையாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் தராமல் சம்பவ இடத்தை விட்டு ஓடும் டிரைவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்ட னையும், ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பலரின் எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இந்த புதிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்
உதகை,ஜன.3- நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பழங்குடியினர் கிராமத்தில், பழங்குடியின மக்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. போத்துக்கொல்லி பழங்குடியினர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இம்முகாமில், பழங்குடியின மக்க ளுக்கு ஆதார் அட்டை பதிவு செய்தல் மற்றும் திருத்தங்கள் செய்தல், சாதி சான்றிதழ் பதிவு செய்தல், அரசின் மருத்துவ காப்பீட்டு அட்டைக்கு பதிவு செய்தல், தோட்டக்கலை துறை யின் கடன் அட்டைகள் பதிவு செய்தல் மற்றும் வங்கி கணக்கு துவங்குதல், மருத்துவ ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கனரா வங்கி மேலாளர் விஷ்ணு, தோட்டக்கலை துறை உதவி அலுவலர் வினோத்குமார், வி.ஏ.ஓ. யுவராஜ் மற்றும் சுகாதாரத் துறையினர், பழங்குடி யின பயனாளிகள் பங்கேற்றனர். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை வருவாய்த்துறையினர் செய்திருந்தனர்.
பனிப்பொழிவால் மலர்களின் இதழ்கள் உதிர்வு
உதகை,டிச.3- ஊட்டியில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதன் கார ணமாக ரோஜா செடிகளில் மலர்கள் உதிர்ந்தும், காய்ந்தும் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மலர்களை காணமுடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். உதகை மாவட்டத்தில் தோட்ட கலைத்துறை கட்டு பாட்டில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, உள்ளிட்ட பூங்காக்கள் உள்ளன. இங்கு, சுற்றுலா பயணிகளை கவ ரும் வகையில் பல வகையான மலர் நாற்றுகள் நடவு செய் யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊட்டி விஜயநகரம் பகுதியில் அமைந்துள்ள ரோஜா பூங்கா வில் 1500 ரகங்களை கொண்ட 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் உள்ளன. இங்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்கு மதி செய்யப்பட்ட பாரம்பரியம்மிக்க ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நி லையில் கடந்த மாதம் பெய்த மழை மற்றும் தற்போது நில வும் பனிப்பொழிவு காரணமாக பூங்காவில் உள்ள பெரும்பா லான ரோஜா செடிகளில் மலர்கள் உதிர்ந்தும், காய்ந்தும் காணப்படுகின்றன. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். பெரும் பாலான செடிகளில் ரோஜா மலர்கள் உதிர்ந்து காணப்ப டுவதால் செடிகளை கவாத்து செய்து பராமரிக்க தோட்ட கலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
வனவிலங்குகள் விபத்தில் இறப்பதை தடுக்க வனத்திற்குள் பழ மரங்களை நடவு செய்க
கோவை, ஜன.3- வனப்பகுதியில் வனவிலங்களுக்கு தேவையான நீர் ஆதாரத்தையும், உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில், பழ மர வகைகளை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மருதமலை, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களில் கூட்டம் கூட்டமாக குரங்குள் சாலை ஓரங்க ளில் நிற்பது வழக்கம். அவ்வாறு நிற்கும் குரங்குகளுக்கு, வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் பழங்கள் உள்ளிட்ட உண வுகளை வழங்குவதை வாடிக்கையாக வைத் துள்ளனர். இதனால், தினமும் உணவை எதிர்பார்த்து சாலை ஓரத்தில் நிற்கும் குரங் குகள், சில சமயங்களில் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறு கையில், தற்போதைய சூழலில் வனப்ப குதியில் குரங்குகளுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. பல்லுயிர்களுக்கு பசியை போக்கும் வகையில் காடுகளில் தாவ ரங்கள் மற்றும் மரங்கள் செடிகள் வளர்க் கப்படுவதில்லை. தொழிற்சாலைகளுக்கு தேவைப்ப டும் வகையிலான செடி, மரங்களே வளர்க்கப்படுகின்றன. இதனால் குரங்கு கள் உணவு தேடி சாலையில் வரும் வாக னங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இதுபோன்ற விபத்துக்கள் தவிர்க்க வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் வாகனங் களை இயக்க வேண்டும். விபத்தில் காயம் அடையும் குரங்கு உள்ளிட்ட வனவிலங்கு களுக்கு முதலுதவி செய்வதற்கு மருத் துவக் குழு நியமிக்க வேண்டும். மேலும், பல்லுயிர்களுக்கான உணவு தேவை களை பூர்த்தி செய்யும் வகையில், வனப்ப குதிகளில் தேவையான நீர் ஆதாரத்தையும், செடி, கொடி, பழங்கள் போன்ற உணவு வகைகளையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
சுற்றுலா பயணிகளை கவரும் டாம் அன் ஜெர்ரி
உதகை, ஜன.3- ஊட்டி தாவரவியல் பூங்காவில் ‘டாம் அன் ஜெர்ரி’ பொம்மைகள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. இது, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. உதகை மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் உதகை யில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா விற்கு வருகின்றனர். பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகை யில் எப்போதும் பூங்காவில் மலர்கள் பூத்துக் குலுங்கும் வகையில் பூங்கா முழுவதிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் தற்போது முதல் சீசனுக்காக பூங் காவை தயார் செய்யும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருவதால், பூங்காவில் மலர்களின்றி காட்சியளிக்கிறது. இந்நிலையில், பள்ளி அரையாண்டு விடுமுறை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் கடந்த 10 நாட்களாக ஊட்டிக்கு வந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில், ஊட்டி தாவர வியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணி களை மகிழ்விக்கும் பொருட்டும், 2024ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில் பூங்கா குளம் அருகே ‘டாம் அன் ஜெர்ரி’ பொம் மைகள் மலர்களால் அலங்கரித்து வைக் கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. அதன் அருகே சுற்றுலா பயணிகள் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
காவலர்களுக்கான யோகா பயிற்சி
கோவை, ஜன.3- கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் காவலர்களுக்கான யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. கோவை மாநகர் மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் காவலர்களுக்கான 6 நாள் யோகா பயிற்சி வகுப்பு பி.ஆர்.எஸ். மைதானத்தில் செவ்வாயன்று தொடங் கப்பட்டது. பயிற்சி வகுப்பை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தினமும் காலை 6.45 மணி முதல் 7.45 மணி வரை யோகா பயிற்சி வகுப்பு நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் கூறுகையில், ஆயுதப் படையில் பணியாற்றி வரும் போலீசாருக்கு யோகா பயிற்சி அளிப்பதன் மூலம் உடல், மன நலம் மற்றும் உணவு மேலாண்மை, ஆரோக்கிய வாழ்வியல் பெற உதவியாக இருக்கும் என்றார். இந்த நிகழ்ச்சியில், துணை ஆணையர் சண்முகம், ஆயுதப் படை உதவி ஆணையர் சேகர், ஆய்வா ளர்கள், உதவி ஆய்வாளர்கள், போலீசார் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு கண் மற்றும் குடல் பரிசோதனை முகாமை காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
மக்கள் மருந்தகத்தில் வீரியம் குறைந்த மருந்துகள்?
கோவை, ஜன.3- ஒன்றிய அரசின் உதவியுடன் செயல்படும் மக்கள் மருந்தகத் தில் வீரியம் குறைந்த மருந்துகள் விற்கப்படுவதாக அகில இந்திய மருந்து விற்பனை பிரதிநிதிகள் சம்மேளனம் குற்றம்சாட்டியுள் ளது. ஒன்றிய அரசால் கடந்த 2015ல் தொடங்கப்பட்டதுதான் பிரதமரின் பாரதீய மக்கள் மருந்தக திட்டம். சாதாரண மக்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை வழங்குவ தற்கான தொலைநோக்கு பார்வை யுடன் நாடு முழுவதும் 739 மாவட் டங்களில் செயல்படுத்தப்பட்டது. இதுபோன்ற மருந்தகங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந் துகள் மற்றும் சானிடரி நாப்கின்கள், அறுவை சிகிச்சை சாதனங்கள் என அனைத்துமே மலிவு விலை யில் கிடைக்கும். தற்போது மருந் துக் கடைகள் 8735 ஆக உயர்துள் ளது. வரும் 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 10,000 மருந்துகடைக ளாக உயர்த்தவும் தீர்மானிக்கப் பட்டுள்ளது. நடப்பாண்டில் மக்கள் மருந்தகங்களில் 100 கோடி ரூபாய் அளவுக்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து அகில இந்திய மருந்து விற்பனை பிரதிநிதிகள் சம்மேளனத்தின் அகில இந்திய தலைவர் ரமேஷ்சுந்தர் கூறுகை யில், தமிழகத்தில் குறிப்பாக கோவை மாவட்டத்தில் சுமார் 50 பாரதீய மக்கள் மருந்தகங்கள் உள்ளது. அதிகரித்து வரும் மருந்து களின் விலையேற்ற பிரச்சினை காரணமாக அதிகமானோர் இந்த மருந்தகங்களை மக்கள் நாடு கின்றனர். ஆனால், விற்பனை செய் யப்படும் மருந்துகள் வீரியம் குறைந்ததாக இருப்பதாக பல ரும் குற்றம் சாட்டுகின்றனர். ஒன்றிய அரசின் நிதியுத வியுடன் செயல்படும் மக்கள் மருந் தகத்தில் கிடைக்கும் பெரும்பா லான மருந்துகள் பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்வதோடு, சில தனியார் நிறுவனங்களிடமும் கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக தெரிகிறது. இந்த மருந்தகங்கள் துவங்க பாஜக கட்சியினருக்கு மட்டுமே அனுமதி கிடைப்பதாக வும் கூறுகின்றனர். இந்த மருந்து கடைக்கு ஒன்றிய அரசு கடனுதவி யும், மானியமும் வழங்கியும் வரு கிறது. உண்மையாக ஏழைகளுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கசெய்ய வேண்டும் என்பது நோக்கமாக இருப்பின், முதலில் அத்தியாவசியத் தேவையான மருந்துகளுக்கு ஜிஎஸ்டியை ரத்து செய்யவேண்டும். அதோடு விலை நிர்ணயம் செய்வதிலும் கட்டுப்பாடு விதிக்கவேண்டும். மருந்து நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு தகுந்தாற்போல் விலையினை நிர்ணயிக்க அனுமதி அளித்து விட்டு, நூறு மருந்துகடைகளுக்கு இரண்டு கடைகள் பெயரளவிற்கு மக்கள் மருந்தகம் என்ற பெயரில் பாதி விலைக்கு தருவது மக்களை ஏமாற்றும் செயல் என்றார்.
குடியிருப்புக்குள் புகுந்த காட்டுயானைகள்
ஈரோடு, ஜன.3- தாளவாடி மலைப் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள், கூட்டமாக சாலையை கடந்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத் தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இரவு நேரத் தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானை கள், ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்ப டுத்துவது தொடர் கதையாக உள்ளது. இதற்கிடையே செவ்வாயன்று, தாளவாடி மலைப்ப குதி மல்லன்குழி கிராமத்தை ஒட்டியுள்ள கர்நாடக வனப்பகு தியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள், கிரா மத்தில் புகுந்து விவசாய விளை நிலங்களில் உலாவின. காட்டு யானைகள் கூட்டத்தை கண்டு அச்சமடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சத்தம் போட்டு யானைகளை விரட்டி னர். இதனைக்கண்டு மிரண்ட யானைகள் மானாவாரி நிலங் கள் வழியாக சாலையை கடந்து வனப்பகுதியை நோக்கிச் சென்றன. காலை நேரத்தில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து நடமாடியதால் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந் துள்ளனர். கோவை இதேபோன்று, கோவை அருகே நரசிபுரம் வனப்பகுதி யில் இருந்து வெளியேறிய மூன்று காட்டு யானைகள், விரா லியூர் கிராமத்திற்குள் புகுந்தது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் மூன்று யானைக ளையும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.
அமைச்சர், ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
ஈரோடு, ஜன. 3- ஈரோட்டில் கீழ் பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை தொடங்க நீதிமன்றம் உத்தரவிட்டும், திட்டத்தை தொடங்க காலதாமதம் செய்யும் அமைச்சர் முத்துச்சாமி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட வர்கள் மீது நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக விவசாயிகள் தெரிவித் துள்ளனர். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை யிலிருந்து தொடங்கும் கீழ் பவானி பாசன வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டம் என மூன்று மாவட்டங்களில் சுமார் 2லட்சம் ஏக்கர் விவசாய விளை நிலங்கள் பாசன வசதி பெருகின்றன. இந்நிலையில், ரூ.720 கோடி மதிப்பீட்டில் வாய்க்காலில் கான் கிரீட் அமைக்கும் திட்டம் செயல்படுத்த நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இந்த திட்டத்திற்கு ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றொரு தரப்பு விவ சாயிகள் திட்டத்தை செயல்படுத்த வேண் டும் எனவும் அரசை வலியுறுத்தி வருகின்ற னர். இந்நிலையில், நீதிமன்றம் மூலம் வழக்கு தொடரப்பட்டது. அரசு அறிவித்த திட் டத்தை செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத் தரவிட்டது. இருப்பினும் ஒருபகுதி விவசா யிகள் எதிர்ப்பின் காரணமாக திட்டம் செயல் படுத்த முடியாத சூழல் உள்ளது. இந்நிலை யில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத் தகோரி ஈரோடு மாவட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில், கீழ் பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் 50க்கும் மேற்பட்ட விவசா யிகள் கோரிக்கை மனு வழங்கினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்கத்தினர், கான்க்ரீட் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நீதி மன்றம் உத்தரவிட்டும் செயற்பொறியாளர் நடவடிக்கை எடுக்கவில்லை. அமைச்சர் முத்துசாமி, ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா முறையாக அனைத்து விவசாயிகளையும் அழைத்து பேசாமல் ஒரு தரப்பு விவசாயி களை மட்டும் அழைத்து பேசி அறிக்கை வெளி யிட்டுள்ளனர். இதனால் கீழ் பவானி சீரமைப்பு பணிகள் விரைந்து தொடங்கவும், மாவட்ட நிர் வாகம் வெளியிட்ட செய்தி எண் 75ஐ திரும்பப் பெற வேண்டும். மேலும் கீழ் பவானி சீரமைப்பு பணிகள் தொடங்க வில்லையெனில், அமைச் சர் முத்துச்சாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கார உள்ளிட்ட நபர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நடவ டிக்கை எடுக்கப்படும் என்றனர்.