திருப்பூர், ஏப்.4 - திருப்பூர் அரிசிக் கடை வீதியில் 4 மாதங்களாக நீடித்து வரும் சுமைப்பணித் தொழிலாளர் கூலி உயர்வு பிரச்சனை யில் சுமூகத் தீர்வு காண வலியுறுத்தி தொழி லாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி னர். இப்பிரச்சனயைில் தொழிலாளர் துறை அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் எஸ்.வினீத் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் அரிசிக் கடை வீதியில் அரிசி, தானியங்கள் மற்றும் மளிகை சாமான் கள் மொத்த வியாபாரம் செய்யும் மையமாக இருந்து வருகிறது. இங்கு சுமார் 10 வியாபார நிறுவனங்கள் செயல்படு கின்றன. இதில் 70 தொழிலாளர்கள் கடந்த 40 ஆண்டு காலமாக சுமைகளை ஏற்றி, இறக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்ற னர். இந்த தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை கூலி உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்றி அமல்படுத்தப் படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான கூலி உயர்வு பேச்சு வார்த்தை தொடங்கி நான்கு மாத காலம் ஆகிறது. எனினும் வியாபாரிகள் சங்கத் தரப்பினர் குறிப்பிட்ட சதவிகித கூலி உயர்வு தருவதாக ஒப்புக் கொண்டாலும், இந்த தொழிலாளர்கள் வழக்கமாக வாக னங்களில் இருந்து சரக்குகளை ஏற்றி, இறக்குவதில் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளனர். அதாவ சரக்கு களை இறக்குவதற்கு மட்டுமே இவர் கள் செய்ய வேண்டிய பணி, வாகனங் களில் ஏற்றுவதற்கு வேறு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியுள்ளனர். இது கடந்த 40 ஆண்டு காலமாக பின்பற்றப் பட்டு வரும் நடைமுறைக்கு எதிரானதா கவும், சீரான தொழில் சூழலை சீர்குலைக்கும் வகையிலும் உள்ளது என்று சுமைப்பணித் தொழிலாளர்கள் இந்த நிபந்தனைக்கு ஆட்சேபணை தெரி வித்திருப்பதுடன், சரக்குகளை ஏற்றி, இறக்கும் பணியை தொடர்ந்து செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வற் புறுத்தி வருகின்றனர்.
மேலும், கடந்த 40 நாட்களாக தாங்கள் வேலை செய்ததற்கான கூலியைப் பெறா மலேயே தொழிலாளர்கள் வேலை செய்து, கூலி உயர்வு போராட்டத்தையும் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இப்பிரச்சனையில் வியாபாரிகள் தரப்பில் சுமூகத் தீர்வு காண வலியுறுத்தி, திங்களன்று (ஏப்.4) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டம் அரிசிக் கடை வீதியில் நடைபெற்றது. சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளரும், அரிசிக்கடை வீதி பகுதி தலைவருமான சதாசிவம் தலை மையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டத்தில் சங்க நிர்வாகி முருகசாமி, சிஐடியு சுமைப்பணி சங்க மாவட்டத் தலைவர் எம்.ராஜகோபால், மாவட்டச் செயலாளர் கே.உண்ணிகிருஷ்ணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். சுமைப்பணி தொழிலாளர்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சங்க நிர்வாகிகள் எம்.ராஜகோபால், கே.உண்ணி கிருஷ்ணன், கே.ரங்கராஜ், சி.மூர்த்தி, சதா சிவம், முருகசாமி உள்ளிட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சி யர் எஸ்.வினீத்தை சந்தித்து இந்த தொழி லாளர் பிரச்சனையில் சுமூகத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித் தனர். இம்மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சி யர், உடனடியாக தொழிலாளர் துறை அதி காரிகள் இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தர விட்டார் என்று சிஐடியு திருப்பூர் மாவட் டச் செயலாளர் கே.ரங்கராஜ் தெரிவித் தார்.