உடுமலை, மார்ச் 9- தென் கொங்கு பகுதியில் கிடைத்த ஆயி ரத்திற்கும் மேற்பட்ட காசுகளே கரைவழி நாக ரிகத்தின் சாட்சியாகத் திகழ்கின்றன என்று உடுலையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கூறப்பட்டது. உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் ஜிவிஜி அரங்கில் கரைவழி நாடும், நாகரீகமும் எனும் கல்வெட்டுகள் மற்றும் கனிம வளங்கள் சார்ந்த இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் தலைமையில் சனி யன்று நடைபெற்றது. தொல்லியல் ஆய்வ றிஞர் மூர்த்தீஸ்வரி கரைவழி நாகரிகத்தின் மூன்று நூல்களையும் அறிமுகப்படுத்தி உரையாற்றினார். கரைவழியில் இருக்கும் பெருவழிகள் குறித்தும் கரைவழியில் இருக்கும் வளங்கள் குறித்தும், பொருந்தல் நாகரிகம், கொடும ணல் நாகரிகம் இந்த கரைவழி நாட்டுக்குச் சொந்தமானது என்றும் தொல்லியல் துறை யில் தமது 39 ஆண்டு கால அனுபவத்தில் கொங்கு நாட்டின் புராதனக் கோயில்கள் ஆய் வுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட அனு பவங்களை எடுத்துரைத்தார். கரைவழி எனப்படும் கல்லாபுரம் முதல் கடத்தூர் வரையிலான பகுதிகளில் உள்ள கல் வெட்டுகளை ஆவணப்படுத்தி நூலாக வெளி யிட்ட உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத் தின் பணிகளை வாழ்த்திப் பேசியதுடன் இது போன்ற அமைப்பு உள்ளுர் மட்டுமல்லாது உடுமலை தாண்டியும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் பேசினார். இதன்பின் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ப.க.பொன்னுசாமி பேசு கையில், கரைவழி பகுதியில் உள்ள நிலங்களில் ஏராளமான காசுகள் கண்டெடுக் கப்பட்டதையும், அந்தக் காசுகளை நாணய வியல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஏராள மாக சேர்த்து வைத்திருப்பதையும் கொங்கு நாட்டில் குறிப்பாக தென்கொங்கு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காசுகள் ஆவணப் படுத்தி இருப்பதையும், இந்தக் காசுகளே கரைவழி நாகரிகத்தின் சாட்சியாக இருப்ப தையும், அமராவதி கரைவழி என்பது இரண் டாயிரம் ஆண்டு கால நாகரிக வரலாற்றை உள்ளடக்கியது. இந்த வரலாற்றுக்குப் பெரு மைமிக்க சொந்தக்காரர்கள் உடுமலைப்பேட் டைக்காரர்கள் என்பதையும் குறிப்பிட்டுப் பேசினார். சிறப்பு விருந்தினர் கார்த்திகேய சிவ சேனாபதி பேசும்போது,
மண் சார்ந்த புத்தகங் களை உருவாக்கும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினரின் பணி மகத்தானது என் றும், இது போன்று உண்மையான மக்கள் வர லாற்றை பதிவு செய்வோர் மிகவும் குறைந்து வருகிறார்கள் என்றும், இது போன்ற நூல் களை மக்கள் வாங்கிப் படிக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு நாம் சொத்து சேர்க் காவிட்டாலும் இந்தப் புத்தகங்கள் கொண்டு போய் சேர்க்க வேண்டும். இந்தக் கரைவழி யும் நம்முடைய தலைமுறை தாண்டி அடுத்த தலைமுறைக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டிய கட்டாயம் நம்முடையது எனவும் குறிப்பிட்டார். இந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு உடு மலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் பொறுப் பாளர்கள் வி.கே.செல்வராஜ், வி.கே. சிவக்குமார், சி.ராஜசுந்தரம், வை.விஜய லட்சுமி, முனைவர் மதியழகன், ராபின், மற் றும் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்த னர். நிகழ்ச்சியில் திராளான பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் கள் கலந்து கொண்டனர். நிறைவாக நூலாசி ரியர் அருட்செல்வன் நன்றி கூறினார்.