திருப்பூர், நவ. 19 - திருப்பூர் பாண்டியன் நகரில் இந்திய மற் றும் வெளிநாட்டு நாணயங்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. பாண்டியன் நகர் மாநகராட்சி தொடக் கப் பள்ளியில் இந்த கண்காட்சியை நொய் யல் இலக்கியம் மையத்தின் பொறுப்பா ளரும், இப்பள்ளியின் புரவலருமான இளங் ஞாயிறு திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கி னார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவி, இரண்டாவது வட்ட மாமன்ற உறுப்பினர் மாலதி கேபிள்ராஜ், முத்து குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இக்கண்காட்சியில் சங்க கால நாணயங் கள், 1 அணா, 1/2 அணா, ஒரு பைசா, இரண்டு, மூன்று, ஐந்து பைசா, அனைத்து வகையான நாணயங்கள், இந்திய அரசால் வெளியிடப் பட்ட அனைத்து சிறப்பு நாணயங்கள் மற்றும் இந்தியாவின் பழைய 1,2,5, 10,20 50,100,500, 1000 ஆகிய ரூபாய் தாள்கள் காட்சிக்கு வைக் கப்பட்டது. இத்துடன் இலங்கை, ஜப்பான், அமெ ரிக்கா, அரபு, நேபாளம், சிங்கப்பூர், மலே சியா, இந்தோனேஷியா போன்ற வெளி நாட்டு நாணயங்கள் மற்றும் டாலர்கள் கண் காட்சிக்கு வைக்கப்பட்டது. இக்கண்காட் சியில் 500க்கும் மேற்பட்ட நாணயங்களும், 100க்கும் மேற்பட்ட ரூபாய் தாள்களும் பார் வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இக்கண் காட்சியை பெற்றோர்களும், மாணவர் களும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். பெற் றோர், மாணவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இந்த கண்காட்சி இரண்டு நாட்க ளுக்கு வைக்கப்பட்டிருக்கும் என்று பள்ளி புர வலர் இளங்ஞாயிறு தெரிவித்தார்.