districts

img

உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு மாரத்தான்

கோவை, டிச.3- கோவையில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்பு ணர்வு மாரத்தான் போட்டியை, கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பவானீஸ்வரி துவக்கி வைத்தார். உலக அளவில் உடல் உறுப்பு தானம் என்பது மிக அவசி யமான ஒன்றாக உள்ளது. இந்த உடல் உறுப்பு தானம்  அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக, கோவை கே. எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மாரத் தான் நடைபெற்றது. இதனை கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பவானீஸ்வரி கொடியசைத்து துவக்கி வைத்தார். சூலூர் பகுதியில் தொடங்கி அவிநாசி சாலை வரை  செல்லும் 16 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினர்.