கோவை, ஜன.10- கோவையில் நடைபெற்ற மாநில அளவி லான வாள் வீச்சு சண்டை போட்டியில், ஏராள மான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண் டனர். தமிழ்நாடு வாள் வீச்சு சங்கம் சார்பில், மாநில அளவிலான வாள் வீச்சு சாம்பியன் ஷிப் போட்டி,கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள கதிர் கலை அறிவியல் கல்லூரி வளா கத்தில் நடைபெற்றது. அசாமில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வதற்கான தேர்வு போட்டிக ளாக நடைபெற்ற இப்போட்டியில், கோவை, மதுரை, கன்னியாகுமரி, திருச்சி என தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர், வீராங்க னைகள் கலந்து கொண்டனர். இரு பாலருக்கும் நடந்த இப்போட்டி யில் பாயில், சேபர், எப்பி ஆகிய மூன்று பிரிவின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. முன்னதாக போட்டிகளை கல்லூரியின் தலைவர் கதிர், செயலாளர் லாவண்யா கதிர், முதல்வர் கற்பகம் ஆகியோர் துவக்கி வைத்த னர். கடந்த ஒலிம்பிக்கில் வாள் வீச்சு போட்டி யில் தமிழக வீராங்கனை பவானி தேவி இடம் பிடித்து விளையாடிய நிலையில், தற் போது பெண்கள் பலர் வாள் வீச்சு போட்டி யில் ஆர்வமுடன் கலந்து கொண்டு விளை யாடி வருவது குறிப்பிடத்தக்கது.