கோவை, ஜன.31- சென்னையில் நடைபெற்ற “முய் தாய் பாக்சிங்” போட் டியில் கோவையை சேர்ந்த மாணவர்கள் பதக்கங்களை வென்று சாதனை புரிந்தனர். இந்திய மற்றும் தமிழ்நாடு முய் தாய் பாக்சிங் அமெச் சூர் சங்கத்தின் சார்பாக மூன்றாவது மாநில அளவிலான போட் டிகள், அண்மையில் சென்னை ஆவடியில் நடைபெற்றது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம், ஈரோடு என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். வயது, எடை, ஓபன் என பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில், கோவை “ஆக்டகன் ஃபைட்ஸ்” கிளப்பைச் சேர்ந்த 15 பேர் கலந்து கொண்டு எட்டு தங்கம், ஏழு வெள்ளி என 15க்கும் மேற் பட்ட பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். இதே போல், இதில் மற்றொரு பிரிவான ப்ரோ பாக்சிங் போட்டியின் ஜூனியர் பிரிவில், கலந்து கொண்ட கோவையை சேர்ந்த நஃபீல் என்ற சிறுவன், இரண்டாம் இடம் பிடித்துள் ளார். இந்நிலையில் கோவை திரும்பிய மாணவ, மாணவி களுக்கு பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒலிம்பிக்கில் பார்வையாளர்கள் போட்டியாக ”முய் தாய்” நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டிகளை இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டாக அறி விக்க வேண்டும். தமிழகத்தில் பாக்சிங் போன்ற போட்டி களுக்கு தனி அரங்கம் அமைத்து தர அரசு முன் வரவேண் டும் என பயிற்சியாளர் பெரோஸ்பாபு கோரிக்கை விடுத் தார்.