கோவை, பிப். 16- தேசிய அளவிலான குவான் கி டோ சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங் களை வென்ற கோவை மாணவர்கள், வரவிருக்கும் உலக அளவிலான போட்டிகளுக்கு செல்வதற்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி யில் கடந்த 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தேசிய அளவிலான ஐந்தா வது குவான் கி டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 20 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து 25 மாணவர்கள் கலந்து கொண் டனர். குறிப்பாக, கோவை மாவட்டத் தில் இருந்து மட்டும் ஏழு மாணவர் கள் கலந்து கொண்டு, மொத்தம் 20 தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங் களை வென்று சாதனை படைத்துள்ள னர். அதில் இரண்டு பேர் கோவை அரசு பள்ளி மாணவர்கள் ஆவர். வெற்றி பெற்று பதக்கங்களை வென்ற மாணவர்கள் மொரோக்கோ வில் ஏப்ரல் மாதம் உலக அளவில் நடை பெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். பதக்கங்களை வென்று திரும்பிய கோவை மாணவர்களுக்கு ரயில் நிலையத்தில் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இது குறித்து பேசிய அரசு பள்ளி மாணவி இன்ஷிகா, தாங்கள் மொரோக்கோ செல்வதற்கு தமிழக அரசு உதவி புரிய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.