கோவை, ஏப்.21- கோவை புரூக்பீல்டு மால் எதிரே உள்ள பகுதியில், தனியாரால் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. கோவை புரூக்பீல்டு சாலை, காமரா ஜபுரம் சிஎம்சி காலனிக்கு செல்லும் பொதுப் பாதை கடந்த 30 ஆண்டுகாலமாக ஆக்கிர மித்திருந்தாக தனியார் நிறுவனத்திற்கு எதிராக புகார்கள் எழுந்தது. அதனைத்தொ டர்ந்து கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி ஆணையாளர் கடந்த 2022 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவுக்கு எதிராக தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற் றார். அந்த தடை உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் வழக்கு நடை பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் நீதிபதி சுப்ரமணியம் ராஜசேகர் அமர்வில் நடைபெற்ற இந்த விசார ணையில், பொது பாதை ஆக்கிரமிப்பை உட னடியாக அகற்ற உத்தரவிடப்பட்டது. உத்த ரவை தொடர்ந்து 21 சென்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 கடைகள் இன்று 4 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இந்த பணிகளை மாநக ராட்சி அலுவலர்கள் பார்வையிட்டனர். இதன் மூலம் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது. முன்னதாக சிஎம்சி காலனிக்கு செல்லும் பொதுப்பாதையை மீட்க வேண்டும் என சமூக நீதிக் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட முற்போக்கு அமைப்பு கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. இத னையடுத்து எதிர்தரப்பினர் தடை உத்தரவு பெற்றனர். இதற்கு எதிராக சமூக நீதி தூய்மை பணியாளர் சங்கத்தின் சார்பில் ராமன் என்பவர், மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில், நீதியரசர் சுப்ரமணி யம் ராஜசேகர் அமர்வு ஆக்கிரமிப்பை உட னடியாக அகற்ற உத்தரவிட்டுள்ளனர். பல ஆண்டுகளாக சமூகநீதி கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப் புகள் போராடியதன் விளைவாக ஆக்கிர மிப்பு அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. இந்த ஆக்கிரப்பு சுவரை அகற்றுகிற நட வடிக்கையின் போது சமூகநீதி கட்சியின் தலைவர் பன்னீர்செல்வம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைத் தலைவர் யு.கே.சிவஞானம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு நகரக்குழு உறுப்பினர் என். முருகேசன், வடகோவை காமராஜபுரம் கட்சி கிளையின் செயலாளர் இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநகராட்சியின் நிலம் ஆக்கிரமிக்கப்பட் டுள்ளது என்பதை ஊழல் எதிர்ப்பு இயக் கத்தின் தியாகராஜன் தகவல் அறியும் உரி மைச் சட்டத்தின் கீழ் இதனை வெளிக் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது