districts

சட்டவிரோமாக விசாரணை கோவை போலீசாருக்கு அபராதம்

கோவை, ஜூன் 2- தகவல் அறியும் சட்டத்தில் கேள்வி கேட்ட சமூக ஆர்வலரை நள்ளிரவில் வீடு புகுந்து அழைத் துச்சென்று விசாரித்த சம்பவம் தொடர்பாக கோவை காவல் துறை யினருக்கு மனித உரிமை ஆணை யம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தது. கோவை மாவட்டம், மதுக்கரை  அருகே உள்ள திருமலையம் பாளையம் வார்டு கவுன்சிலராக உள்ளவர் ரமேஷ். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமலையம் பாளையம் பேரூராட்சியில் திட கழிவுகள் மேலாண்மை தொடர் பாக தகவல் அறியும் உரிமைச் சட் டத்தில் தகவல் கேட்டிருந்தார். இதற்கு ஆரம்பத்திலிருந்தே மிரட் டல்கள் வந்துள்ளது. இந்நிலை யில், சில நாட்களுக்கு முன்பு ரமேஷ் வீட்டிற்கு நள்ளிரவில் வந்த மதுக் கரை காவல் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி, வடவள்ளி காவல்  ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் க.க.சாவடி காவல் உதவி ஆய்வா ளர் ஆனந்த்குமார் ஆகியோர் சட்ட விரோதமாக அவரை வீட்டிலிருந்து அழைத்துச் சென்று விசாரித்துள்ள னர். இச்சம்பவம் தொடர்பாக ரமேஷ் மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவித்திருந்தார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட மாநில மனித உரிமை ஆணையம் காவல்துறை அதிகாரிகள் 3 பேர் மீதும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. மேலும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டப்பட்டுள்ளது.