districts

img

கோவை: உதவித் தொகையை உயர்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் மறியல்

கோவை: மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி கோவையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திரா, பாண்டிச்சேரி போன்ற  மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைந்த பட்ச ஊக்கத்தொகையாக ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வெறும் 1500 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. முதலமைச்சரின் துறையாக உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் புனிதா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை அடுத்து 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்