கோவை, ஜன.28– கோவை வந்த குடியரசு தின அணி வகுப்பு அலங்கார ஊர்திக்கு மேள தாளங்கள் முழங்க மலர் தூவியும், மாலை அணிவித்தும் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது. தில்லியில் குடியரசு தினத்திற்கான அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமி ழகத்தின் சார்பில் இடம்பெற இருந்த அலங்கார ஊர்தி ஒன்றிய பாஜக அர சால் நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த அலங்கார ஊர்தி தமிழ்நாட்டில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் காட்சிப்படுத்தப் படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்தார். மேலும், குடிய ரசு தினத்தன்று சென்னையில் நடை பெறும் அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகள் அதன்பிறகு தமிழ் நாட்டின் மற்ற மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்லப்படும் எனவும் அறி விக்கப்பட்டது. அதன்படி, வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார், வ.உ.சி. வீர பாண்டிய கட்ட பொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பெரியார், ராஜாஜி, காமராஜர் பசும்பொன் முத்துராம லிங்கதேவர் உள்ளிட்டோரின் சிலை கள் இடம்பெற்ற அந்த அலங்கார ஊர்தி சென்னையில் இருந்து புறப் பட்டு வெள்ளியன்று கோவை மாவட்ட எல்லையான தெக்கலூர் பகுதிக்கு வந்தது. இந்த அலங்கார ஊர்திக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர் தூவி யும், மாலை அணிவித்தும், மேள தாளங்கள் முழங்கியும் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது . இந்த நிகழ்வில் கோவை வருவாய் கோட்டாட்சியர் இளங்கோ, சூலூர் வட் டாட்சியர் சகுந்தலா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து அலங்கார ஊர்தி கோவை வ.உ.சி மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது. இந்த ஊர்தியை பொதுமக் கள் ஏராளமானோர் குடும்பம், குடும்ப மாய் கண்டு களித்தனர். நான்கு நாட் கள் கோவையில் காட்சிப்படுத்தப் பட்ட பின்னர் இந்த ஊர்தி திருப்பூர் மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.