கோவை, ஜன.1- கோவை வாலாங்குளம், ஆயுதப் படை மைதானம் மற்றும் விடுதிகளில் ஆங்கிலப் புத்தாண்டை மக்கள் கொண் டாடி மகிழ்ந்தனர். ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கோவையில் உள்ள நட்சத்திர விடுதி கள், கேளிக்கை விடுதிகள், மால்களில் கொண்டாட்டங்கள் களைகட்டியது. இளைஞர்கள் சாலைகளில் வாகன சாகசம் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவ தைத் தவிர்க்க அவிநாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் போலீசார் 70 முகாம்களை அமைத்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடு பட்டனர். மாநகரக் காவல் ஆணையர் பாலகி ருஷ்ணன் உத்தரவின்பேரில் 4 துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் உள்பட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடு பட்டனர். புறநகரங்களில் 500-க்கும் மேற்பட்ட போலீசாரும், மாநகரில் கொடிசியா சந்திப்பு, தாமஸ் பூங்கா, எல்.ஐ.சி.சந்திப்பு, உக்கடம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் அதி விரைவுப் படையி னரும் பாதுகாப் புப் பணியில் ஈடு பட்டனர். புத்தாண் டையொட்டி, கோவை வாலாங் குளத்தில் மாநக ராட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை கொண்டாட் டங்கள் களை கட்டின. குளத்தைச் சுற்றிலும் மின் விளக்கு களால் அலங்காரம் செய்யப்பட்டு, லேசர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான மக்கள் கலந்துகொண்டு, ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பைக் கொண்டாடி மகிழ்ந்தனர். கோவை மாநகரக் காவல் துறை சார்பில் மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாநகரக் காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தி னராகக் கலந்துகொண்டார். மாநகரக் காவல் துறையைச் சேர்ந்த போலீசார் தங்களது குடும்பங்களுடன் கலந்து கொண்டனர். உதகை இதேபோன்று, மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத் திற்கு 2024 ம் ஆண்டு புத்தாண்டை கொண்டும் வகையில், தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநில மற்றும் மாவட் டத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், அதிக அளவில் வருகை புரிந்தனர். சுற்றுலாப் பயணிகள், உதகை அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்ட மலைப்பகுதி, சிம்ஸ் பூங்கா என பல் வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.