districts

img

கோவை எம்.பி.,தொகுதி மேம்பாட்டு நிதி புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

கோவை, பிப்.9- கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு நிதியில்  இருந்து, புதிய திட்டப் பணிகளுக்கு  அடிக்கல் நாட்டப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சமுதாய நலக்கூடங்கள், நியாய விலை கடைகள், சிறு பாலங்கள்  என ஏராளமான நலத்திட்டப் பணி கள் கட்டி முடிக்கப்பட்டு பயன் பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு வரு கின்றன. பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று பல்வேறு இடங்களில்  புதிய கட்டுமான பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டு வருகிறது.  இதன் ஒரு பகுதியாக கோவை  மாநகராட்சிக்கு உட்பட்ட பீளமேடு செங்காளியப்பா நகரில் சுமார் 28  லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா  மதில் சுவர் அமைக்க நிதி ஒதுக்கப் பட்டு, கட்டுமான பணிக்கான அடிக் கல் நாட்டு விழா வெள்ளியன்று நடைபெற்றது. அதேபோல், கோவை மாநகராட்சி 46வது வார் டுக்கு உட்பட்ட நியூ சித்தாபுதூர் ஹரிபுரம் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 7.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொது விநி யோக கட்டிட பணிகளுக்கு அடிக் கல் நட்டப்பட்டது.  இதில், முன்னாள் சட்டப்பே ரவை உறுப்பினரும் திமுக மாந கர் மாவட்டச் செயலாளருமான நா.கார்த்திக், சிபிஎம் பீளமேடு நக ரக்குழுச் செயலாளர் கே.பாண்டி யன், மாவட்டக் குழு உறுப்பினர் மூர்த்தி, கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, சிபிஎம் 24 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பூபதி, மதி முக மாவட்டச் செயலாளர் செல்வ ராஜ், 26 ஆவது மாமன்ற வார்டு  உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.