கோவை, நவ.23- மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் கோவை மாநகராட்சி பகுதியில் கட் டப்பட்ட புதிய ரேசன் கடை திறப்பு விழா வியாழனன்று நடைபெற்றது. கோவை மாநகராட்சி, 6 ஆவது வார்டுக்கு உட்பட்ட கருப்பராயன் பாளையம் பகுதியில் நூற்றுக்கணக் கான குடியிருப்புகள் உள்ள பகுதி யாகும். இப்பகுதியில், புதிய ரேசன் கடை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இதனையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜ னிடம், நாடாளுமன்ற தொகுதி மேம் பாட்டு நிதியில் இருந்து புதிய ரேசன் கடை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையேற்று, தனது தொகுதி நிதியில் இருந்து புதிய ரேசன் கடைக் கான கட்டடம் கட்ட, ரூ20 லட்சம் நிதி யினை ஒதுக்கீடு செய்தார். இதனைத் தொடர்ந்து புதிய ரேசன் கடைக்கான கட்டுமான பணிகள் குறித்து கண்கா ணிப்பு செய்து வந்தார். இந்நிலை யில், கட்டுமான பணிகள் முழுமை யாக நிறைவுற்றது. இதனையடுத்து, மக்கள் பயன்பாட்டிற்கு வியாழ னன்று ரேசன் கடை திறந்து வைக்கப் பட்டது. இதனை பி.ஆர்.நடராஜன் எம்பி., ரேசன் கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத் தார். இந்நிகழ்வில், கோவை மாநக ராட்சி மேயர் கல்பனா ஆனந்த்கு மார், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் லட்சுமி இளஞ் செல்வி, கோவை மாநகராட்சி 6 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பொன்னு சாமி மற்றும் பொதுமக்கள் திரளா னோர் பங்கேற்றனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் குடியிருப்பு களின் அருகிலேயே புதிய ரேசன் கடைக்கான சொந்த கட்டடம் வேண் டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தோம். யாரும் எங்களின் கோரிக்கையை கண்டு கொள்ள வில்லை. இதனையடுத்து, நமது நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜனிடம் கோரிக்கை வைப்பதற் காக சென்றபோதே, உடனே அதற் கான நிதியை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்குவதாக உறுதியளித்தார். சொன்னது போலவே நிதியை ஒதுக்கி, கட்டுமா னம் முடித்து புதிய ரேசன் கடையை யும் திறந்து வைத்திருக்கிறார். நமது எம்பிக்கு எங்கள் பகுதி மக்கள் சார் பில் நன்றியை தெரிவித்துக்கொள் கிறோம், என்றனர்.