கோவை, அக்.15- கல்வி, போட்டித் தேர்வுகளில் விடாமுயற்சி தேவை என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார். அத்தியாயம் அறக்கட்டளை சார்பில் அரசு போட்டித் தேர்வு களுக்கான வழிகாட்டுதல் மற்றும் இலவச நூலக பதிவு முகாம் கோவை கோட்டைமேடு மாநக ராட்சி பள்ளியில் ஞாயிறன்று நடை பெற்ற நிகழ்வில், கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, அரசு பள்ளியில் படித்த 2000 மாண வர்கள் தற்போது அரசு பணியில் உள்ளனர். அவர்கள் டாக்டர் அம் பேத்கர் கல்வி பயிற்சி மையத்தில் இலவசமாக படித்து போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்கள். மாணவர் களுக்கு விடாமுயற்சி வேண் டும். ஏழை, எளிய மக்களின் குழந் தைகள் மேலே வர வேண்டும். அதற்கான வாய்ப்புகளை பயன் படுத்த வேண்டும். இது போன்ற அரசு போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் முகாம்களை மாண வர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். கேரள மாநிலத்தின் பாலக் காடு, திருச்சூரில் மாவட்ட ஆட்சிய ராக இருந்தவர் அஜிதா பேகம்.
இவர், நமது கோவை மாவட் டத்தை சேர்ந்த அரிசி வியாபாரி யான சுல்தான் என்பவரின் மக ளாவர். அவரை போன்று வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், பழனி அருகே உள்ள ஆயக்குடி யில் உள்ள அம்பேத்கர் பயிற்சி மையத்தில் படித்த பலர் தமிழ கத்தின் பல கிராமங்களில் கிராம நிர்வாக அதிகாரிகளாக பணிபுரி கின்றனர். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் பங்களிப்பே பிரதான காரண மாகும். கடந்த காலத்தில் நமது முன் னோர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு தற்போதைய குழந்தை களுக்கு கிடைத்துள்ளது. அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். தற்போதைய பெற்றோர், தமது குழந்தைகளை நன்றாக படித்து முன்னேற வேண்டும் என விரும்பு கின்றனர். இது போன்ற இலவச பயிற்சி மையங்களை பயன்படுத்தி படித்து அரசு போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டு நல்ல பணிக்கு சென்றுவிடலாம். இது போன்ற நிகழ்ச்சிகள் தொய்வில்லாமல் அதிகமாக நடைபெற வேண்டும் என கூறினார். இந்நிகழ்வில், கோவை மாவட்ட சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஹாஜி எம்.ஏ.இனாயத்துல்லாஹ், திமுக மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், கோவை மாமன்ற நிலைக்குழு தலைவர் நா.மாலதி நாகராஜ், எழுத்தாளர் மற்றும் கல்வி ஆலோசகர் கே.கணேஷ்,டாக்டர் மு.இனியவன் திரளான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கால நேரம் பார்க்காமல் உதவகூடியவர்
தற்போதைய நமது கோவை நாடாளுமன்ற உறுப்பினர் மிகவும் எளிமையான மனிதர். எப்போதும் யார் வேண்டுமானாலும் அணுகலாம். கொரோனா காலங்களில் நமது நாடாளுமன்ற உறுப் பினரின் பணி மகத்தானது. கொரோனாவால் பாதிக்கபட்டு உயிருக்கு போராடிய ஒருவருக்காக உதவி கேட்டு இரவு 1 மணியளவில் மொபைலில் அழைத்தேன், உடனே பேசினார், அதற்கான உதவி களும் செய்து கொடுத்தார். மீண்டும் காலையில் மொபைலில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் மாமன்ற உறுப்பினர்கள் தங்களின் வார்டுகளுக்கு நாடாளு மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பணிகள் செய்ய கோரிக்கை வைத் தால் உடனே நிறைவேற்றி தருவார். பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டு கோரிக்கை வைப்ப வர்களுக்கு தமது எம்பி நிதியிலிருந்து திட்டங்களை செய்து தரக் கூடியவர். நமக்கு கிடைத்த மிக அற்புதமான மனிதர் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் என நா.மாலதி நாக ராஜன் கூறினார்.