districts

img

கோவை எம்.பி., தொகுதி நிநிதியிருந்து கீழ்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட அடிக்கல்

கோவை, அக்.16- கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து, கீழ் நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப் பட்டது. கோவை மாவட்டம், குருடம்பாளையம் ஊராட்சி, 9 ஆவது வார்டுக்குட்பட்ட திருமலா அவென்யூ பகுதியில் கீழ்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்ட அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தனது தொகுதி மேம்பாட்டு நிதி யிலிருந்து நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு நிதி ஒதுக்கி னார். இதன்தொடர்ச்சியாக ஞாயிறன்று கீழ்நிலை நீர்த்தேக்க  தொட்டிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குருடம்பாளையம் ஊராட்சி தலைவர் ரவி, மாவட்ட கவுன் சிலர் எஸ்.கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் எஸ்.மாணிக்கம், ஊராட்சி வார்டு உறுப்பினர் அருள்ராஜ் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.