districts

சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட 7 பேருக்கு சம்மன்

கோவை, ஜூலை 17- கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், சமூக ஊட கங்களில் கருத்தை வெளியிட்ட ஏழு  பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி யுள்ளனர்.  கோவை சரக டிஐஜி விஜயகுமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை ரேஸ்கோர்சில் உள்ள தனது  முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இச்சம்பவம் போலீஸ் துறையில் உள்ள வர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை  ஏற்படுத்தியது. டிஐஜி தற்கொலை தொடர்பாக கோவை, ராமநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  அவர்கள் அக்கம்பக்கத்தில் வசிப்ப வர்கள், அவரது வீட்டில் இருந்தவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசா ரணை நடத்தி உள்ளனர். தொடர்ந்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்ற னர். இதற்கிடையே டிஐஜி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் சிலர் தங்களது கருத்துகளையும் பதிவு செய்தனர்.  சிலர் சமூக ஊடகங்களில் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து இருந்த னர். இந்நிலையில், இந்த தற்கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்கள், கருத்து கூறியவர் கள், அதை வெளியிட்ட சமூக ஊடகங்க ளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி, சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள், சமூக ஊடகங்களுக்கு பேட்டி அளித்த வர்கள் என 7 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில், இவர்கள் அனைவரும் கோவை போலீசார் முன்பு  செவ்வாயன்று (இன்று) விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். அப்படி அவர்கள் ஆஜராகும்பட்சத் தில் அவர்களிடம் டிஐஜி தற்கொலை தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் எந்தவித ஆதாரத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது. யார் அதனை தெரி வித்தது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.