districts

img

கோவை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை தாக்கல்

மண்டல தலைவர்கள் தேர்வு

முன்னதாக, இந்த கூட்டத்தில் மண்டலத் தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் வடக்கு மண்டல தலைவர் பதவிக்கு கதிர்வேல், தெற்கு மண்டலத்திற்கு தனலட்சுமி, கிழக்கு மண்டலத்திற்கு லக்குமி இளஞ்செல்வி, மேற்கு மண்டலத்திற்கு தெய்வானை தமிழ்மறை, மத்திய மண்டலத்திற்கு மீனா லோகு ஆகியோர் போட்டியிட்டனர்.  வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் வேட்புமனு தாக்கல் செய்த 5 பேரும் மண்டல தலைவர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா சான்றிதழ்களை வழங்கினார். 

திடக்கழிவு மேலாண்மை தனியாருக்கு மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு

இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் வி.இராமமூர்த்தி பேசுகையில், பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளதற்கும், சின்னவேடம்பட்டி, வெள்ளக்கினறு, வீரகேரளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பாதாளச் சாக்கடை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்துள்ளதற்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறோம். இதேபோன்று மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் மாமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகம் அமைத்திட வேண்டும். இதனால் மக்களை நேரிடையாக சந்தித்து குறைகளை கேட்டறிந்து செயல்படுத்திட ஏதுவாக இருக்கும் என்றார். அதேநேரம் ஒரு மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை தனியாருக்கு கொடுப்பதற்கான ஆலோ சனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் எதிர்ப்பை பதிவு செய்கிறோம். இது நிதிநிலை அறிக்கையில் முன்வைக்கப்பட்ட ஆலோசனை என்பதால் ஆரம்ப கட்டத்திலேயே இதனை கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம், என்றார்.

கோவை, மார்ச் 30- கோவை மாநகராட்சியின் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை மேயர் கல்பனா புதனன்று தாக்கல் செய்தார். 19.31 கோடி ரூபாய் பற்றாக்குறை உள்ள நிதிநிலை அறிக்கையில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி கள் மேற்கொள்ள முன்னுரிமை  அளித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகு கோவை மாநகராட்சியின் முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் கூட்டம் கோவை டவுன்ஹால் விக்டோரியா மஹாலில் உள்ள மாநகராட்சி மாமன் றத்தில் நடைபெற்றது. இதில் கோவை மாநகராட்சியில் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மாநகராட்சி மேயர்  கல்பனா ஆனந்தகுமார் தாக்கல்  செய்தார். கோவை மாநகராட்சி யில் மொத்த வருவாய் 2317.97 கோடி உள்ள நிலையில், மொத்த செல வீனம் 2337.28 கோடி ரூபாயாக உள் ளது. 19.31 கோடி ரூபாய் பற்றாக் குறை உள்ளது. இந்த பட்ஜெட்டில் அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற் காக ஒரு மண்டலத்திற்கு 10 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு திட்டப் பணிக ளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. பந்தயசாலை, டி.பி. சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டணம் பரிச்சாத்த முறை யில் வசூலிக்கப்படும்.

சிறந்த மாமன்ற உறுப்பினர் விருது

மேலும், சிறப்பாக பணியாற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கு ‘சிறந்த மாமன்ற உறுப்பினர்’ விருது வழங் கப்படும் என அறிவிக்கப்பட்டுள் ளது. இதேபோன்று சாலை, சாக் கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்த நிதிநிலையில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இக்கூட்டத்தில் திமுக, காங்கி ரஸ், சிபிஐ, மதிமுக மற்றும் மார்க் சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பி னர்கள் வி.இராமமூர்த்தி, ஆர். பூபதி, கண்ணகி ஜோதிபாசு,என்.சுமதி ஆகியோர் பங்கேற்றனர். அதே நேரம், நிதிநிலை அறிக்கையில் விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை என அதிமுக உறுப்பினர்கள் புறக் கணிப்பு செய்தனர். முன்னதாக மாமன்ற உறுப்பினர் களை கொண்ட பல்வேறு குழுக்கள் தேர்வு செய்யப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப் பினர் வி.இராமமூர்த்தி, நிதிக்குழு மற்றும் வரிவிதிப்புக்குழு உறுப்பி னராகவும், ஆர்.பூபதி பணிகள் குழு உறுப்பினராகவும் தேர்வு செய் யப்பட்டனர்.