districts

சூயஸ் நிறுவனத்திற்கு மீண்டும் அபராதம்

கோவை, ஜன. 28- கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பகுதி யில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி  கட்டுமானப் பணிகளை தாமதமாக மேற்கொள்ளும் சூயஸ் நிறுவனத் திற்கு 3 லட்ச ரூபாய் அபராதம் விதித்து கோவை மாநகராட்சி நிர் வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கோவை மாநகரத்தின் குடி நீர் விநியோகத்தை பிரான்ஸ் நாட் டின் நிறுவனமான சூயஸ் நிறுவனத் திற்கு கடந்த அதிமுக ஆட்சி தாரை  வார்த்தது. குடிநீர் விநியோகத்தை குடிநீர் வாடிகால் வாரியமே செய்ய வேண்டும், தனியார் நிறு வனங்கள் விநியோகத்தில் ஈடுபட் டால், அது பாரபட்சம் காட்டும்  எனவும், சூயஸ் கால் பதித்த  இடங்களில் எல்லாம் இத்தகைய  அத்துமீறல்கள் நடைபெற்றுள்ள தையும், போராட்டங்கள் வலுத்து வந்ததையும் மார்க்சிஸ்ட் கட்சி  உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த  இயக்கங்கள் தொடர் போராட் டங்களை முன்னெடுத்தது. இந்த போராட்டங்கள் இன்றுவரையில் நீடிக்கிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதாக திமுக அரசு வந்த பிறகும் சூயஸ்  நிறுவனம் தனது பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக் கிறது. இந்நிலையில் எப்போதும் சர்ச்சைக்கு உள்ளாவதே சூயஸ்  நிறுவனத்தின் வழக்கமாக மாறி விட்டது. ஒப்பந்த காலத்திற்குள் முடிக்க வேண்டிய பணிகளை இன்னமும் முடிக்கவில்லை என்று மாமன்றத்தில் மேயர், மண்டல  தலைவர்கள், மாமன்ற உறுப்பி னர்கள் கொதித்தனர்.

பின்னர், மாமன்றத்தில் கண்டித்து தீர்மா னமே நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டுமான பணி களை தாமதாக மேற்கொள்ளும் சூயஸ் நிறுவனத்திற்கு 3 லட்ச ரூபாய் அபராதம் விதித்து கோவை  மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சூயஸ் நிறுவனம் மேற்கொள்ளும் பணிகளை மாநக ராட்சி ஆணையர் சிவகுரு பிரபாக ரன் ஞாயிறன்று ஆய்வு மேற் கொண்டார். கோவை மாநாகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட பாரதி பார்க் பகுதியில் சூயஸ் நிறுவனம் கட்டிவரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை ஆய்வு  செய்தார். அப்போது மேல்நிலை  நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமான  பணிகள் காலதாமதமாக நடை பெற்று வருவது தெரியவந்துள் ளது. கடந்த 2022ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் பணிகள் துவங்க  அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், 9  மாதங்கள் கடந்தும் மந்தகதியில் நடைபெற்று வருவதை அடுத்து, சூயஸ்  நிறுவனத்திற்கு 3 லட்சம்  ரூபாய் அபராதம் விதித்து மாந கராட்சி ஆணையர் சிவகுரு பிரபாக ரன் நடவடிக்கை மேற்கொண்டுள் ளார்.  மேலும், தாமதமாக பணிகள்  நடைபெற்று வருவது குறித்து  விளக்கம் கேட்டு மாநகராட்சி சார்பில் நோட்டீசும் அனுப்பப்பட் டுள்ளது. கடந்த வாரம் சூயஸ்  நிறுவனம் கட்டுமான பணியின் போது தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் இன்றி செயல்பட்டதற்காக, 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக் கப்பட்டது குறிப்பிடத்தக்கது.