districts

ஆரோக்கியத்தை பாதுகாக்க ஆக்கப்பூர்வமான முயற்சி

கோவை, அக்.30- மக்களின் ஆரோக்கியத்தை பாது காக்க மக்களை தேடி மருத்துவம் திட்டம் பெரும் பங்காற்றி வருவதாக கோவை  மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்பாடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட் சியர் கிராந்தி குமார் பாடி தெரிவிக்கை யில், ஒரு நாட்டின் ஒட்டு மொத்த பொரு ளாதார வளர்ச்சிக்கு ஆரோக்கியமான மக்களால் மட்டுமே ஆக்கபூர்வமான பங்கினை அளிக்க இயலும். தரமான மருத்துவ வசதிகளைப் பொது மக்க ளுக்கு எளிதாக கிடைக்கச் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தாமல், நோய் தடுப்பு பணிகளிலும் நல்ல வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிப்பதில் கவ னம் செலுத்த வேண்டும்.  தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 05.08.2021 அன்று மக்களை தேடி மருத்து வம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 45 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இய லாமையில் உள்ள நபர்களுக்கு உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய்க்கான மருந்துகளைக் களப்பணியாளர்கள் நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று வழங்கின்றனர். மேலும், சிறுநீ ரக நோயாளிகளைப் பராமரித்தல், அத் தியாவசிய மருத்துவச் சேவைகளுக் கான பரிந்துரை குழந்தைகளின் பிற விக் குறைபாடுகளைக் கண்டறிந்து தெரிவித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.  அந்த வகையில், கோவை மாவட் டத்தில் மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ் பரிசோதனை மூலமாக 3,15,629 உயர் இரத்த அழுத்த நோயா ளிகளும், 178:904 சர்க்கரை நோயாளிக ளும், உயர் இரத்த அழுத்தம் மற்றும்  சர்க்கரை நோய் ஆகிய இரண்டு நோய் களினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக 1,53,470 நோயாளிகளும் கண்டறியப் பட்டுள்ளனர். இதுவரை 195,887 நபர்க ளுக்கு 2 மாதங்களுக்கு தேவையான மருந்துப் பெட்டகங்கள் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பெண் சுகாதார தன்னார் வலர்கள் மூலம் 2 மாதங்களுக்கு ஒரு  முறை வீடு தேடிச் சென்று வழங்கப்பட்டு வருகிறது. மேலும், முதுகு தண்டுவடம் செய லிழப்பு, மூட்டுத்தேய்மானம், பக்க வாதம், தசைச்சிதைவு நோய், சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல் போன்ற சேவைகள் மற்றும் அதற்கென வட் டார அளவில் நியமிக்கப்பட்டுள்ள பிசி யோதெரபிஸ்ட் ஆகியோர் மூலம் மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகின் றன. இதுவரை 21848 நோயாளிகளுக்கு இயன்முறை மருத்துவ சிகிச்சைகள், வயதானவர்கள் நடமாட முடியாமல் வீட்டிலேயே இருக்கும் நோயாளிகள் என 21,359 நோயாளிகள் கண்டறியப் பட்டு அவர்களுக்குத் தேவையான நோய் தடுப்புமருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் 6 நோயாளிக ளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ்  கோவை மாவட்டத்தில் இதுவரை மொத் தம் 6,48,003 நோயாளிகள் கண்டறிப் பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. ஒவ்வொரு நோயாளியின் விபரம் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து கண்கா ணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.