districts

img

கோவை: ஜோஸ் ஆலுக்காஸில் திருடப்பட்ட நகைகள் மீட்பு

கோவை, நவ.30- கோவை பிரபல நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டு, மாநகர காவல் ஆணை யர் அலுவலகத்தில் கணக்கிடும் பணி நடைப்பெற்றது.  கோவை மாவட்டம், காந்திபுரத் திலுள்ள பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸில் கடந்த திங்க ளன்று இரவு கடைக்குள் புகுந்த நபர், சுமார் 200 பவுனுக்கு மேலான தங்க நகைகளை கொள்ளை அடிக் கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கொள் ளையரை பிடிக்க மாநகர காவல் துறை சார்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர். கொள்ளையடித்து தப்பித்து சென்ற வர் அணிந்திருந்த சட்டை மற்றும் பாக்கெட்டில் இருந்த அரசு பேருந் தின் டிக்கெட் அடிப்படையிலும், சிசி டிவி கேமராவில் பதிவான காட்சி களை கொண்டும் விசாரணை மேற் கொண்டனர். அதில், கொள்ளை யன் பொள்ளாச்சி ஆனைமலையி லிருந்து வந்தது தெரிய வந்தது.  மேலும் நடத்தப்பட்ட விசாரணை யில், கொள்ளையன் தருமபுரி மாவட் டம் அரூர் பகுதியைச் சேர்ந்த விஜய குமார் (25) என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, தருமபுரி, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் பதுக்கி வைத்திருந்த தங்க நகை களையும் மீட்ட போலீசார், கோவை  மாநகர காவல் ஆணையர் அலுவல கத்தில் கணக்கிடும் பணி நடைபெற் றது. தலைமறைவாக உள்ள விஜய குமாரை தேடி வருகின்றனர். இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நகைக்கடையில் கொள்ளையில் ஈடுபட்டவரை பிடிக்க துணை ஆணை யாளர்கள் சண்முகம் மற்றும் சதீஷ் ஆகியோர் தலைமையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்  தருமபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த விஜய் என்பதும், இந்த கொள்ளை சம்பவத்துக்கு அவரது மனைவி நர் மதா உடந்தையாக செயல்பட்டு வந் தது தெரிய வந்துள்ளது. 4 கிலோ  600 கிராம் தங்கம் மற்றும் பிளாட்டி னம் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டதாக புகார் பதிவான நிலையில், விஜய்-யின் மனைவி நர்மதாவிடம் இருந்து சுமார் 3 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வேறு யாரேனுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த  வகையில், விஜய்யின் நண்பர் சுரே ஷிடம் அதிகாரிகள் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இது போன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்க கோவை மாநகர பகுதிகளில் உள்ள நகைக் கடைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் வைத்துள்ள கடைகளில் உயர் தொழில்நுட்பம் கொண்ட கேமராக்களை பொருத்த அறிவுறுத்தியுள்ளோம். கடையில் பணியாற்றும் ஊழியர்கள் யாராவது விஜய்-க்கு உதவி செய்துள்ளார் களா? என்பது குறித்து, அவரது கைதுக்கு பின்பே தெரியவரும், என் றார்.