districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

புத்தகங்களோடு புத்தாண்டு

திருப்பூர், டிச.31- திருப்பூர் பின்னல் புத் தக நிலையத்தில் வெள்ளி யன்று சிறப்பு புத்தக விற் பனை நிகழ்வு நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். புத்தகங்களோடு புத் தாண்டு கொண்டாடுவோம் என்ற தலைப்பில் திருப்பூர் பின்னல் புத்தக நிலையத் தில் வெள்ளியன்று சிறப்பு புத்தக விற்பனை நிகழ்வு நடைபெற்றது. இதில், புத்த கங்கள் வாங்கியோருக்கு 15 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டது. தமுஎகச மாநில செயற்குழு உறுப்பி னர் ஆர்.ஈஸ்வரன் துவக்கி  வைக்க சிஐடியு மாவட்ட செ யலாளர் கே.ரங்கராஜ் பெற் றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் பின்னல் புத்தக நிலைய பொறுப்பா ளர் பா.சௌந்தரபாண்டி யன், தமுஎகச மாவட்ட செய லாளர் ஆர்.குமார், விழிப்பு எம்.நடராஜன், சிஐடியு நிர்வாகிகள் டி.குமார், பி.பாலன், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செல்போன் கடையில் ரூ. 20 லட்சம் கொள்ளை  ராஜஸ்தான் சென்று கொள்ளையனை கைது செய்த போலீசார்

கோவை, டிச.31-  கோவையில் செல்போன் கடைகளிலி ருந்து ரூ.20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ராஜஸ்தானில் பதுங்கியிருந்த கொள்ளையனை போலீசார் கைது செய்த னர். கோவை காந்திபுரம் பகுதியில் செல் போன் மற்றும் உதிரிபாக விற்பனை செய் யும் கடைகள் ஏராளமானவை செயல்பட்டு வருகின்றன. இங்கு, ராஜஸ்தான் மாநிலத் தைச் சேர்ந்த பிரதாப், ராஜூ ஆகியோர் காந் திபுரம் கிராஸ்கட் 8-வது வீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தனர். கடந்த டிச.13 ஆம் தேதியன்று இரவு இவர்கள் வழக்கம்போல் கடையை  பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். இதன்பின், நள்ளிரவில் கடையின் கதவை உடைத்து  உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத  நபர், கல்லாவில் இருந்த பணம் மற்றும் செல்போன் உதிரிபாகங்களை திருடிச் சென் றார். மேலும், அந்த நபர் அதே வணிக வளா கத்தில் உள்ள கணபதி மொபைல்ஸ் என்ற  கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு கல்லாவில் இருந்த பணம், செல் போன் உதிரிபாகங்கள் உள்ளிட்டவைகளை யும் கொள்ளையடித்து சென்றனர்.  இதையடுத்து மறுநாள் காலை  கடையை திறக்க சென்ற உரிமையாளர்கள் கடையில் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகா ரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து  சென்று காவல் துறையினர் விசாரணை நடத் தினர். இதில், ரூ.20 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது. இதன்பின், கடை யில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய நபர் ராஜஸ்தானில் பதுங்கி இருப்பதாக தனிப் படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத் தது. இதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் சென்ற கோவை போலீசார் அங்கு பதுங்கி யிருந்த பிரீத்வி பாரதி (27) என்பவரை கைது  செய்து, அவரிடமிருந்து ரூ.9 லட்சத்தை பறி முதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிபிஎம் போராட்ட எதிரொலி மண் கடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு

உடுமலை, டிச.31-  மடத்துக்குளம் அருகே மண் கடத்திய லாரியை பறி முதல் செய்த அதிகாரிகள், வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். மடத்துக்குளம் தாலுகா பகுதியில் அரசு விதிமுறைக்கு புறம்பாக கிராவல் மற்றும் செம்மண் உள்ளிட்ட கனிம வளங் கள் கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்தக்கோரி அண்மை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் வரு வாய் அலுவலர்கள் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், மடத்துக்குளம் வருவாய் ஆய்வாளர் சாந்தி தலைமையில் வருவாய்த் துறையினர் சோழமாதேவி மேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப் போது இரண்டு டிப்பர் லாரிகளை சோதனையிட்ட போது அதில் செம்மண் இருப்பதை கண்டுள்ளனர். இதைத்தொ டர்ந்து லாரி ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொண்ட நிலை யில் தீடீரென அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதையடுத்து வருவாய்த் துறையினர் வாகனங்களை பறி முதல் செய்து  மடத்துக்குளம்  காவல்நிலையத்தில் ஒப்ப டைத்தனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து  தப்பியோடிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.