வேளாண் பல்கலை.யில் அடுமனை தொழில்நுட்ப பயிற்சி
கோவை, பிப்.9- தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக் கழகத்தில் அடுமனைத் தொழில்நுட்பம் (பேக்கரி) பற்றிய இரண்டு நாள் பயிற்சி வகுப்பு எதிர் வரும் பிப்.15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெ றுகிறது. இந்த பயிற்சி வகுப் பில் பங்கேற்க ஆர்வமுள்ள வர்கள் ரூ.1,500 மற்றும் ஜிஎஸ்டி செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விப ரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 0422 - 6611268.
12 பேரூராட்சி வார்டுகளில் சிபிஎம் வேட்பாளர்கள் போட்டி
உடுமலை, பிப்.9- ஊரக உள்ளாட்சி தேர்தலில் உடுமலை, மடத்துக்குளம் பேரூராட்சிகளுக்கு உட் பட்ட வார்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 12 வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் மடத்துக்குளம் பேரூராட்சி 10 ஆவது வார்டில் ஆறுமுகம், கொமரலிங்கம் பேரூ ராட்சி 2 ஆவது வார்டில் புஷ்பவள்ளி, 3 ஆவது வார்டில் ஆறுமுகம், 14 ஆவது வார் டில் பழனியம்மாள் மற்றும் சக்கரமநல் லூர் பேரூராட்சி 7 ஆவது வார்டில் பாலமுரு கன், 12 ஆவது வார்டில் ஈஸ்வரன் ஆகி யோர் போட்டியிடுகின்றனர். இதேபோல், உடுமலை தாலுகா தளி பேரூராட்சி 1 ஆவது வார்டில் சாந்திபிரியா, 3 ஆவது வார்டில் மகாலட்சுமி, 6 ஆவது வார் டில் சிந்தாமணி, 8 ஆவது வார்டில் கருப்பு சாமி மற்றும் புதிதாக தளி பேரூராட்சியில் சேர்க்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கான 16 ஆவது வார்டில் செல்வன், 17 ஆவது வார் டில் வாணீஸ்வரி ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடு கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் 420 பதவிகளுக்கு 1,920 பேர் போட்டி
வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணி தீவிரம்
திருப்பூர், பிப்.9- திருப்பூர் மாவட்டத்தில் 420 பதவிகளுக்கு 1,920 பேர் போட்டியி டும் நிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பொருத்தப்ப டும் வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருப்பூர் மாநகராட்சி 60 வார்டு கள், பல்லடம், காங்கயம், வெள்ள கோவில், உடுமலை, தாராபுரம் மற் றும் திருமுருகன்பூண்டி ஆகிய 6 நகராட்சிகள் மற்றும் சாமாளபுரம், குன்னத்தூர், ருத்ராவதி, அவிநாசி, ஊத்துக்குளி, கொமரலிங்கம், மடத்துக்குளம் மற்றும் தளி உட்பட மாவட்டத்தின் 15 பேரூராட்சிகளில் உள்ள 420 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட் சித் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது 420 வார்டுகளில் மாந கராட்சியில் 494 பேரும், நக ராட்சிகளில் 661 பேரும், பேரூராட் சிகளில் 765 பேரும் என மொத் தம் 1,920 பேர் தேர்தலில் போட்டியி டுகிறார்கள். இந்நிலையில் இவர்க ளுக்கு வாக்குப்பதிவு இயந்திரத் தில் பொருத்தப்படும் சின்னத்துடன் கூடிய வாக்குச்சீட்டினை அச்சடிக் கும் பணி தற்போது தொடங்கியுள் ளது. இது தொடர்பாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறுகையில், திருப் பூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில் வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணி திருப்பூரில் நடந்து வருகிறது. போலீசார் பாதுகாப்புடன் இப்ப ணியை மேற்கொண்டு வருகி றோம். அதேபோல் தபால் வாக்குச் சீட்டு, டெண்டர் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. நகராட்சி மற்றும் பேரூ ராட்சி பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி, கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத் தில் நடந்து வருகிறது. இதனை சம்பந்தப்பட்ட தேர்தல் பிரிவு அலு வலர்கள் கண்காணித்து வருகின்ற னர். மாநாகராட்சியில் 60 வார்டு களில் 494 பேர் போட்டியிடுவதால், திருத்தம் மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, திருப்பூரில் செய்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.
போராட்டம் தொடரும்: விசைத்தறியாளர்கள் அறிவிப்பு
திருப்பூர், பிப்.9- திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு படி வியாழக் கிழமை (இன்று) மாநில செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனை விசைத்தறியாளர் சங்க நிர்வாகி கள் சந்திப்பது எனவும், பேச்சுவார்த்தை ஒப்பந்தப்படி இருசாராரும் கையொப்பமிட்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசு அதிகாரிகள் கேட்டுக் கொண்ட னர். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத ஜவுளி உற்பத்தி யாளர்களின் போக்கை கண்டித்தும், மேலும் இப்பிரச்ச னையில் சுமூக முடிவு ஏற்படாமல் இழுபறி நீடித்தால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சூட்கேசில் பெண் சடலம்: போலீசார் தீவிர விசாரணை
திருப்பூர், பிப்.9- திருப்பூர் அருகே கொலை செய்யப்பட்ட பெண் ணின் சடலத்தை சூட்கேஸில் வைத்து, இருசக்கர வாக னத்தில் இரு நபர்கள் கொண்டு செல்லும் வீடியோ காட்சிகளை கைப்பற்றி, தனிப்படை காவல்துறை யினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் தாராபுரம் சாலை எம்.புதுப்பாளையம் நீலிக்காடு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் ஒன் றில், கடந்த 7-ஆம் தேதி ரத்தகறையுடன் சூட்கேஸ் ஒன்று கிடந்ததை, அப்பகுதியில் சென்ற பொது மக்கள் பார்த்தனர். சம்பவ இடத்துக்கு சென்று காவல் துறையினர் சாக்கடை கால்வாயில் இருந்து, சூட் கேஸை மீட்டனர். சூட்கேஸை திறந்து பார்த்தபோது, அதில் இளம்பெண் ஒருவரின் சடலம் அடைத்து வைக் கப்பட்டிருந்தது. அவரது உடலில் காயங்களுடன் கொலை செய்திருப்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர். இது தொடர்பாக தனிப்படை அமைத்து நல்லூர் காவல்துறையினர் விசாரணையை தீவிரப் படுத்தினர். குறிப்பாக, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இதில் இருசக்கர வாகனத்தில் இருவர் சூட் கேஸூடன் பயணமாவது தெரியவந்தது. அந்த காட்சி களை கைப்பற்றி, அதில் சென்ற 2 பேர் தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இளம்பிள்ளை: ரூ.3 லட்சம் பறிமுதல்
இளம்பிள்ளை, பிப்.9- இடங்கணசாலை நகராட்சி பகுதியில் தேர்தல் பறக் கும் படையினர் வாகன சோதனையின்போது மூன்று லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்.19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தும் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந் நிலையில், சேலம் மாவட்டம், இடங்கணசாலை நக ராட்சிக்குட்பட்ட இளம்பிள்ளை - இடங்கணசாலை செல் லும் சாலையில் புதனன்று தேர்தல் பறக்கும் படை அலு வலர் சுந்தர்ராஜன் தலைமையில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 2 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப் பட்டது. இதன்பின் அத்தொகையை பறக்கும் படை யினர் இடங்கணசாலை நகராட்சி ஆணையர் (தேர்தல் நடத்தும் அலுவலர்) இரவிச்சந்திரனிடம் ஒப்படைத் தனர். இதனையடுத்து, சங்ககிரி சார் நிலை கரு வூலத்தில் அப்பணம் டெபாசிட் செய்யப்பட்டது.
அவிநாசி பாறை குழியில் குப்பை கொட்டுவது நிறுத்தம்
அவிநாசி, பிப்.9- அவிநாசி அருகே அம்மாபாளையம் பகுதியில் பாறை குழியில் குப்பை கொட்டுவது தொடர்பாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் அமைச்சர்களிடம் முறையிட்ட நிலையில் தற்போது குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே திருமுரு கன்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கணபதி நகர் பிரிவு மற்றும் கானக்காடு பாறைக்குழிகளில் திருப்பூர் மாநக ராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவு கள் மற்றும் குப்பைகள் லாரிகள் மூலமாக கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி களில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுவாச கோளாறு மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. மேலும், கடுமையான துர்நாற்றம் வீசுவதால் அப் பகுதியில் குடியிருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு அப்பகுதி மக்கள் வீடுகளை காலி செய்து வேறு இடங் களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, இப்பகுதிகளில் குப்பை கழிவு கள் கொட்டுவதை திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரி மார்க் சிஸ்ட் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக அமைச்சர்களை சந் தித்து முறையிட்ட நிலையில், செவ்வாயன்று முதல் குப்பை கொட்டுவது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சிய டைந்துள்ளனர்.
திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்திற்கு தடை
100 கிராமத்தினர் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
ஈரோடு, பிப்.9- திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்திற்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளதால், அப்பகுதி யைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராமத்தி னர் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது. திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் புலி கள் காப்பகம் வனப்பகுதி வழியாக அமைந்துள்ளது திம்பம் மலைப்பாதை. இங்கு இரவு நேர வாகன போக்கு வரத்தால், வாகனங்களில் அடிபட்டு வன விலங்குகள் உயிரிழந்து வந்தன. இது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதி பதி (பொறுப்பு) முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த 2019 ஆம் ஆண்டு ஈரோடு ஆட்சியர், திம்பம் மலைப்பாதை யில் இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதித்த உத்தரவை இன்று முதல் அமல் படுத்தவும், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்தை தடை செய்யுமாறும் உத்தரவிட்டது. இந்நிலையில், செவ்வாயன்று வெளி யிடப்பட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பு தாளவாடி மலைப்பகுதி மக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தாள வாடி தாலுகாவில் உள்ள 10 ஊராட்சி களில் வசிக்கும் 70 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மக்கள் தினந்தோறும் தங்களது அத்தி யாவசியத் தேவைகளுக்காக சத்திய மங்கலம், கோபிசெட்டிபாளையம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதிப்பதன் மூலம் தாளவாடி, ஆசனூர், மற்றும் கேர் மாளம் ஆகிய மலைப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் தனித் தீவாக மாறும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக அனைத்து அரசியல் கட்சியினர் வியாபாரிகள், விவசாய சங்கங் கள் மற்றும் பொதுமக்கள் அடங்கிய கூட்ட மைப்பினர் செவ்வாயன்று மாலை தாள வாடியில் அவசர ஆலோசனை கூட்டம் மேற் கொண்டனர். இதில், வியாழனன்று காலை (இன்று) பண்ணாரியில் நடைபெறும் போராட்டத்தில் தாளவாடி மலைப் பகுதி யைச் சேர்ந்த மக்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள் ளது என போராட்டக் குழுவினர் தெரி வித்தனர்.
உதகை: பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
உதகை, பிப்.9- உதகை மார்க்கெட் பகுதியில் பாதாள சாக்கடை குழாய் சரி செய்யும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உதகை காபி அவுஸ் பகுதியில் நக ராட்சி மார்க்கெட் வளாகத்தையொட்டி நடை பாதை உள்ளது. நடைபாதைக்கு அடியில் பாதாள சாக்கடை குழாய்கள் செல்கின்றன. இந்நிலையில், பாதாள சாக்கடை குழா யில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்வ தற்காக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நடைபாதையில் இருந்த இன்டர்லாக் கற்கள் அகற்றப்பட்டன. பின்னர், பள்ளம் தோண் டப்பட்டு மண் மற்றும் கற்கள் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ளது. பழுத டைந்த குழாய்களுக்கு பதிலாக புதிய குழாய்கள் அமைக்கப்பட்டன. ஆனால், இன்னும் நடைபாதை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் சாலை யில் நடந்து செல்லக்கூடிய நிலை ஏற் பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், பாதாள சாக்கடை சீர மைப்பிற்காக நடைபாதையில் உள்ள இன் டர்லாக் கற்கள் அகற்றப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், நடை பாதையை பயன்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது. மேலும், நகராட்சி மார்க் கெட்டிற்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரும் வாகனங்கள் உள்ளே செல்ல முடிவதில்லை. சாலையில் நடக்க வேண்டியுள்ளதால், விபத்தில் சிக்கும் அபாயமும் நீடிக்கிறது. எனவே, விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவலர்கள் கொடி அணிவகுப்பு பேரணி
இளம்பிள்ளை, பிப்.9- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சங்க கிரியில் காவலர்கள் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தி னர். சேலம் மாவட்டம் சங்க கிரி, தேவூர், அரசிராமணி, ஆகிய பேரூராட்சி பகுதி களில் புதனன்று காவல் துறை சார்பில் கொடி அணி வகுப்பு பேரணி நடைபெற் றது. சங்ககிரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் தலைமை யில் நடைபெற்ற இப்பேரணி சங்ககிரி பழைய பேருந்து நிலையம், தேவூர் பேருந்து நிலையம், அரசிராமணி செட் டிப்பட்டி பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகள் வழியாக சென்று நிறைவு பெற்றது.