districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பழுதான சாலை; தரமற்ற அரிசி - பொதுமக்கள் ஆவேசம்

திருப்பூர், டிச.15- பல்லடம் தாலுகா, சாமளாபுரம் பேரூராட்சி யில் பழுதான சாலையை செப்பனிடவும், நியாய  விலை கடையில் தரமான அரிசி வழங்கவும் வலியு றுத்தி சாலை மறியல் செய்ய பொதுமக்கள் திட்டமிட்டனர். இதையடுத்து காவல்துறையினர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மேற்படி பணிகளை செய்ய ஒப்புக் கொண்டதால், மறியல் போராட்டம் ஒத்திவைக்கப் பட்டது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா சாம ளாபுரம்  பேரூராட்சி வி. அய்யம்பாளையத்தில் அத்திக்கடவு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க  தோண்டப்பட்டதால் பழுதான காங்கிரீட் சாலையை சீரமைத்திட வேண்டும். நியாய விலை கடையில் தரமான அரிசி வழங்க வேண்டியும் ஊர்  மக்கள் சார்பாக எதிர்வரும் வெள்ளியன்று சாலை  மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து  இருந்தனர். இந்த நிலையில் மங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் மேற்படி பிரச்சினை தொடர் பாக சாமளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர், பல்லடம் வட்ட வழங்கல் துறை அதிகாரிகளை யும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  இதில் பேரூராட்சி செயல் அலுவலர், கான் கிரீட் சாலை பணிகளை ஜனவரி 30ஆம் தேதிக் குள் முடித்து தருவதாக உறுதியளித்தார். இதே போல், பல்லடம் வட்ட வழங்கல் அலுவலர் உடனடியாக தரமற்ற அரிசியை மாற்றி தரமான அரிசி வழங்க ஒப்புதல் தெரிவித்ததுடன், எதிர் வரும் காலங்களில் இப்படி தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் கூறினார். இதைய டுத்து சாலை மறியல் போராட்டத்தை தற்காலிக மாக ஒத்திவைப்பதாக ஊர் பொதுமக்கள் சார்பில்  அங்குள்ள அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ள னர்.

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வு

அவிநாசி, டிச.15- அவிநாசி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் பாலியல் துன்பு றுத்தல், வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற் றது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில், குழந்தைகள் கடத்தல் தடுப்பு  பிரிவு சார்பில் பெண் குழந்தைக ளுக்கு எதிரான பாலியல் சீண்டல் மற் றும் வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடை பெற்றது. இதில், திருப்பூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சுமதி கலந்து கொண்டு பேசுகையில், 18 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகள் போக்சோ சட் டத்தை கட்டாயம் தெரிந்துக் கொள்ள  வேண்டும். பாலியல் துன்புறுத்தல் மற்றும் குற்றங்களில் இருந்து குழந் தைகளை காப்பதே இச்சட்டம் தான். இதில் புகார்கள் ரகசியம் காக்கப்ப டும். பாலியல் குற்றம் சார்ந்த புகார் களை, இருந்த இடத்தில் இருந்தே தெரிவிக்கலாம், என்றார். இந்நிகழ்வில் கோவை இமயம் சமூக நல மைய நிர்வாகி மேரி புஷ் பம், பள்ளி தலைமையாசிரியர் (கூடு தல் பொறுப்பு) திலகவதி, மாண வியர்கள், ஆசிரியர்கள் உட்பட திர ளானோர் கலந்து கொண்டனர்.

காங்கேயம் அருகே வயதான தம்பதி படுகொலை

திருப்பூர், டிச.15- காங்கயம் அருகே வய தான தம்பதியினர் கொடூர மாக  கொலை செய்யப்பட் டுள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், காங்கயம் ஒன்றியம், தம்ம ரெட்டிபாளையம் ஊராட் சிக்குட்பட்ட ரங்காம்பாளை யம் பகுதியில் தனியே வசித்து வந்தவர்கள் பழ னிச்சாமி (72), வள்ளியம் மாள் (68) தம்பதியினர். இவர் கள் மர்ம நபர்களால் படு கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளளது.