districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கோவை, ஜன.4-  கோவை துடியலூரை  அடுத்துள்ள ராக்கிப்பாளை யம்  பிரிவில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்-மில் திங்களன்று இரவு கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. சிசிடிவி காட்சிகளின் பதிவின் மூலம் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் பிடிபட்டனர்.  கோவை துடியலூரை  அடுத்துள்ள ராக்கிப்பாளை யம்  பிரிவில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் செயல்படுகிறது. இந்த  மையத்துக்குள் திங்களன்று நள்ளிரவு 2 மணியளவில் இரு  வாலிபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் ஏ.டி.எம். எந்தி ரத்தின் கதவை திறந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற னர். இந்த தகவல் மும்பையில் உள்ள வங்கி அலுவலகத் துக்கு சென்றது. உடனடியாக வங்கி அதிகாரிகள் இது குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ள னர். போலீசார் ஏ.டி.எம். மையத்துக்கு விரைந்து சென்ற னர். அப்போது, ஏ.டி.எம். இயந்திரம் திறந்து இருந்தது. இத னையடுத்து மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்கா ணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு  செய்தனர். அதில் 2 வாலிபர்கள் குடிபோதையில் தள்ளாடிய படி ஏ.டி.எம். எந்திரத்தை திறக்கும் காட்சிகள் பதிவாகி இருந் தது. அதில் பதிவான காட்சிகளை வைத்து அந்த பகுதி முழுவதும் போலீசார் தேடினர். அப்போது, ஏ.டி.எம். மையத் துக்கு அருகிலேயே 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்த னர். அவர்கள் அருகே போலீசார் சென்று பார்த்தபோது அவர் கள் தான் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து கொள்ளை யடிக்க முயன்றது தெரியவந்தது. பின்னர்,  இருவரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசா ரணை நடத்தினர்.   இந்த விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்திரசேகர் (24), பிருந்தாவன் பாகரதி (26) என்பதும் தெரிய வந்தது. மேலும், இவர்கள் இருவரும் நர சிம்ம நாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத் தில் ஊழியராக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. இவர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு அருகிலேயே அறை எடுத்து தங்கி உள்ளனர். திங்களன்று விடுமுறை நாள் என்பதால் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் மது கடைக்கு சென்று மது குடித்தனர். பின்னர், போதை தலைக்கேறிய நிலையில் அறைக்கு செல்லும் வழியில் உள்ள ஏ.டி.எம். மையத்தை திறந்து கொள்ளையடிக்க முயன்றது தெரிய வந்தது. பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்  அடைத்தனர்.