districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

உடுமலை நகராட்சி: 13 ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு

உடுமலை, ஜன.31- உடுமலை நகராட்சி தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி 13ஆவதுவார்டில் போட்டியிடுகிறது. உடுமலை நகாரட்சியில் உள்ள  33 வார்டில் மொத்தம் 57,482 வாக்காளர்கள் உள்ளார்கள். இந்த தேர்தலில்  திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட் டணி கட்சிகள் இணைந்து செயல்படுவது என்று  முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கூட்டணி கட்சிக ளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு  பழைய அக்ரஹாரம், வி.ஜி. ராவ் நகர், கண்ணப்பன் நகர், திருப்பூர் ரோடு,  சாதிக்நகர், வேல்முருகன் வேஅவுட் உள்ளடக்கிய 13  ஆவது வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் இந்திய காங்கிரஸ் கட்சிக்கு  மூன்று வார்டு களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதிமுக கட் சிக்கு தலா ஒரு வார்டுகளும் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் செய்யபட்டுள்ளது. திமுக தெற்கு மாவட்ட பெறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டணி பேச்சு வார்த்தையில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் எஸ்.ஆர். மதுசூதனண், நகர செயலாளர் பால தண் டபாணி, நகரக்குழு உறுப்பினர்கள் விஸ்வநாதன், தோழன்ராஜா, லால், வசந்தி, கருப்புசாமி மற்றும் மோட் டார் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் சுதா சுப்பிரம ணியன், திமுக நகர செயலாளர் மத்தீன், அவைத்தலை வர் ஆசாத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.

தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு

திருப்பூர், ஜன.31- திருப்பூரில் மாநகராட்சி தேர்தல் பணியில் ஈடுபட வுள்ள பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு திங்களன்று  நடைபெற்றது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல்  ஆணையம் வழிகாட்டுதலின்படி தேர்தல் தொடர்பான  பணிகள் நடைபெற்று வருகின்றன. திருப்பூர் மாநக ராட்சிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் 2018 அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு திங்களன்று ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் நடைபெற்றது. வாக்குப்பதிவின்போது வாக்குச்சா வடி மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பினை மாநக ராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலரு மான கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு செய்து ஆலோ சனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிராந்தி குமார்  பாடி, தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு திங்களன்று துவங்கி நடை பெற்று வருகிறது.  மாநகராட்சி முழுவதும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படக் கூடிய வகையில் கண்கா ணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

திருப்பூர் மாநகராட்சி தேர்தல்: காங்கிரஸ் கட்சிக்கு 5 வார்டுகள்

திருப்பூர், ஜன.31- திருப்பூர் மாநகராட்சி வார்டுகளுக்கு நடை பெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமை யிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து வார் டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 60 வார்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு  25, 30, 48, 51, 55 ஆகிய ஐந்து வார்டுகள் ஒதுக்கப் பட்டுள்ளன. இதில்25ஆவது வார்டில் ஈ.பூபேஷ், 30ஆவது வார்டில் ஜி.முத்துலட்சுமி, 48ஆவது வார்டில்  கோ.விஜயலட்சுமி, 51ஆவது வார்டில் கே.செந்தில் குமார், 55ஆவது வார்டில் ஏ.தீபிகா ஆகியோர் போட்டி யிடுவார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் தெரிவித்துள் ளார். இதில் கே.செந்தில்குமார் கடந்த 2009ஆம் ஆண்டு  மாநகராட்சியாக திருப்பூர் தரம் உயர்த்தப்பட்ட நிலை யில் துணை மேயராக இருந்தார். 55ஆவது வார்டு  வேட்பாளர் ஏ.தீபிகா முன்னாள் திருப்பூர் மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சியின் மகள் ஆவார்.

அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள் அகற்றம்

அவிநாசி, ஜன.31- நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி திங்க ளன்று சேவூர் சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட பல் வேறு இடங்களில் விளம்பர பதாகைகள் மற்றும் சுவ ரொட்டிகள் போன்றவற்றை மறைக்கும் பணியில் பேரூ ராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சாலை விபத்தில் 3 பேர் பலி

தாராபுரம், ஜன.31- திருப்பூர் மாவட்டம், தாராபுரம் - ஒட்டன்சத்திரம் புறவழிச் சாலையில், சாலக்கடை அருகே கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத் தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தேனி மாவட்டம், போடிநாயக்கனூர், குலசேகர பட்டி னம் தெருவைச் சேர்ந்தவர் பிரேமலதா (40), அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சுபத்ரா கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண் டாம் ஆண்டு பயின்று வருகிறார்.இந்நிலையில் தனது மகள் சுபத்ராவை கல்லூரியில் விட தனது மூத்த சகோதரர் கல்யாணசுந்தரம் (61), என்பவரை உடன் அழைத்து வந்துள் ளார். அப்போது, இவர்கள் சென்ற காரை டிரைவர் நாகராஜ் (23) என்பவர் ஒட்டி சென்றுள்ளார்.  இந்நிலையில், இவர்கள் சென்ற கார் திண்டுக்கல் வழியாக ஒட்டன்சத்திரம் தாராபுரம் அருகே சாலக்கடை என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது பாலத் தின் மீது முன்னே சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன் றதாக கூறப்படுகிறது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை  இழந்த கார் சாலையில் குப்புற கவிழ்ந்தது. இதனை எதிர் பார்க்காத பின்னே வந்த வாகனம் இவர்களின் கார் மீது பயங் கரமாக மோதியது. இதில் பிரேமலதா, கல்யாணசுந்தரம், நாகராஜ் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதா பமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மாணவி சுபத் திரா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து மூலனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்  உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பூர், ஜன.31- வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உத வித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என  திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள் ளது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்ப தாவது, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து 5 ஆண்டுகள் புதுப் பித்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக் காத படித்த இளைஞர்களுக்கு மாதந்தோ றும் தமிழக அரசு சார்பில் உதவித் தொகை  வழங்கப்பட்டு வருகிறது.  10 ஆம் வகுப்பு  தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, தேர்ச்சி  பெற்றவர்களுக்கு ரூ.300, மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.600 வழங்கப்படுகிறது.  அதேபோல பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்க ளுக்கு ரூ.400, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.750, பட்டதாரி மற்றும் முதுநிலைப்பட்ட தாரிகளுக்கு ரூ.600, மாற்றுத்திறனாளிக ளுக்கு ரூ.1,000 உதவித்தொகையாக வழங் கப்படுகிறது. இந்த உதவித்தொகையை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், இதர வகுப்பினர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண் டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது உச்ச வரம்பு இல்லை. விண்ணப்பதாரரின் குடும்ப  ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகா மலும் பள்ளி அல்லது கல்லூரி  படிப்பை தமிழகத்திலேயே முடித்து 15 ஆண்டுகள் வசித்தவராகவும், முற்றிலும் வேலை இல் லாதவராகவும் இருக்க வேண்டும். மேலும் கல்வி நிறுவனத்துக்கு சென்று நாள்தோறும் படிக்கும் மாணவ, மாணவியராக இருக்கக் கூடாது.  ஆனால் தொலைதூரக்கல்வி மற் றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் நபர்கள்  விண்ணப்பிக்கலாம். திருப்பூர் மாவட்டத்தில் மேற்கண்ட தகு தியுடைய நபர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.tnvelaivaaippu.gov.in  என்ற இணையதளம் மூலமாகவோ விண் ணப்பத்தினைப் பதிவேற்றம் செய்து கொள் ளலாம். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை சுயஉறுதிமொழி ஆவ ணங்களுடன் மார்ச் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த உதவித் தொகையானது தமிழ்நாடு அரசுப்பணியா ளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்வுக்கும் இணைய தளம் மூலமாக விண்ணப்பம் செய்வதற் கும், தேர்வு மையங்களுக்கு சென்று வருவ தற்கும் வழங்கப்படுவதாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பரிசோதனை முகாம்கள்

திருப்பூர், ஜன.31- திருப்பூர் நகரில் கொரோனா தொற்று பர வலை கட்டுப்படுத்தும் வகை யில் திங்களன்று காய்ச்சல் பரிசோதனை முகாம் நடை பெற்றது. முதலாவது மண்டலத் துக்கு உட்பட்ட ஸ்ரீ நகர், ஸ்ரீ வித்யா நகர், 2 வது மண்டலத் துக்கு உட்பட்ட நேரு நகர், ஆகிய பகுதிகளில் இந்த முகாம் நடைபெற்றது.  அதேபோன்று 3-வது  மண்டலத்துக்கு உட்பட்ட  பொன்முத்து நகர், பெரிய தோட்டம் பள்ளிவாசல் பகுதி ஆகிய இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடைபெற்றன.  இதில் பொதுமக்கள் கலந்து  கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

சூயஸ் நிறுவனத்தை கண்டித்து போராட்டம்: மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

கோவை, ஜன.31-  கோவை இராமநாதபுரம் அரசுப்  பள்ளியில் சூயஸ் நிறு வனம் தண்ணீர் தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் 8 பேர் மீது போலீ சார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 24 மணி  நேரமும் குடிநீர் வழங்கும் சுயஸ் குடிநீர் திட்டத்தின் கீழ், குழாய்கள் அமைக்கும் பணி  நடைபெற்று வருகிறது. இதற்காக கோவை ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி யில் உள்ள விளையாட்டு மைதானத்தில் குடிநீர் தொட்டி அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு, தொட்டி கட்டும்  பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு  தெரிவித்து மீண்டும் பள்ளியின் முன்பு மாணவர்கள், சூயஸ் திட்ட பணிகளை நிறுத்தக் கோரியும், மாநகராட்சி நிர்வா கத்தைக் கண்டித்தும் ஞாயிறன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து அங்கு வந்த போலீசார் மாணவர்களு டன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு அவர்களை கலைந்து போகச் செய்தனர். இந்நிலையில் பள்ளி வளாகத்தில் சூயஸ் தண்ணீர் தொட்டி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப் பாட்டத்தை முன்னெடுத்த 8 மாணவர்கள் மீது நோய்த் தொற்று பரவல் கட்டுப்பாடுகளையும் மீறி கூடியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ், ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு  செய்துள்ளனர்.

சோளத்தட்டு ஏற்றி சென்ற டிராக்டரில் தீ

ஈரோடு, ஜன.31- மின் கம்பியில் உரசியதில் டிராக்டரில் ஏற்றி செல்லப் பட்ட சோளத்தட்டு தீப்பிடித்து எரிந்தது. ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த அருள்வாடி கிராமத்தில் இருந்து கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் அருகே உள்ள திரக்கனாம்பி பகுதிக்கு சோளத்தட்டு பாரம்  ஏற்றி கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டு இருந்தது. தமிழக - கர்நாடக எல்லையான அருள்வாடி குட்டை அருகே டிராக்டர் சென்ற போது, அங்கிருந்த மின்கம்பியில் சோளத் தட்டு உரசியது. இதில், சோளத்தட்டு தீ பிடித்து எரிந்தது. இதனை சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் கீழே இறங்கி உயிர் தப்பினார். மேலும், மளமளவென பரவிய தீ கொழுந்து விட்டு  எரிந்ததால், சோளத்தட்டுடன் சேர்ந்து, டிராக்டரும் எரிந்து  சேதமானது. இதுகுறித்து தாளவாடி காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சொத்து தகராறில் பெண்ணை படுகொலை செய்தவரும் தற்கொலை

இளம்பிள்ளை, ஜன.31- எடப்பாடி அருகே சொத்து தகராறில் பெண்ணை வெட்டி படுகொலை செய்துவிட்டு, கொலை செய்தவரும் தற் கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட மூப்ப னூரில் கோவிந்தன் என்பவர் தனது மனைவி மாதேஸ்வரி, சகோதரர் அண்ணாதுரை, மகன் கோபால் ஆகியோர் குடும் பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், மாதேஸ்வரி யிடம் சொத்தை பிரித்து தரும்படி, அவ்வப்போது அண்ணா துரை தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலை யில், ஞாயிறன்று பால் வாங்கி கொண்டு வீடு திரும்பிய மாதேஸ்வரியை, அண்ணாதுரை மதுபோதையில் கொடு வாளால் வெட்டி கொலை செய்துள்ளார். இதன்பின், அண்ணாதுரையும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன் றுள்ளார். இதையடுத்து எடப்பாடி அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட அண்ணாதுரை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து எடப்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

தஞ்சாவூர், ஜன. 31 - பள்ளி மாணவி தற்கொலை  தொடர்பாக தேசிய குழந்தைகள்  உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தினர் திங்களன்று தாமாக முன்வந்து தங்களது விசாரணையை தொடங் கினர். ஆணையத்தின் தலைவர் பிரி யங்கா கனூங்கோ, உறுப்பினர்கள் மதுலிகா சர்மா, கத்யாயினி ஆனந்த்  ஆகியோர், திங்கட்கிழமை தஞ்சா வூர் ரயில் நிலைய விருந்தினர் இல் லத்தில் விசாரணையை தொடங்கி னர். அப்போது, மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா,  வல்லம் டிஎஸ்பி ஆர்.பிருந்தா,  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட கல்வி அலுவ லர் குழந்தைராஜன், மாணவிக்கு மருத்துவ சிகிச்சை அளித்த மருத்து வர்கள் ஹேமா அகிலாண்டேஸ் வரி, ஜீவானந்தம், அஞ்சை, உடற் கூராய்வு செய்த மருத்துவர்கள் உத யபானு, அருள்மதி கண்ணன், மாவட்ட குழந்தைகள் நல பாது காப்பு அலுவலர் திலகவதி, மாண வியை வீடியோ எடுத்த முத்துவேல்,  மைக்கேல்பட்டி கிராம மக்கள், முன் னாள் பள்ளி மாணவிகள், தற்போது அதே பள்ளியில் படித்து வரும் மாண விகள், மாணவியின் தாய் வழி  தாத்தா - பாட்டி, சமூக ஆர்வலர்கள்  பியூஸ்மானூஸ், வழக்கறிஞர் வெ. ஜீவக்குமார் உள்ளிட்ட 20-க்கும் மேற் பட்டோர் ஆஜராகி தங்களது கருத்து களை ஆணையத்திடம் தெரிவித்த னர்.    காலை 8.30 மணிக்கு தொடங் கிய விசாரணை பகல் 12 மணி வரை நடைபெற்றது. ஆணையம் மற்றும் பொதுமக்கள் சார்பில் கேட்கப்படும் கேள்விகளையும், பதில்களையும் கூடுதல் மாவட்ட ஆட்சியர் என்.ஓ. சுகபுத்ரா ஒருங்கிணைத்தார். இதன்பின்னர் ஆணையத்தினர்  மாணவி படித்த மைக்கேல்பட்டி பள் ளிக்கு சென்று, பள்ளியின் அங்கீகார  ஆவணங்கள், காப்பகத்தின் ஆவ ணங்களை சரிபார்த்தனர். பின்னர் பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள், மாணவிகள், காப்பகத்தில் உள்ள வர்களிடம் விசாரணை நடத்தப்பட் டது. மைக்கேல்பட்டியில் சுமார் 1.30  நேரம் ஆணையத்தினர் விசாரணை நடத்தினர். வழக்கறிஞர் ஜீவக்குமார் பேட்டி பின்னர் வழக்குரைஞர் வெ.ஜீவ குமார் அளித்த பேட்டியில், ஏற்க னவே, தமிழக குழந்தைகள் ஆணை யம் மாணவி தற்கொலை விவகாரம் குறித்து விசாரித்து வருகிறது. மாநில அரசின் குழந்தைகள் ஆணையம் விசாரிக்கும் போது, மத்திய அர சின், தேசிய குழந்தைகள் பாது காப்பு ஆணையத்தின் விசாரணை தேவையா?. இறந்த மாணவி தாயின் அன்பில் வளரவில்லை. அம்மாண விக்கு மாற்றாந்தாய் சூடு வைத்தது  போன்ற பல தகவல்கள் வெளியாகி யுள்ளன. எனவே, மாற்றாந்தாயால்,  அந்த மாணவி கொடுமைப்படுத்தப் பட்டுள்ளாரா என விசாரிக்க வேண் டும்.  திருமனூர் காவல்நிலையத்தில் முதல் முறையாக புகார் அளிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் திருமனூர் புகார் தொடர்பாக எந்த  விசாரணையும் வெளியில் காட்டப் படவில்லை. எனவே புதிய விசா ரணை நடத்த வேண்டும். விசாரணை ரகசியமாக இல்லாமல், வெளிப்படை தன்மையுடன் நடத்தப்பட வேண் டும்.  பிரிவு 14 சிபிசி படி, மக்களுக்கு  நோட்டீஸ் அனுப்ப வேண்டும். பிரிவு 13/2 படியும் நடத்த வேண்டும் என மனு அளித்துள்ளோம். இறந்த  மாணவியின் தாய், மாணவிக்கு ஏழு  வயது இருக்கும் இறந்துள்ளார்.  மாணவிக்கு சூடு போடப்பட்டுள் ளது. அது எப்படி சூடு போடப்பட் டது.  மாணவியின் உடலில் இயற்கை யான தோல் சம்மந்தமான நோய்கள் இருந்துள்ளது. மாணவி வீட்டுக்கு  போனால், அவருக்கு தனி படுக்கை,  தனி சாப்பாடு என்பதால், விடுமுறை யில் கூட வீட்டிற்கு போக மனமில்லா மல் விடுதியில் இருந்துள்ளார்.  உடன்பிறந்த தம்பிகளுடன் இருக்க முடியவில்லை. இதனால்  அந்த மாணவிக்கு இயற்கையான  மனித வாழ்க்கை மறுக்கப்பட்டுள் ளது. மாற்றாந்தாய் கொடுமைக்கு உடனடியாக தீர்வு காண வேண் டும்” என்றார்.

புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

இளம்பிள்ளை, ஜன.31- மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புதிய ஆய்வா ளராக வெங்கடேஷ் பிரவு பொறுப்பேற்றுக் கொண் டார். சேலம் மாவட்டம், சங்க கிரி வட்டம், மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் ஆய் வாளராக ரவி என்பவர் பணி யாற்றி வந்தார். இவர் கடந்த ஜன.26 ஆம் தேதியில் திடீ ரென இடமாற்றம் செய்ததை அடுத்து, தலைவாசல் காவல் நிலையத்தில் பணியாற்றிவந்த வெங்க டேஷ் பிரபு என்பவர் மகுடஞ் சாவடி காவல் நிலைய புதிய ஆய்வாளராக நியமிக்கப் பட்டு, திங்களன்று அவர் பொறுப்பேற்றுக் கொண் டார். மேலும், இந்த காவல் நிலையத்தில் கடந்த ஒரு  வருடத்தில் மட்டும் சண்முக சுந்தரன், முத்துசாமி, இளங்கோ, ரவி தற்போது வெங்கடேஷ் பிரபு என்பவர் ஐந்தாவது ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண் டது குறிப்பிடத்தக்கது.