districts

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

பயிர்காப்பீடு திட்டத்திலுள்ள  கடும் நிபந்தனைகளை மாற்றிடுக

விவசாயிகள் கோரிக்கை

உடுமலை, டிச.1-  பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீடு பெறவும், பயிர்கடன் தவணைகளை திருப்பி செலுத்தவும் வேளாண்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக விவசாய பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது. இந்நிலையில், விவசாயிகள் தங்கள் விளைவித்த பயிர்களுக்கு கூட்டுறவு வேளாண் கடன் சங்கத்தின் மூலம் பயிர்க்கடனும், வேளாண்துறையின் மூலம் பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடும் செய்துள்ளார்கள். ஆனால், பயிர்க்காப்பீடு திட்டத்தின் பயனை பெற தற்போது கட்டுப்பாடுகள் உள்ளதையும், பயிர்க்கடன் திரும்ப செலுத்தும் நிபந்தனைகளை மாற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த காலங்களில் பயிர்க்காப்பீடு திட்டதின் கீழ் பயன் பெற வேண்டும் என்றால், மாவட்ட அளவில் அதிக சேதாரம் ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு பெற முடியும் என்ற நிலை இருந்தது. விவசாயிகளின் கடுமையான போராட்டங்கள் மூலம் கிராம அளவில் பயிர்கள் சேதம் ஏற்பட்டால் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது மீண்டும் விவசாயிகள் விளைவித்த பயிர்களின் தன்மையை ஒன்றிய (பிர்க்கா) என்ற அடிப்படையில் சேத அளவை கணக்கீட்டு இழப்பீடு வழங்கும் முறையில் உள்ளதை மாற்றி, காப்பீடு செய்த பயிர்கள் எங்கு சேதம் அடைத்தாலும் அதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.  இதேபோல், பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தில் மூலம் தென்னை மரங்களுக்கு ஒரு வருட தவணையும், மக்காசோளம் பயிர் செய்ய ஆறு மாதகால தவணையும், கொண்டக்கடலை பயிர் செய்ய இரண்டு மாத தவணையில் பயிர்க்கடன்களை திருப்பி செலுத்த வேண்டும் என்ற நிபத்தையின்படி விவசாயிகளுக்கு கடன் தரப்படுகிறது. ஏற்கனவே, விவசாயிகள் வேளாண்மை செய்ய போதிய பணம் இல்லாமல் தான் கடன் பெறுகிறார்கள். இத்தகைய சூழலில் தவணைகளை குறுகிய காலத்தில் திருப்பி செலுத்த வேண்டும் என்று நிபத்தனை விதிப்பதன் மூலம் மீண்டும், மீண்டும் கடன் தொகை அதிமாக தான் அதிக வாய்ப்புகள் ஏற்படுகிறது. ஆகவே, மழையால் ஏற்பட்ட கடுமையான சேதம் உள்ளிட்ட காரணங்களால் பயிர்கடன் குறித்த நிபந்தனைகளை  மாற்றம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ரூ.30 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி,  டிச.1- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செவ் வாயன்று நடைபெற்ற நிலக் கடலை ஏலத்தில் ரூ.30 லட் சத்திற்கு வர்த்தகம் நடை பெற்றது. சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த  வாரம் நடைபெற்ற ஏலத்தில் 940 மூட்டைகள் விற்பனைக் காக வந்திருந்தன. அதில், குவிண்டால் ஒன்றுக்கு  முதல் ரக நிலக்கடலை ரூ.7,150 முதல் ரூ.7,300 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.6,8 00 முதல் ரூ.6,900 வரை யிலும், மூன்றாவது ரக நிலக் கடலை ரூ.6,400 முதல் ரூ.6,550 வரையிலும் ஏலம் போனது.மொத்தம் ரூ.30 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத் தில் 12 வியாபாரிகள், 88 விவசாயிகள் பங்கேற்றனர். 

மண்ணின் தன்மை அறிந்து உரமிட வேண்டும் 
வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தல்

ஈரோடு, டிச.1-  நீர் மற்றும் மண்ணின் தன்மை அறிந்து விவசாயிகள் அதற்கு ஏற்ப உரமிட வேண் டும் என்று வேளாண் அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.  இதுதொடர்பாக, ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சின்னாசமி கூறியதாவது: மண் பரிசோதனை செய் வதன் மூலம் மண்ணின் தன்மை, அதில் உள்ள ஊட்டச்சத்துகளை அறியலாம். மண் ணுக்கு பொருத்தமான பயிர்களை தேர்வு செய்து சாகுபடி செய்யலாம். மண் பரிசோ தனை மூலம் பரிந்துரைக்கப்படும் உரத்தை  மட்டும் இடுவதால் உரச் செலவு குறையும். மண்ணரிப்பு, கசிவின் மூலம் வயலை விட்டு  அதிக உரங்கள் வெளியேறுவது தடுக்கப் படும். மண், காற்று மாசுபாடு தவிர்க்க லாம். மண் வளம் அதிகரித்து, உற்பத்தி திறன் அதிகமாகி லாபம் பெற முடியும்.  இதே போல், விவசாயிகள், விளை நிலத் துக்கு பயன்படுத்தும் நீரின் தன்மை பரி சோதனை நிலையத்தில் ரூ.20 கட்டணம் செலுத்தி அறியலாம். இது தொடர்பாக விவ சாயிகள் அந்தந்த பகுதி வேளாண் விரி வாக்க மையங்களை அணுகி உரிய விப ரங்களை கேட்டுத்தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.