மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது
தருமபுரி, மே 1- அதியமான் கோட்டை அருகே பள்ளி மாணவனை அடித்த ஆசிரியர் கைது செய் யப்பட்டார். தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன்(40). இவரது மகன் பிரணவ் ஆதித்யா (11) என்ப வர் அதியமான் கோட்டையில் உள்ள அறி ஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி யில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வாரம் வழக்கமாக மாணவன் பள்ளிக்கு சென்றார். அப்போது பள்ளியில் ஆசிரிய ராக இருந்த வெண்ணம்பட்டி பகுதியைச் சேர்ந்த துரைராஜ் (54) என்பவர் மாணவனி டம் வகுப்பிற்கு சரியான நேரத்திற்கு வருவ தில்லை என்று அடித்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அவரது தாயார் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித் தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய அதியமான்கோட்டை போலீசார் பள்ளி ஆசிரியரை கைது செய்த னர்.
மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை
இளம்பிள்ளை, மே 1- மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்கா ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள் ளனர். சேலம் மாவட்டம், சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேவூர், அம்மாபாளையம், புள்ளாகவுண்டம்பட்டி, புளியம்பட்டி, அரசிராமணி, செட்டிபட்டி, குள்ளம்பட்டி, ஒடசகரை, காவேரிப்பட்டி, மேட்டூர், வட்ராம்பாளையம், சென்றயனூர், தண்ணீர்தாசனூர், ஒக்கிலிபட்டி, கல்வடங் கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்பட்டி ருந்தது. இந்நிலையில், மஞ்சள் அறுவடை துவங்கியுள்ள நிலையில், போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டைவிட ஏக்கர் ஒன்றுக்கு 30 முதல் 40 ஆயிரம் வரை செல வுகள் செய்தும் மஞ்சளில் நோய் தாக்கம் ஏற்பட்டதால் மகசூல் குறைந்தது. இதனால் மார்க்கெட்டில் கடந்த ஆண்டைவிட ரூ.1000 முதல் ரூ.2 ஆயிரம் வரை குறைவாக விற்பனையாவதால் மஞ்சள் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே, மஞ்ச ளுக்கு உரிய விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிக வட்டி தருவதாக கூறி முதியவரிடம் ரூ.20 லட்சம் மோசடி
கோவை, மே 1- அதிக வட்டி தருவதாக முதியவரை ஏமாற்றி 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் கூறுகை யில், கோவை கணபதியை அடுத்த போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ் (62). இவரது நண்பர் திருநெல்வேலியை சேர்ந்த ஜெயராமன் என்ப வர் கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் வசித்து வருகி றார். கடந்த 2017 ஆம் ஆண்டு செல்வராஜ் தனக்கு சொந்த மான வீட்டை விற்பனை செய்துள்ளார். அப்போது அதில் கிடைத்த 26 லட்ச ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்ய முடிவு செய்தார். அப்போது அவரது நண்பர் ஜெயராமன் வங்கியில் டெபாசிட் செய்தால் குறைந்த வட்டி தான் கிடைக்கும். என்னுடைய பைனான்ஸ் தொழிலில் முதலீடு செய்தால் கூடுதலாக வட்டி கிடைக்கும் என்றும், ஒரு வருடத்தில் முதலீட்டு தொகையை திருப்பித் தருவதாக ஆசை வார்த்தை கூறி இருக்கிறார். இதை நம்பி செல்வராஜ் 26 லட்ச ரூபாயை ஜெயராமன் இடம் கொடுத்து உள்ளார். ஆனால் ஜெயராமன் கூறியபடி வட்டி தொகையையும் கொடுக்காமல் வாங்கிய முதலீட்டு தொகையையும் கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள் ளார். இதையடுத்து செல்வராஜ் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். தொடர்ந்து இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். இதை யடுத்து வட்டித் தொகை தருவதாக கூறி 20 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சின்னவேடம்பட்டியை சேர்ந்த ஜெய ராமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி: போதை ஊசி விற்ற இருவர் குண்டர் சட்டத்தில் கைது
'தருமபுரி, மே 1- தருமபுரியில் போதை ஊசி விற்ற வழக்கில் கைதான இரு வரை காவல் துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை பகுதியில் கடந்த மாதம் பெங்களூருவில் இருந்து போதை ஊசிகளை வாங்கி விற்பனை செய்வதாக இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். இதையடுத்து இந்த வழக் கில் கைதான மயில்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த வஜ்ர வேல் (42), சாமிரெட்டிப்பட்டியை அடுத்துள்ள கமல நத்தம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (46) ஆகிய இருவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி உத்தரவிட்டார். அதன்பேரில் அதிய மான்கோட்டை காவல் துறையினர் மேற்கண்ட இருவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
திருப்பூர், மே 1- திருப்பூர் மாவட்டம், நொய்யல் ஆறு மின்மயானம் அரு கில் உள்ள வே-பிரிட்ஜ் பக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி வீரபாண்டி அவரப்பாளையத்தைச் சேர்ந்த த.ராஜேந்திரன் (60) என்பவரை முன் விரோதம் காரணமாக முதலிபாளையத்தைச் சேர்ந்த நா. இப்ரா ஹிம் (40) என்பவர் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்தார். இது தொடர்பாக வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவுற்று வியாழனன்று திருப்பூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி சொர்ணம், ஜே.நடராஜன் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து இப்ராஹிம் திருப்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
பவானிசாகர் அணையிலிருந்து நீர் திறப்பு
ஈரோடு, மே 1- ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை யிலிருந்து 205 கன அடி நீர் வெளியேற் றப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடி நீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானி சாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வரு கின்றன. கடந்த சில நாட்களாகவே நீர்ப் பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாத தால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும், நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத் துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற் றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. ஞாயிறன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 80.27 அடியாக உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வரு கிறது. காளிங்கராயன் பாசனத்திற்காக திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட் டுள்ளது. இதேபோல் கீழ்பவானி வாய்க் காலுக்கு 5 கன அடி என மொத்தம் பவானி சாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 205 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது.
குட்கா விற்பனை செய்தவர் கைது
கோவை, மே 1- கோவை குரும்பபாளை யம் பகுதியில் உள்ள ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வ தாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைய டுத்து அங்கு சோதனை நடத் தியபோது, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதைய டுத்து போலீசார் கடையில் பதுக்கி வைத்திருந்த 15 கிலோ 200 கிராம் குட்காவை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர் சம்பத்குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.