districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட குட்டி யானை

உதகை, ஏப்.18- சிங்காரா வனப்பகுதியில் உடல் அழு கிய நிலையில் இறந்து கிடந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், முதுமலை புலி கள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதி யான மசினகுடி, சிங்காரா, சீகூர் சரக வனப் பகுதியில் காட்டு யானைகள், புலிகள், சிறுத் தைகள், கரடிகள், அரிய வகையை சேர்ந்த கழுதை புலிகள், பிணந்தின்னி கழுகுகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், சிங் காரா வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பூக் குழி தடுப்பணை பகுதியில் உடல் அழு கிய நிலையில் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்ததை கண்டனர். இதுகுறித்து உடன டியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர், இறந்து கிடந்த குட்டி யானையின் உடலை ஆய்வு செய்தனர். இதன்பின் இறந்து கிடந்த யானையின் உடற்பாகங்களை வனத்துறையினர் சேகரித்து ஆய்வக பரி சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், மற்றொரு காட்டு யானை தாக்கியதால் குட்டியானை இறந்து இருக்கலாம். எனி னும், ஆய்வக பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே முழு விவரம் தெரிய வரும் என்றும், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தனர்.

உடுமலையில் மாநில அளவிலான களரிப்போட்டி

உடுமலை, ஏப்.18- உடுமலையில் தமிழ்நாடு களரிப்பட்டு அசோசி யேஷன் சார்பில், மாநில அளவிலான களரிப்போட்டி நடைபெற்றது.   தமிழ்நாடு களரிப்பட்டு அசோசியேஷன் சார்பில், மாநில அளவிலான களரிப் போட்டிகள் உடுமலை தேஜஸ் மகாலில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகம் முழு வதும் மாவட்ட அளவில் தேர்வான 100 வீரர்கள் கலந்து கொண்டனர். ஆண், பெண் என தனித்தனியாக ஜூனியர், சப் ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் வாள் சண்டை, களரிபயிட்டு உள்ளிட்ட எட்டு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்கள் தேசிய போட்டிக்கு தகுதி பெற்ற னர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டன. போட்டிகளை தமிழ்நாடு களரிபயட்டு அசோசியேசன் செயலாளர் வீரமணி, மடத்துக்குளம் வடிவேல் ஆகி யோர் ஒருங்கிணைத்தனர். விழாவில் பொள்ளாச்சி நாடா ளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங் கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

சேலத்தில் பலத்த மழை: இருளில் மூழ்கிய கிராமங்கள்

சேலம், ஏப்.18- சேலம் மாவட்டத்தில் இடி, மின்ன லுடன் கன மழை பெய்த நிலையில், பல இடங்களில் மின் விநியோகம் தடைபட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஞாயிறன்று இரவு 7 மணியளவில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை யின் காரணமாக 10க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையோரமிருந்த மரங் கள் முறிந்து விழுந்ததால் போக்குவ ரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக ஏற் காடு - நாகலூர் சாலையில் 2 மரங்கள், ஒண்டிக்கடை பகுதியில் 2 மரங்கள், பக்கோடா பாயிண்ட் செல்லும் வழி யில் 2 மரங்கள், கொம்மக்காடு கிரா மத்தில் ஒரு மரம், பட்டிப்பாடி கிராமத் தில் ஒரு மரம் என கனமழைக்கு மரங்கள் விழுந்ததால் அப்பகுதி களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், ஒரு சில இடங்களில் மின் கம்பிகள் மீதும், மின் கம்பங்கள் மீதும் மரக்கிளைகள் விழுந்ததால் ஏற்காடு மற்றும் சுற்றி யுள்ள கிராமங்களில் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கின. இதேபோல், தேவூர் சுற்றுவட்டார கிராமங்களில் இரவு இடி, மின்னலு டன் பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக் குள்ளாகினர். மேலும், விவசாய தோட்டங்களில் நூற்றுக்கும் மேற் பட்ட வாழை மரங்கள் ஆங்காங்கே சாய்ந்து சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதே போல்,  சேலம் நகரிலும் சிறிது நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் செவ்வாய்பேட்டை, அம்மாபேட்டை, புதிய மற்றும் பழைய பேருந்து நிலைய பகுதிகளில் சாலையெங்கும் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நடக்க இருப்பவை

ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்  நாள்: ஏப்.19 (செவ்வாய்க்கிழமை), நேரம்: மாலை 6 மணி, இடம்: காந்தி பார்க், கோவை. பங்கேற்பு:  பி.ஆர்.நடராஜன் (கோவை நாடாளுமன்ற உறுப்பினர்)  ஏற்பாடு:   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கோவை.  திருப்பூர் புத்தகத் திருவிழா திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா நாள்: ஏப்.19 (செவ்வாய்)  நேரம்: மாலை 6 மணி இடம்: கே.ஆர்.சி சிட்டி சென்டர் வளாகம். கிராந்திகுமார் பாடி (மாநகராட்சி ஆணையர், திருப்பூர்) பி.ரவி (துணை ஆணையர், மாநகர காவல்) கருத்துரை:  எழுத்தாளர் பவா செல்லதுரை.

திருப்பூர் மாவட்ட வருவாய் அலகில் அலுவலக உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு

திருப்பூர், ஏப்.18- திருப்பூர் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 24 அலுவலக உதவியா ளர் பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.  இந்த பணியிடங்கள் பொது -7, தாழ்த்தப் பட்டவர் -3, அருந்ததியர் -1, பழங்குடியினர் -1, மிகவும் பிற்படுத்தப்பட்டவர் -5, பிற்படுத் தப்பட்டவர் - 7 என ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. பொது பிரிவில் 18 முதல் 32 வயது, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட் டோர் பிரிவில் 18 முதல் 34, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடிகள் -18 முதல்  37 வயது, ஆதரவற்ற விதவை -18 முதல் 37 வயது வரையுள்ள, 8 ஆம் வகுப்பு தேர்ச்சி  பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.  முன்னாள் படைவீரர்களுக்கு 53 வயது  வரை, தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிக ளுக்கு 10 ஆண்டுகள் உச்ச வயது வரம்பு தளர்வு உள்ளது.  தகுதியானவர்கள், www. tiruppur.nic.in என்ற முகவரியில், படி வத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக் கலாம். கல்வி மற்றும் அனைத்து தகுதி சான்றிதழ் நகல்களுடன், சுய சான்றொப்ப மிட்டு அனுப்ப வேண்டும். மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை பெற அதற்கான சான்றிதழை இணைக்க  வேண்டும். விண்ணப்பதாரர், பட்டப்படிப் பில் தேர்ச்சி பெற்றிருந்தால்  இப்பணிக்கு  விண்ணப்பிக்க கூடாது. விண்ணப்பதாரர், இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும். தகுதியானவர் மே 15  ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப் பிக்கலாம். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் வருவாய்த்துறை (அ- பிரிவு) 224, இரண் டாவது தளம், மாவட்ட அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர் -641604 என்ற முகவ ரிக்கு விரைவு தபால் அல்லது பதிவு தபாலில் அனுப்பலாம் என மாவட்ட நிர்வாகம் அறி வித்துள்ளது.

விபத்தில் மாற்றுத்திறனாளி பலி

திருப்பூர், ஏப்.18-  பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் பழனிச்சாமி (61). மாற்றுத்திறனாளியான இவர் தனது இரு  சக்கர வாகனத்தில் பல்லடம் பேருந்து நிலையம் அருகே  உள்ள கடைக்கு வந்து விட்டு சாலையை கடக்க முயன்றுள் ளார்.  அப்போது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று இவரது இருசக்கர வாகனத் தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பழனிச் சாமியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம்  பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்க னவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த விபத்து குறித்து  பல்லடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீ தொண்டு நாள் வாரவிழா

உடுமலை, ஏப்.18-  தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறையின் சார்பில் தீ தொண்டு நாள் வாரவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி உடுமலை தீயணைப்பு நிலையம் சார்பில் தீ  விபத்துக்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரு கிறது. இதற்கான துண்டு பிரசுரம் வினியோகிக்கும் நிகழ்ச்சி உடுமலை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. தீய ணைப்பு நிலைய அலுவலர் கோபால் தலைமையில் தீய ணைப்பு படை வீரர்கள், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங் களை வழங்கினர். அந்த துண்டு பிரசுரத்தில் தீ விபத்தை  தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு வாச கங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு

திருப்பூர், ஏப்.18- வெள்ளக்கோவிலை அடுத்த வள்ளியிரச்சல் கணபதிபா ளையத்தில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக் கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கூட்டம் நடைபெற் றது. இக்கூட்டத்துக்கு கீழ்பவானி பாசன சங்க பொறுப்பாளர்  அரச்சலூர் செ.நல்லசாமி தலைமை வகித்தார். இதில் வள்ளி யிரச்சல், வடுகபாளையம், மேட்டாங்காட்டுவலசு, குழலிபா ளையம், மேட்டுக்கடை, ராசாத்தாவலசு பகுதிகளை சேர்ந்த  50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.  கூட்டத்தில் கீழ்பவானி பராமரிப்பு பணிகளுக்காக அரசு  நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கீழ்பவானி வாய்க்கால், கிளை  வாய்க்கால்களுக்கு கான்கிரீட் தளம், கான்கிரீட் சுவர் அமைக்கக் கூடாது. நிலத்தடி நீர்மட்டம், குடிநீர் பயன்பாடு, சுற்றுச்சூழல் இவற்றை கருத்தில் கொண்டு ஏற்கனவே இருக் கும் மண் வாய்க்கால்களை அப்படியே விட வேண்டும் என  வலியுறுத்தப்பட்டது.

\ரயிலில் அடிபட்டு இளைஞர் பலி

திருப்பூர், ஏப்.18- திருப்பூர் ரயில் நிலையம் அருகே சுமார் 25 வயது மதிக் கத்தக்க வடமாநில தொழிலாளி ஒருவர் ரயில் நிலையம்  அருகே தண்டவாளத்தில் இறந்து கிடப்பது தெரியவந்தது. இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் திங்களன்று காலை தண்டவாளத்தை கடக்க முயன்றபோது திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற  ரயிலில் அடிபட்டது தெரியவந்தது. இது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிகாரிகள் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தர்ணா

கோவை, ஏப்.18-  இலவச பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்க அதிகாரி கள் அலைக்கழிப்பதாக கூறி, மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த டெய்லரிங் ஆசி ரியராக உள்ள தேன்மொழி என்ற மாற்றுத்திறனாளி முதல மைச்சரின் பசுமை வீடு திட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விண்ணப்பம் செய்துள்ளார். இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து 5 முறை மனு அளித் தும், அதிகாரிகள் எவ்வித உரிய நடவடிக்கையும் எடுக்கா மல் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் தன்னை அதிகாரிகள் அலைகளிக்கப்பதாக கூறி திங்களன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமர்ந்து தேன்மொழி கண்ணீர் மல்க தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அங்கு வந்த மாற்று திறனாளி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தி, வீடு பெற்று தருவதாக உறுதிய ளித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர். அவரிடம் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வீடு  ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதிய ளித்தார்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு  அதிமுக பிரமுகரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

கோவை, ஏப்.18- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ் டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு காவலாளி ஓம் பக தூர் என்பவர் கொலை செய்யப்பட்டு, சில பொருட்கள் திருடப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சயான் உள்ளிட்ட  10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு  தொடர்பாக கடந்த ஆகஸ்ட் முதல் மறு விசாரணை நடை பெற்று வருகிறது. இதற்காக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதி முக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டியிடம் போலீசார் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இத னைத்தொடர்ந்து  அதிமுக அம்மா பேரவை கோவை மாவட்ட இணைச்செயலாளர் அனுபவ் ரவியிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார் திங்களன்று விசா ரணை மேற்கொண்டனர்.  கொடநாடு கொலை கொலை  வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் இறுதியாக அனுபவ் ரவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அதன் அடிப்படையிலேயே இவரிடம் விசாரணை நடத்தப் பட்டதாக கூறப்படுகிறது.ஏற்கனவே அனுபவ் ரவி தன்னிடம் விசாரணை மேற்கொள்ள கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் தார். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.