கிராமச்சாலையில் நடந்து சென்ற கரடி
உதகை, செப். 16- கோத்தகிரி அருகே கேசலாடா கிராமத்திற்குள், சர்வ சாதாரணமாக சாலையில் நடந்து சென்ற கரடியால் குடி யிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள ஊருக்குள் சமீபகாலமாக கரடிகள் வருவது வழக்க மான ஒன்றாக மாறியுள்ளது. உணவு, தண்ணீர் தேடி குடி யிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலா வருகிறது. இந்நிலையில், கோத்தகிரியில் இருந்து கேசலாடா கிராம சாலையில் பகல் நேரத்தில் சாலையில் ஒய்யாரமாக நடந்துச் சென்ற ஒற்றைக் கரடியால் கிராம மக்கள் அச்சமடைந் தனர். நீண்ட நேரம் சாலையில் சுற்றி திரிந்த ஒற்றை கரடி அருகில் இருந்த தேயிலை தோட்டத்துக்குள் சென்றது. வனத்துறையினர் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலை களில் சுற்றித்திரியும் கரடிகள் கிராம மக்கள் யாரையாவது தாக்கும் முன் கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து வேறு பகுதியில் விட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
சினிமா கம்பெனி ஊழியருக்கு கொலை மிரட்டல்
கோவை, செப்.16- சினிமா கம்பெனி ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவை புதூரை சேர்ந்தவர் சூரி (35). இவர் சென்னை யில் சினிமா கம்பனியில் புரொடக்சன் பொருப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் குனியமுத்தூர் போலீசில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, சினிமா கம்பெனிக்கு சென்னையை சேர்ந்த சின்னசங்கர் மற்றும் சாகர் என்பவர் களிடம் இருந்து ரூ.17 லட்சம் மதிப்பில் கேமரா லென்ஸ் ஒன்று வாங்கினோம். அதற்குண்டான பணத்தையும் கொடுத்து விட்டோன். கடந்த ஆக.26 தேதியன்று சென்னையில் பட பிடிப்பில் இருந்த போது கேமரா லென்ஸ்சை சிலர் அடியாட்களுடன் வந்து எடுத்து சென்று விட்டார்கள். இது குறித்து சென்னையில் வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது. ஆனால், சாகர் மற்றும் சின்ன சங்கர் இருவரும் எனக்கு போன் செய்து மீண்டும் பணம் கேட்கின்றனர். தரவில்லை யென்றால் உன்னை கடத்தி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டுகின்றனர். தற்போது இரு படங்களின் ஷூட்டிங் நடந்து கொண்டு இருக்கிறது. நான் சொந்த வேலை விஷயமாக தற்போது கோவைக்கு வந்து விட்டேன். ஆனால், இருவரும் தொடர்ந்து போனை போட்டு எனக்கு கொலை மிரட்டல் விடுக் கின்றனர். இது குறித்து விசாரணை நடத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குனியமுத்தூர் போலீசார் சாகர், சின்ன சங்கர் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
இலவச மருத்துவ முகாம் அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்
ஈரோடு, செப்.16- ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இலவச மருத்துவ முகா மினை தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம், சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட, தனியார் திருமண மண்டபத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமினை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்.எஸ்.ஆர்.எஸ் செல்வம், சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி, ரோட்டரி ஈரோடு சென்ட்ரல் சங்க நிர்வாகிகள், ரோட்டரி இதயம் காப்போம் டிரஸ்ட் நிர்வாகிகள் உள்ளிட்ட தன்னார் வலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவ லர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.