districts

img

ரேஷன் கடை மூலமாக தேங்காய் எண்ணெய் வழங்குக

திருப்பூர், ஜூன் 4 – தமிழகத்தில் ரேசன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் வழங்க தமிழக அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப் பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க  அமைப்புக் கூட்டம் கோரிக்கை விடுத்துள் ள்ளது. தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங் கத்தின் திருப்பூர் மாவட்ட அமைப்பு பேரவை சனியன்று உடுமலைபேட்டை ஸ்டாலின் நிலையத்தில் விவசாயிகள் சங்க  மாவட்டத் துணைத் தலைவர் ஏ.ராஜகோ பால் தலைமையில் நடைபெற்றது. பல்லடம் ஒன்றிய நிர்வாகி வை.பழனிசாமி வரவேற் றார். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் இப்பேரவையைத் தொடக்கி வைத்துப் பேசினார். சங்கத்தின்  மாவட்ட செயலாளர் ஆர்.குமார், தமிழ்நாடு  பால் உற்பத்தியாளர் சங்க ஒருங்கிணைப் பாளர் எஸ்.பரமசிவம் ஆகியோர் தீர்மானங் களை விளக்கிப் பேசினர்.  மாவட்ட நிர்வாகிகள் தேர்வு இந்த கூட்டத்தில் தென்னை விவசாயி கள் சங்க திருப்பூர் மாவட்டத் தலைவராக  எஸ்.பரமசிவம், செயலாளராக த.அருண் பிரகாஷ், பொருளாளராக அ.லெனின், துணைத் தலைவர்களாக குண்டடம் பெ. துரைசாமி, உடுமலை ஏ.ராஜகோபால், பல் லடம் வை.பழனிசாமி, துணைச் செயலா ளர்களாக குடிமங்கலம் ஜி.ஜெ. ஸ்ரீதர், உடு மலை கே.மாடலோகேஸ்வரன், காங்க யம் தேவராஜ், மாவட்ட கமிட்டி உறுப்பினர்க ளாக குடிமங்கலம் ஏ.தங்கவடிவேலன், அவினாசி எஸ்.வேலுச்சாமி, பொங்கலூர் கே.பாலசுப்ரமணியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானங்கள்

இந்த அமைப்புக் கூட்டத்தில் கொப் பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.140 கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். வேளாண் கூட்டுறவு சங்கம் மூலம் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும். தேங்காய் கிலோ ஒன் றுக்கு ரூ. 50 விலை நிர்ணயம் செய்ய வேண் டும். அரசே தேங்காய் கொள்முதல் செய்ய  வேண்டும். தென்னை விவசாயிகளைப் பாதுகாக் கும் பொருட்டு தேங்காய் மற்றும் கொப் பரை விலைகளை நிலைநிறுத்தும் வகை யில் ரேஷன் கடை மூலமாக தேங்காய் எண் ணெய் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழ கம் வழங்கும் தென்னை நுண்ணூட்ட மருந்து (தென்னை டானிக்) அனைத்து வட் டார வேளாண்மை விரிவாக்க மையம் மூல மாக முறையாக பதிவு செய்து வரிசைப் படி வழங்க வேண்டும். தென்னை வளர்ச்சி வாரியத்தை மீண் டும் கோவைக்கு மாற்ற வேண்டும். பேரிடர்  காலங்களில் நோய் தாக்குதலால் பாதிக் கப்படும் தென்னை மரங்களுக்கு நிவார ணம் வழங்க வேண்டும். அனைத்து தென்னை மரங்களுக்கும் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும். தென்னை நார் மற்றும் கழிவுநார் ஏற்றுமதிக்கு கன்டெயினர் வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வரவேற்புக்குழு

தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாட்டை வருகிற ஜூன் 30ஆம் தேதி உடுமலை வாணி மகாலில் நடத்துவது எனவும், அந்த மாநாட்டை நடத்த தலைவர் ஏ.ராஜகோபால், செய லாளர் ஏ.பாலதண்டபாணி, பொருளாளர் எஸ்.பரமசிவம் ஆகியோரை நிர்வாகிக ளைக் கொண்ட வரவேற்பு குழு அமைக்கப் பட்டது. நிறைவாக தமிழ்நாடு தென்னை விவசா யிகள் சங்க மாநில அமைப்பாளர் ஏ. விஜயமுருகன் இப்பேரவையை நிறைவு செய்து வைத்துப் பேசினார். முடிவில் குடி மங்கலம் ஸ்ரீதர் நன்றி கூறினார்.